F

படிப்போர்

Showing posts with label அருள். Show all posts
Showing posts with label அருள். Show all posts

Friday, 30 December 2016

298.சிகர மருந்த

298
மாயாபுரி

                                            (ஹரித்துவாரம் எனப்படும்)

              தனன தனந்த தானன        தனதான

சிகர மருந்த வாழ்வது                  சிவஞானம்
     சிதறி யலைந்து போவது       செயலாசை
மகர நெருங்க வீழ்வது                   மகமாய
     மருவி நினைந்தி டாவருள்       புரிவாயே
அகர நெருங்கி னாமய                  முறவாகி
     அவச மொடுங்கை யாறொடு முனமேகிக்
ககன மிசைந்த சூரியர்                 புகமாயை
     கருணை பொழிந்து மேவிய   பெருமாளே

பதம் பிரித்தல்

சிகரம் அருந்த வாழ்வது சிவ ஞானம்
சிதறி அலைந்து போவது செயல் ஆசை

சிகரம் - (சிவாய நம என்னும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள) சி என்னும் மதுவை அருந்த - குடிப்பதால் (உச்சரிப்பதனால) வாழ்வது -
உண்டாவது சிவ ஞானம் - சிவ ஞானமாகும்

சிதறி அலைந்து போவது - (அத்தகைய உச்சரிப்பால்) சிதறுண்டு அழிந்து போவன செயல் - (மனம், வாக்கு, காயம் இவைகளின்) செயலும் ஆசை - ஆசைகளும் ஆகும்

மகர நெருங்க வீழ்வது மக மாய(ம்)
மருவி நினைந்திடா அருள் புரிவாயே
மகர நெருங்க - (இறுதியில் உள்ள) ம என்னும் எழுத்து நெருங்குவதால் வீழ்வது - தொலைந்து போவது மக மாயம் - பெரிய மாயையாகும் மருவி - (உன்னைத்) தியானித்து நினைந்திடா - நினைப்பு, மறப்பு அற்ற நிலையை அருள் புரிவாயே - அருள் புரிவாயாக


அகர(ம்) நெருங்கின் ஆமயம் உறவாகி
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி


அகர(ம்) நெருங்கின் - (மகேந்திரபுரியின்) வீதிகளில் நெருங்கி வந்தால் ஆமயம் உறவாகி - நோய்க்கு (வருத்தத்துக்கு) இடம் பெற்று அவசமொடும் - மயக்கத்துடனும் கையாறொடும் - தன் செயல் அற்றும்
முனம் - சூரனுடைய ஆட்சிக் காலத்தில் ஏகி - சென்று

ககனம் இசைந்த சூரியர் புக மாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே

ககனம் இசைந்த - விண்ணில் பொருந்தியிருந்த சூரியர் - பன்னிரு ஆதித்தர்களும் புக - உன்னிடத்தில் சரண் புக மாயை - மாயா புரியில் வீற்றிருக்கும் (பெருமாளே) கருணை பொழிந்து மேவிய பெருமாளே - (அவர்களுக்குக்) கருணை புரிந்து வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

பஞ்சாக்ஷரத்தில் உள்ள சிகரம் என்பதை உச்சரித்தால் சிவ ஞானம்
உண்டாகும், மனம், வாக்கு காயம் இவைகளின்செயலும், மூவாசைகளும் அழிந்து சிதறுண்டு போகும் இறுதியில் உள்ள மகரத்துக்கு நெருங்குவதால் பெரிய மாயையும் தொலைந்து போகும் ஐந்தெழுத்தை ஓதி, உன்னைத் தியானித்து, நினைப்பு, மறப்பு அற்ற நிலையை அடைய அருள் புரிவாயாக

சூரனுடைய மகேந்திர புரியை நெருங்கினால், சூரனுடைய கொடிய ஆட்சியில் மக்கள் பட்ட துன்பத்தையும், பின்னர் முருக வேளைச் சரண் புகுந்ததால் சூரன் அழிந்து மக்கள் நன்மை அடைந்ததையும் உணரலாம் அனைவருக்கும் கருணை செய்து மாயா புரியில் வீற்றிருக்கும் பெருமாளே உன்னை நான் நினைந்திட அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

1 சிகரம் அருந்த வாழ்வது
புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்
புகழ்ச்சிய முதத்தின்   புலவோனே........             திருப்புகழ் -கரிக்குழல்

2 மாயை மாயா புரி என்னும் தலம் சூரனது ஆட்சியில் சூரியர்கள் பட்ட துன்பத்தையும் பின்னர் முருக வேளால் அடைந்த சுகத்தையும் விளக்குகின்றன
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப்
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
நிறுத்திய சிகரியூடு நெறிக்கொடு புக்கு வான்போய்
எறித்தனை திரிதி நாளும் இளங் கதிர் நடாத்தி என்றான் -  கந்த புராணம்


” tag:
298
மாயாபுரி

                                            (ஹரித்துவாரம் எனப்படும்)

              தனன தனந்த தானன        தனதான

சிகர மருந்த வாழ்வது                  சிவஞானம்
     சிதறி யலைந்து போவது       செயலாசை
மகர நெருங்க வீழ்வது                   மகமாய
     மருவி நினைந்தி டாவருள்       புரிவாயே
அகர நெருங்கி னாமய                  முறவாகி
     அவச மொடுங்கை யாறொடு முனமேகிக்
ககன மிசைந்த சூரியர்                 புகமாயை
     கருணை பொழிந்து மேவிய   பெருமாளே

பதம் பிரித்தல்

சிகரம் அருந்த வாழ்வது சிவ ஞானம்
சிதறி அலைந்து போவது செயல் ஆசை

சிகரம் - (சிவாய நம என்னும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள) சி என்னும் மதுவை அருந்த - குடிப்பதால் (உச்சரிப்பதனால) வாழ்வது -
உண்டாவது சிவ ஞானம் - சிவ ஞானமாகும்

சிதறி அலைந்து போவது - (அத்தகைய உச்சரிப்பால்) சிதறுண்டு அழிந்து போவன செயல் - (மனம், வாக்கு, காயம் இவைகளின்) செயலும் ஆசை - ஆசைகளும் ஆகும்

மகர நெருங்க வீழ்வது மக மாய(ம்)
மருவி நினைந்திடா அருள் புரிவாயே
மகர நெருங்க - (இறுதியில் உள்ள) ம என்னும் எழுத்து நெருங்குவதால் வீழ்வது - தொலைந்து போவது மக மாயம் - பெரிய மாயையாகும் மருவி - (உன்னைத்) தியானித்து நினைந்திடா - நினைப்பு, மறப்பு அற்ற நிலையை அருள் புரிவாயே - அருள் புரிவாயாக


அகர(ம்) நெருங்கின் ஆமயம் உறவாகி
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி


அகர(ம்) நெருங்கின் - (மகேந்திரபுரியின்) வீதிகளில் நெருங்கி வந்தால் ஆமயம் உறவாகி - நோய்க்கு (வருத்தத்துக்கு) இடம் பெற்று அவசமொடும் - மயக்கத்துடனும் கையாறொடும் - தன் செயல் அற்றும்
முனம் - சூரனுடைய ஆட்சிக் காலத்தில் ஏகி - சென்று

ககனம் இசைந்த சூரியர் புக மாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே

ககனம் இசைந்த - விண்ணில் பொருந்தியிருந்த சூரியர் - பன்னிரு ஆதித்தர்களும் புக - உன்னிடத்தில் சரண் புக மாயை - மாயா புரியில் வீற்றிருக்கும் (பெருமாளே) கருணை பொழிந்து மேவிய பெருமாளே - (அவர்களுக்குக்) கருணை புரிந்து வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

பஞ்சாக்ஷரத்தில் உள்ள சிகரம் என்பதை உச்சரித்தால் சிவ ஞானம்
உண்டாகும், மனம், வாக்கு காயம் இவைகளின்செயலும், மூவாசைகளும் அழிந்து சிதறுண்டு போகும் இறுதியில் உள்ள மகரத்துக்கு நெருங்குவதால் பெரிய மாயையும் தொலைந்து போகும் ஐந்தெழுத்தை ஓதி, உன்னைத் தியானித்து, நினைப்பு, மறப்பு அற்ற நிலையை அடைய அருள் புரிவாயாக

சூரனுடைய மகேந்திர புரியை நெருங்கினால், சூரனுடைய கொடிய ஆட்சியில் மக்கள் பட்ட துன்பத்தையும், பின்னர் முருக வேளைச் சரண் புகுந்ததால் சூரன் அழிந்து மக்கள் நன்மை அடைந்ததையும் உணரலாம் அனைவருக்கும் கருணை செய்து மாயா புரியில் வீற்றிருக்கும் பெருமாளே உன்னை நான் நினைந்திட அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

1 சிகரம் அருந்த வாழ்வது
புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்
புகழ்ச்சிய முதத்தின்   புலவோனே........             திருப்புகழ் -கரிக்குழல்

2 மாயை மாயா புரி என்னும் தலம் சூரனது ஆட்சியில் சூரியர்கள் பட்ட துன்பத்தையும் பின்னர் முருக வேளால் அடைந்த சுகத்தையும் விளக்குகின்றன
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப்
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
நிறுத்திய சிகரியூடு நெறிக்கொடு புக்கு வான்போய்
எறித்தனை திரிதி நாளும் இளங் கதிர் நடாத்தி என்றான் -  கந்த புராணம்


Wednesday, 14 December 2016

287. அஞ்சுவிதபூத

287
நிம்பபுரம்
பெல்லாரி ஹோஸ்பெட் மார்கத்தில் ஹம்பிக்கு அருகில் இருக்கும் நிம்மபுரா என்பதே நிம்பபுரம் வலையப்பட்டி கிருஷ்ணன்.
நிம்பபுரம் வேப்பூராக இருக்கலாம் - செங்கலவராயப்பிள்ளை
 
         தந்த தனதான தந்த தனதான
          தந்த தனதான      தனதான
 
    அஞ்சு விதபூத முங்க ரணநாலு
        மந்தி பகல்யாது                    மறியாத
     அந்த நடுவாதி யொன்று மிலதான
        அந்த வொருவீடு                பெறுமாறு
     மஞ்சு தவிழ்சார லஞ்ச யிலவேடர்
        மங்கை தனைநாடி                 வனமீது
     வந்த சரணார விந்த மதுபாட
        வண்ட மிழ்விநோத           மருள்வாயே
     குஞ்ச ரகலாப வஞ்சி யபிராம
        குங்கு மபடீர                      வதிரேகக்
     கும்ப தனமீது சென்ற ணையுமார்ப
        குன்று தடுமாற                 இகல்கோப
     வெஞ்ச மரசூர னெஞ்சு பகவீர
        வென்றி வடிவேலை         விடுவோனே
     விம்ப மதில்சூழ நிம்ப புரவாண
       விண்ட லமகீபர்              பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
அஞ்சு வித பூதமும் கரணம் நாலும்
அந்தி பகல் யாதும் அறியாத
அஞ்சு வித பூத - மண், நீர், தீ, காற்று, விண் எனப்படும் ஐந்து பூதங்களும் கரணம் நாலும் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்படும் நான்கு கரணங்களும் அந்த பகல் யாதும் அறியாத - இரவு பகல் யாதும் அறியாத

அந்த நடு ஆதி ஒன்றும் இலதான
அந்த ஒரு வீடு பெறுமாறு

அந்தம் நடு ஆதி ஒன்றும் இலதான - முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒரு - அந்த ஒப்பற்ற
வீடு பெறுமாறு - வீட்டின்பத்தைப் பெறுமாறு

மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தானை நாடி வனம் மீது

மஞ்சு தவழ் - மேகஙகள் தவழ்கின்றதும் சாரல் அம் சயில வேடர்- குளிர்ந்த காற்று வீசுவதும் ஆன அழகிய மலையில் வாழும் வேடர்களின் மங்கை தனை நாடி - பெண்ணாகிய வள்ளியை விரும்பி
வனம் மீது - (வள்ளி மலைக்) காட்டில்

வந்து சரணார விந்தம் அது பாட
வண் தமிழ் விநோதம் அருள்வாயே

வந்து சரணாரவிந்தம் அது பாட - வந்து சேர்ந்த (உனது) திருவடித் தாமரைகளைப் பாடவண் தமிழ் விநோதம் - (அடியேனுக்கு) வண்மை மிக்கத் தமிழின் அற்புத அழகை அருள்வாயே - அருள்வாயாக.

குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம
குங்கும படீர அதிரேக

குஞ்சரம் - யானை வளர்த்தவளும்கலாபம் - மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய வஞ்சி - பெண்ணான (தேவசேனையின்) அபிராம குங்கும - அழகிய செவ்வைச் சாந்தும். படீரம் - சந்தனமும் அதிரேகம் - மிகுதியாகக் கொண்டுள்ள

கும்ப தன(ம்) மீது சென்று அணையும் மார்ப
குன்று தடுமாற இகல் கோப

கும்ப தனம் மீது - குடம் போன்ற கொங்கையின் மேல் சென்று அணையும் மார்ப - பாய்ந்து அணைகின்ற மார்பனே குன்று தடுமாற - கிரௌவஞ்ச மலை தடுமாற்றம் அடையும்படி இகல் கோப - பகைமையும் கோபமும் கொண்டு.

வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர
வென்றி வடிவேலை விடுவோனே

வெம் - கொடிய. சமர சூரன் - போர் செய்த சூரனுடைய நெஞ்சு பக - நெஞ்சு பிளவுபட வீர வென்றி வடி வேலை - வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலை
விடுவோனே - செலுத்தியவனே

விம்ப மதில் சூழ நிம்பபுர வாண
விண்டல மகீபர் பெருமாளே.
 

விம்ப - ஒளி பெருந்திய மதில் சூழ - மதில் சூழ்ந்துள்ள நிம்பபுர வாண - நிம்பபுரம் என்னும் ஊரில் வாழ்கின்ற பெருமாளே விண் தலம் மகீபர் பெருமாளே - விண்ணுலகத்து அரசர்களுக்குப் பெருமாளே.
 
சுருக்க உரை
 
ஐந்து பூதங்களும், நான்கு கரணங்களும், இரவு பகல் யாதும், ஆதி, நடு, முதல் ஆகியவையும் இல்லாததுமான அந்த ஒப்ற்ற வீடு பேற்றை நான் பெறுமாறு, வேடர் பெண்ணான வள்ளியை விரும்பி வள்ளி மலைக் காட்டுக்கு வந்த உன் திருவடிகளைப் பாட வண் தமிழை எனக்குத் தந்தருள்க.
 
யானையால் வளர்க்கப்பட்டவளும், மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய தேவ சேனையை அணைபவனே, கிரௌவஞ்ச மலை தடுமாறவும், சூரனுடைய நெஞ்சு பிளவுபடவும் கோபத்தோடு வேலைச் செலுத்தியவனே, நிம்பபுர்தில் வாழ்பவனே, தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. நான் வீடு பேறு அடையுமாறு வண் தமிழ்ப் புலமையை அருள்வாயாக.
 
விளக்கக் குறிப்புகள்
 
கரணம் நாலும் .....

சித்தம் - இஃது யாதாக இருக்கும் என்று சிந்திக்கும். மனம் - இஃது இன்னது என்று பற்றும். அகங்காரம் - இஃது ஆமோ அன்றோ, இதனை இன்னதெனத் தெளிவேன் நான் என்று தெளிவின்றி உழலும். புத்தி - இறுதியில் புத்தி இஃது இன்னது எனத் தெளிவுறும்.    சிந்தித்தாய்ச் சித்தம்.. --- சிவஞான போதம் சூத்திரம் 4.

அந்தி பகல் யாதும் அறியாத....

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு அருளாயோ---
                                                                திருப்புகழ், மலைமுலைச்சியர்
 
 



” tag:
287
நிம்பபுரம்
பெல்லாரி ஹோஸ்பெட் மார்கத்தில் ஹம்பிக்கு அருகில் இருக்கும் நிம்மபுரா என்பதே நிம்பபுரம் வலையப்பட்டி கிருஷ்ணன்.
நிம்பபுரம் வேப்பூராக இருக்கலாம் - செங்கலவராயப்பிள்ளை
 
         தந்த தனதான தந்த தனதான
          தந்த தனதான      தனதான
 
    அஞ்சு விதபூத முங்க ரணநாலு
        மந்தி பகல்யாது                    மறியாத
     அந்த நடுவாதி யொன்று மிலதான
        அந்த வொருவீடு                பெறுமாறு
     மஞ்சு தவிழ்சார லஞ்ச யிலவேடர்
        மங்கை தனைநாடி                 வனமீது
     வந்த சரணார விந்த மதுபாட
        வண்ட மிழ்விநோத           மருள்வாயே
     குஞ்ச ரகலாப வஞ்சி யபிராம
        குங்கு மபடீர                      வதிரேகக்
     கும்ப தனமீது சென்ற ணையுமார்ப
        குன்று தடுமாற                 இகல்கோப
     வெஞ்ச மரசூர னெஞ்சு பகவீர
        வென்றி வடிவேலை         விடுவோனே
     விம்ப மதில்சூழ நிம்ப புரவாண
       விண்ட லமகீபர்              பெருமாளே.
 
பதம் பிரித்தல்
 
அஞ்சு வித பூதமும் கரணம் நாலும்
அந்தி பகல் யாதும் அறியாத
அஞ்சு வித பூத - மண், நீர், தீ, காற்று, விண் எனப்படும் ஐந்து பூதங்களும் கரணம் நாலும் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்படும் நான்கு கரணங்களும் அந்த பகல் யாதும் அறியாத - இரவு பகல் யாதும் அறியாத

அந்த நடு ஆதி ஒன்றும் இலதான
அந்த ஒரு வீடு பெறுமாறு

அந்தம் நடு ஆதி ஒன்றும் இலதான - முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததான அந்த ஒரு - அந்த ஒப்பற்ற
வீடு பெறுமாறு - வீட்டின்பத்தைப் பெறுமாறு

மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தானை நாடி வனம் மீது

மஞ்சு தவழ் - மேகஙகள் தவழ்கின்றதும் சாரல் அம் சயில வேடர்- குளிர்ந்த காற்று வீசுவதும் ஆன அழகிய மலையில் வாழும் வேடர்களின் மங்கை தனை நாடி - பெண்ணாகிய வள்ளியை விரும்பி
வனம் மீது - (வள்ளி மலைக்) காட்டில்

வந்து சரணார விந்தம் அது பாட
வண் தமிழ் விநோதம் அருள்வாயே

வந்து சரணாரவிந்தம் அது பாட - வந்து சேர்ந்த (உனது) திருவடித் தாமரைகளைப் பாடவண் தமிழ் விநோதம் - (அடியேனுக்கு) வண்மை மிக்கத் தமிழின் அற்புத அழகை அருள்வாயே - அருள்வாயாக.

குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம
குங்கும படீர அதிரேக

குஞ்சரம் - யானை வளர்த்தவளும்கலாபம் - மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய வஞ்சி - பெண்ணான (தேவசேனையின்) அபிராம குங்கும - அழகிய செவ்வைச் சாந்தும். படீரம் - சந்தனமும் அதிரேகம் - மிகுதியாகக் கொண்டுள்ள

கும்ப தன(ம்) மீது சென்று அணையும் மார்ப
குன்று தடுமாற இகல் கோப

கும்ப தனம் மீது - குடம் போன்ற கொங்கையின் மேல் சென்று அணையும் மார்ப - பாய்ந்து அணைகின்ற மார்பனே குன்று தடுமாற - கிரௌவஞ்ச மலை தடுமாற்றம் அடையும்படி இகல் கோப - பகைமையும் கோபமும் கொண்டு.

வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர
வென்றி வடிவேலை விடுவோனே

வெம் - கொடிய. சமர சூரன் - போர் செய்த சூரனுடைய நெஞ்சு பக - நெஞ்சு பிளவுபட வீர வென்றி வடி வேலை - வீரம் வாய்ந்த வெற்றி தரும் கூரிய வேலை
விடுவோனே - செலுத்தியவனே

விம்ப மதில் சூழ நிம்பபுர வாண
விண்டல மகீபர் பெருமாளே.
 

விம்ப - ஒளி பெருந்திய மதில் சூழ - மதில் சூழ்ந்துள்ள நிம்பபுர வாண - நிம்பபுரம் என்னும் ஊரில் வாழ்கின்ற பெருமாளே விண் தலம் மகீபர் பெருமாளே - விண்ணுலகத்து அரசர்களுக்குப் பெருமாளே.
 
சுருக்க உரை
 
ஐந்து பூதங்களும், நான்கு கரணங்களும், இரவு பகல் யாதும், ஆதி, நடு, முதல் ஆகியவையும் இல்லாததுமான அந்த ஒப்ற்ற வீடு பேற்றை நான் பெறுமாறு, வேடர் பெண்ணான வள்ளியை விரும்பி வள்ளி மலைக் காட்டுக்கு வந்த உன் திருவடிகளைப் பாட வண் தமிழை எனக்குத் தந்தருள்க.
 
யானையால் வளர்க்கப்பட்டவளும், மயில் போன்ற சாயல் உடையவளும் ஆகிய தேவ சேனையை அணைபவனே, கிரௌவஞ்ச மலை தடுமாறவும், சூரனுடைய நெஞ்சு பிளவுபடவும் கோபத்தோடு வேலைச் செலுத்தியவனே, நிம்பபுர்தில் வாழ்பவனே, தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. நான் வீடு பேறு அடையுமாறு வண் தமிழ்ப் புலமையை அருள்வாயாக.
 
விளக்கக் குறிப்புகள்
 
கரணம் நாலும் .....

சித்தம் - இஃது யாதாக இருக்கும் என்று சிந்திக்கும். மனம் - இஃது இன்னது என்று பற்றும். அகங்காரம் - இஃது ஆமோ அன்றோ, இதனை இன்னதெனத் தெளிவேன் நான் என்று தெளிவின்றி உழலும். புத்தி - இறுதியில் புத்தி இஃது இன்னது எனத் தெளிவுறும்.    சிந்தித்தாய்ச் சித்தம்.. --- சிவஞான போதம் சூத்திரம் 4.

அந்தி பகல் யாதும் அறியாத....

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு அருளாயோ---
                                                                திருப்புகழ், மலைமுலைச்சியர்
 
 



Tuesday, 26 May 2015

272. பழியுறு

272
திருவிடைக்கழி

உன கமல பதம் நாடி உருகி உள்ளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே என்பது பிரார்த்தனை
      

தனதனனத் தனதான தனதனனத் தனதான
       தனதனனத் தனதான              தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
   பகரும்வினைச் செயல்மாதர்               தருமாயப்
படுகுழிபுக் கினிதோறும் வழிதடவித் தெரியாது
   பழமைபிதற் றிடுலோக                     முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
   யொருபயனைத் தெளியாது             விளியாமுன்
உனகமலப் பதனாடி யுருகியுளத் தமுதூற
   உனதுதிருப் புகழோத                   அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
   திடுதிடெனப் பலபூதர்                       விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
   ஜெயஜெயெனக் கொதிவேலை          விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
   அடல்தருகெற் சிதநீல                      மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
   அதிபஇடைக் கழிமேவு                   பெருமாளே


பதம் பிரித்து உரை

பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான
பகரும் வினை செயல் மாதர் தரும் மாய

பழி உறு - பாவம், குற்றம் இவைகளுக்கு இடமான சட்டகமான - உடலாகிய குடிலை எடுத்து - குடிசையை எடுத்து இழிவான பகரும் - இழிவான சொற்களைச் சொல்லும் வினை - வினையைப் பெருக்கும் செயல் மாதர் - தொழிலைச் செய்யும் விலை மாதர்கள் தரும் - கொடுக்கின்ற மாய - மாயமான

படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது
பழமை பிதற்றிடு(ம்) லோக முழு மூடர்

படு குழி - படு குழியில் புக்கு - விழுந்து இனிதேறும் - நல்லபடியாகக் கரை ஏறும் வழி தடவி - வழி உண்டா எனத் தடவிப் பார்த்தும் தெரியாது - தெரியாமல் பழமை - பழங் கொள்கைகளையே பிதற்றிடு - பிதற்றுகின்ற லோக முழு மூடர் - உலகில் உள்ள முழு மூடர்கள்

உழலும் விருப்புடன் ஓது(ம்) பல சவலை கலை தேடி
ஒரு பயனை தெளியாது விளியா முன்

உழலும் - திரிந்து விருப்புடன் - ஆசையுடன் ஓதும் - ஓதுகின்ற பல சவலை - பல விதமான மனக் குழப்பத்தைத் தரும் கலை தேடி - நூல்களைத் தேடி ஒரு பயனை - ஒரு பயனையும் தெளியாது - தெரிந்து கொள்ள முடியாமல் விளியா முன் - இறந்து போவதற்கு முன்பாக

உன கமல பத(ம்) நாடி உருகி உ(ள்)ளத்து அமுது ஊற
உனது திருப்புகழ் ஓத அருள்வாயே

உன - உனது கமல பதம் நாடி - தாமரை போன்ற திருவடிகளை விரும்பி உருகி - மனம் உருகி உ(ள்)ளத்து அமுது ஊறி - உள்ளத்தில் அமுத ரசம் ஊற உனது - உன்னுடைய திருப்புகழ் ஓத - திருப் புகழை ஓதுவதற்கு அருள்வாயே - அருள்வாயாக

தெழி உவரி சலராசி மொகு மொகு என பெரு மேரு
திடு திடு என பல பூதர் விதமாக

தெழி - முழங்குகின்ற உவரி - உப்பு நீரைக் கொண்ட சலராசி - கடல் மொகு மொகு என - மொகு மொகு என்று கொந்தளிக்கவும் பெரு மேரு - பெரிய மேரு மலை திடு திடு என - திடு திடு என்று இடி பட்டு பொடியாகவும் பல பூதர் - பல விதமான பூத கணங்கள் விதமாக - விதம் விதமாக

திமி திமி என பொரு சூரன் நெறு நெறு என பல தேவர்
ஜெய ஜெய என கொதி வேலை விடுவோனே

திமி திமி என - திமி திமி எனக் களிப்புறவும் பொரு சூரன் - சண்டை செய்த சூரனாகிய (மாமரம்) நெறு நெறு என - நெறு நெறு என்று முறியவும் பல தேவர் - (இதைக் கண்ட) பல தேவர்களும் ஜெய ஜெய என - ஜெய ஜெய என்று போற்றவும் கொதி - கோபம் எழும் வேலை விடுவோனே - வேலாயுதத்தைச் செலுத்தியவனே

அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல
அடல் தரு கெற்சித நீல மயில் வீரா

அழகு தரித்திடு - அழகு கொண்டுள்ள நீப - கடப்ப மாலை அணிந்தவனே சரவண உற்பவ - சரவணப் படுகையில் உற்பவித்தவனே வேல - வேலனே அடல் தரு - வெற்றியைத் தருவதும் கெற்சித - முழங்கி ஒலிப்பதும் ஆன நீல மயில் வீரா - நீல மயில் வீரனே

அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை
அதிப இடைக்கழி மேவும் பெருமாளே


அருணை - திருவண்ணா மலை திருத்தணி - திருத்தணிகை நாக மலை - திருச்செங்கோடு பழனிப் பதி - பழனி நகர் கோடை - வல்லக் கோட்டை அதிப - (இத்தலங்களில் வாழும்) தலைவனே இடைக் கழி மேவும் பெருமாளே - திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே

திருஇடைகழி முருகன்
சுருக்க உரை

பாவங்களுக்குத் தக்க இடமான இந்தக் குடிலையாகிய உடலை எடுத்து, இழிவான சொற்களைச் சொல்லும் வினையைப் பெருக்கும் செயல்களை உள்ள விலை மாதர்கள் தரும் மாயமானப் படு குழியில் விழாமல், ஈடேறும் நல்ல வழி உண்டோ என்று தேடிப் பார்த்தும் தெரியாமல், பழைய கொள்கைகளையே பிதற்றுகின்ற உலகில் உள்ள மூடர்கள், திரிந்து, மனக் குழப்பம் தரும் நூல்கைளையே ஓதி, ஒரு பயனும் காணாது, இறந்து போவதற்கு முன், உன்னுடைய தாமரைத் திருவடிகளை விரும்பி, உன் திருப்புகழை ஓதுதற்கு அருள் செய்வாயாக
                         
கடல் கொந்தளிக்கவும், பெரிய மேரு மலை இடிந்துப் பொடி படவும், பூத கணங்கள் களிப்புறவும், போருக்கு வந்த சூரனாகிய மாமரம் முறியவும், தேவர்கள் ஜெய ஜெய என்று போற்றவும், கோபமாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே கடப்ப மாலை அணிந்தவனே சரவணப் படுகையில் தோன்றியவனே வேலனே வெற்றியைத் தரும் மயிலின் மேல் வரும் வீரனே அருணை, தணிகை, செங்கோடு, பழனி, வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே திருவிடைக்கழியில் மேவும் பெருமாளே உனது திருப்புகழை நான் ஓத அருள் செய்வாயாக

ஒப்புக   உளத்து அமுதூற உனது திருப்புகழ் ஓத  -  மாணிக்ககவாசகர் சென்னிபத்து திருவாசக பாடல் வரிகள்
காயத்துள் அமுது ஊற ஊற நீ
கண்டுகொள் என்று காட்டிய


சட்டகம் - உடல்


                                                                                                 

திருஇடைகழி
” tag:
272
திருவிடைக்கழி

உன கமல பதம் நாடி உருகி உள்ளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே என்பது பிரார்த்தனை
      

தனதனனத் தனதான தனதனனத் தனதான
       தனதனனத் தனதான              தனதான

பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
   பகரும்வினைச் செயல்மாதர்               தருமாயப்
படுகுழிபுக் கினிதோறும் வழிதடவித் தெரியாது
   பழமைபிதற் றிடுலோக                     முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
   யொருபயனைத் தெளியாது             விளியாமுன்
உனகமலப் பதனாடி யுருகியுளத் தமுதூற
   உனதுதிருப் புகழோத                   அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
   திடுதிடெனப் பலபூதர்                       விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
   ஜெயஜெயெனக் கொதிவேலை          விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
   அடல்தருகெற் சிதநீல                      மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
   அதிபஇடைக் கழிமேவு                   பெருமாளே


பதம் பிரித்து உரை

பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான
பகரும் வினை செயல் மாதர் தரும் மாய

பழி உறு - பாவம், குற்றம் இவைகளுக்கு இடமான சட்டகமான - உடலாகிய குடிலை எடுத்து - குடிசையை எடுத்து இழிவான பகரும் - இழிவான சொற்களைச் சொல்லும் வினை - வினையைப் பெருக்கும் செயல் மாதர் - தொழிலைச் செய்யும் விலை மாதர்கள் தரும் - கொடுக்கின்ற மாய - மாயமான

படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது
பழமை பிதற்றிடு(ம்) லோக முழு மூடர்

படு குழி - படு குழியில் புக்கு - விழுந்து இனிதேறும் - நல்லபடியாகக் கரை ஏறும் வழி தடவி - வழி உண்டா எனத் தடவிப் பார்த்தும் தெரியாது - தெரியாமல் பழமை - பழங் கொள்கைகளையே பிதற்றிடு - பிதற்றுகின்ற லோக முழு மூடர் - உலகில் உள்ள முழு மூடர்கள்

உழலும் விருப்புடன் ஓது(ம்) பல சவலை கலை தேடி
ஒரு பயனை தெளியாது விளியா முன்

உழலும் - திரிந்து விருப்புடன் - ஆசையுடன் ஓதும் - ஓதுகின்ற பல சவலை - பல விதமான மனக் குழப்பத்தைத் தரும் கலை தேடி - நூல்களைத் தேடி ஒரு பயனை - ஒரு பயனையும் தெளியாது - தெரிந்து கொள்ள முடியாமல் விளியா முன் - இறந்து போவதற்கு முன்பாக

உன கமல பத(ம்) நாடி உருகி உ(ள்)ளத்து அமுது ஊற
உனது திருப்புகழ் ஓத அருள்வாயே

உன - உனது கமல பதம் நாடி - தாமரை போன்ற திருவடிகளை விரும்பி உருகி - மனம் உருகி உ(ள்)ளத்து அமுது ஊறி - உள்ளத்தில் அமுத ரசம் ஊற உனது - உன்னுடைய திருப்புகழ் ஓத - திருப் புகழை ஓதுவதற்கு அருள்வாயே - அருள்வாயாக

தெழி உவரி சலராசி மொகு மொகு என பெரு மேரு
திடு திடு என பல பூதர் விதமாக

தெழி - முழங்குகின்ற உவரி - உப்பு நீரைக் கொண்ட சலராசி - கடல் மொகு மொகு என - மொகு மொகு என்று கொந்தளிக்கவும் பெரு மேரு - பெரிய மேரு மலை திடு திடு என - திடு திடு என்று இடி பட்டு பொடியாகவும் பல பூதர் - பல விதமான பூத கணங்கள் விதமாக - விதம் விதமாக

திமி திமி என பொரு சூரன் நெறு நெறு என பல தேவர்
ஜெய ஜெய என கொதி வேலை விடுவோனே

திமி திமி என - திமி திமி எனக் களிப்புறவும் பொரு சூரன் - சண்டை செய்த சூரனாகிய (மாமரம்) நெறு நெறு என - நெறு நெறு என்று முறியவும் பல தேவர் - (இதைக் கண்ட) பல தேவர்களும் ஜெய ஜெய என - ஜெய ஜெய என்று போற்றவும் கொதி - கோபம் எழும் வேலை விடுவோனே - வேலாயுதத்தைச் செலுத்தியவனே

அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல
அடல் தரு கெற்சித நீல மயில் வீரா

அழகு தரித்திடு - அழகு கொண்டுள்ள நீப - கடப்ப மாலை அணிந்தவனே சரவண உற்பவ - சரவணப் படுகையில் உற்பவித்தவனே வேல - வேலனே அடல் தரு - வெற்றியைத் தருவதும் கெற்சித - முழங்கி ஒலிப்பதும் ஆன நீல மயில் வீரா - நீல மயில் வீரனே

அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை
அதிப இடைக்கழி மேவும் பெருமாளே


அருணை - திருவண்ணா மலை திருத்தணி - திருத்தணிகை நாக மலை - திருச்செங்கோடு பழனிப் பதி - பழனி நகர் கோடை - வல்லக் கோட்டை அதிப - (இத்தலங்களில் வாழும்) தலைவனே இடைக் கழி மேவும் பெருமாளே - திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே

திருஇடைகழி முருகன்
சுருக்க உரை

பாவங்களுக்குத் தக்க இடமான இந்தக் குடிலையாகிய உடலை எடுத்து, இழிவான சொற்களைச் சொல்லும் வினையைப் பெருக்கும் செயல்களை உள்ள விலை மாதர்கள் தரும் மாயமானப் படு குழியில் விழாமல், ஈடேறும் நல்ல வழி உண்டோ என்று தேடிப் பார்த்தும் தெரியாமல், பழைய கொள்கைகளையே பிதற்றுகின்ற உலகில் உள்ள மூடர்கள், திரிந்து, மனக் குழப்பம் தரும் நூல்கைளையே ஓதி, ஒரு பயனும் காணாது, இறந்து போவதற்கு முன், உன்னுடைய தாமரைத் திருவடிகளை விரும்பி, உன் திருப்புகழை ஓதுதற்கு அருள் செய்வாயாக
                         
கடல் கொந்தளிக்கவும், பெரிய மேரு மலை இடிந்துப் பொடி படவும், பூத கணங்கள் களிப்புறவும், போருக்கு வந்த சூரனாகிய மாமரம் முறியவும், தேவர்கள் ஜெய ஜெய என்று போற்றவும், கோபமாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே கடப்ப மாலை அணிந்தவனே சரவணப் படுகையில் தோன்றியவனே வேலனே வெற்றியைத் தரும் மயிலின் மேல் வரும் வீரனே அருணை, தணிகை, செங்கோடு, பழனி, வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே திருவிடைக்கழியில் மேவும் பெருமாளே உனது திருப்புகழை நான் ஓத அருள் செய்வாயாக

ஒப்புக   உளத்து அமுதூற உனது திருப்புகழ் ஓத  -  மாணிக்ககவாசகர் சென்னிபத்து திருவாசக பாடல் வரிகள்
காயத்துள் அமுது ஊற ஊற நீ
கண்டுகொள் என்று காட்டிய


சட்டகம் - உடல்


                                                                                                 

திருஇடைகழி