திருப்புகழ் பாட ஆரம்பிக்கும் எவரும் முதலில்
தொடங்கி பாட ஆரம்பிக்கும் பாடல் ‘கைத்தல நிறை கனி’ என்ற்ய் ஆரம்பிக்கும் விநாயகர் துதி
ஆகும்.
அற்றில்
வரும் ஒரு வரி
“முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே”
முத்தமிழ் அடைவினை - முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில்
- (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய - முதல் முதலில் எழுதிய.
முதல்வோனே - முதன்மையானவனே.
அங்க்கோர்வாட் சிற்பம் வியாச பகவானும் விநாயகரும் |
பாலி, இந்தோநிசியா சிற்பம் |
என்று
பொருள் கொள்வர். பாட்டின் முழு பொருளுக்கும் முதல் இடுகையை பார்க்கவும். https://thiruppugazhamirutham.blogspot.in/2012/08/1.html
அதில்
விநாயகனை ‘முதல்வோனே’ என்று சொல்வது நோக்கத் தக்கது
எதற்காக ‘முதல்வோனே’ என்கிறார்?
ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர்
அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால்
முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன்
விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து
முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை
தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்;
சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை) யானதால் (கணாத்யஷன்
- விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன்.
சொல்லிக்கொண்டே போகலாம்.
பாடல்கள் 301 லிருந்து பொருள் விளக்கம் காண