F

படிப்போர்

Thursday 18 April 2013

211.சந்தனம் திமிர்ந்து


211
எண்கண்
(திருவாரூருக்கு அருகில் உள்ளது)


மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர்.  ஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள்தான் தாங்கியிருக்கிறது. கால்களில் புடைத்திருக்கும் நரம்புகள் அதை தெளிவாக்கிறது. இத்தனை அற்புதமும் சிறப்பும் வாய்ந்த மூன்று சிலைகளை ஒரே சிற்பி வடிவமைத்த காரணம் அ‘னேகமாக எல்லோரும் அறிந்ததே. எனினும் பலர் அறியாதது விஷயம் அவர் அமைத்த எல்லாவற்றிலும் மிகப் பெரியது பொறவாச்சேரியில் உள்ளது. (சிலர் சிக்கல் என்று தவறாகக் கருதுகின்றனர்) மற்ற இரண்டும் எட்டிக்குடியும் எண்கண்ணும் இருக்கும் சிலைகளாகும்

             தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த
             தந்தனந் தனந்த தந்த                           தனதான

சந்தனந் திமிர்ந்த ணைந்து குங்குமங் கடம்பி லங்கு
  சண்பகஞ் செறிந்தி லங்கு                              திரடோளுந்
தண்டையஞ் சிலம்ப லம்ப வெண்டையஞ் சலன்ச லென்று
  சஞ்சிதஞ் சதங்கை கொஞ்ச                             மயிலேறித்
திந்திமிந் திமிந்தி மிந்திதந் தனந்த னென்று
  சென்றசைந் துகந்து வந்து                         க்ருபையோடே
சிந்தையங் குலம்பு குந்து சந்ததம் புகழ்ந்து ணர்ந்து
  செம்பதம் பணிந்தி ரென்று                           மொழிவாயே
அந்தமந் திகொண்டி லங்கை வெந்தழிந் திடும்ப கண்டன்
  அங்கமுங் குலைந்த ரங்கொள்                         பொடியாக
அம்பகும் பனுங்க லங்க வெஞ்சினம் புரிந்து நின்று
  அம்புகொண் டுவென்ற கொண்டல்                  மருகோனே
இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையுஞ் சலம்பு னைந்தி
  டும்பரன் றனம்பில் வந்த                                  குமரேசா
இந்திரன் பதம்பெ றண்டர் தம்பயங் கடிந்து பின்பு
  எண்கணங் கமர்ந்தி ருந்த                              பெருமாளே

பதம் பிரித்தல்

சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு
சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும்

சந்தனம் திமிர்ந்து அணைந்து = சந்தனத்தை நிரம்பப் பூசிச் சேர்ந்து. குங்குமம் கடம்பு இலங்கு = குங்குமம், கடம்பு விளங்கும் சண்பகம் செறிந்து இலங்கு = சண்பகம் இவை நெருங்கி விளங்கும் திரள் தோளும் = திரண்ட தோள்களும் (விளங்க).

தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன் சல் என்று
சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி

தண்டை = தண்டைகளும் அம் = அழகிய. சிலம்பு அலம்ப = சிலம்பும் ஒலிக்க வெண்டையம் = வீரக் காலணி சலன்சல் என்று = சலன் சல் என்று ஒலிக்க சஞ்சு இதம் = உருவம் இனிதாக அமைந்துள்ள சதங்கை கொஞ்ச = கிண்கிணி கொஞ்சுவது போல ஒலிக்க மயில் ஏறி = மயிலின் மீது ஏறி.

திந்திமிந் திமிந்தி மிந்தி தந்தனந் தனந்தனந் என்று
சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே

திந்திமி......என்று = இத்தகைய ஒலிகளுடன் சென்று அசைந்து = மெல்ல அசைந்து உகந்து = மகிழ்ச்சியுடன் வந்து = வந்து.

சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து
செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே

க்ருபையுடனே = கிருபையுடன் சிந்தை அம் குலம் = (என்) மனமாகிய கோயிலில் புகந்து = புகுந்து. சந்ததம் = எப்போதும் புகழ்ந்து = புகழ்ந்து. உணர்ந்து = நன்கு அறிந்து செம் பதம் பணிந்து இரு என்று = செவ்விய பதங்களைப் பணிந்து இருப்பாயாக என்று மொழிவாயே = மொழிந்தருளுக.


அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன்
அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக

அந்த மந்தி கொண்டு = பேர் போன அந்தக் குரங்காகிய அனுமனைத் துணை கொண்டு இலங்கை வெந்து அழிந்து = இலங்கை வெந்து அழியவும் இடும்ப கண்டன் = கொடுஞ் செயலைக் கொண்ட வீரனாகிய இராவண னுடைய அங்கமும் குலைந்து = உடலும் அழிபட்டு அரம் கொள் பொடியாக = அரத்தினால் ராவினது போல் தூளாக.

அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே

அம்பு = அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட. கும்பனும் கலங்க = கும்பகர்ணனும் மனம் கலங்க. வெம் சினம் புரிந்து நின்று = கொடுங் கோபத்துடன் நின்று. அம்பு கொண்டு வென்ற = அம்பை ஏவி வெற்றி கொண்ட. கொண்டல் மருகோனே = மேக நிறம் கொண்ட திருமாலின். மருகோனே = மருகனே.

இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும்
பரன் தன் அன்பில் வந்த குமரேசா

இந்துவும் = பிற கரந்தை = திருநீற்றுப் பச்ச தும்பை கொன்றையும் = தும்பை, கொன்றையும் சலம் = கங்கையும் புனைந்திடும் = அணிந்திடும் பரன் தன் = சிவபெருமானுடை அன்பில் வந்த குமரேசா = அன்பால் தோன்றிய குமரேசா.

இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு
எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே.

இந்திரன் பதம் பெற = இந்திரன் தன் பதத்தைப் பெறுமாறு அண்டர் தம் பயம் கடிந்து = தேவர்களுடைய பயத்தைத் தவிர்த்த பின்பு = பின்னர எண்கண் அங்கு = எண்கண் என்னும் தலத்தில அமர்ந்திருந்த பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

சந்தனம், குங்குமம், கடம்பு இவை அணிந்த தோள்கள் விளங்க, சிலம்புகள் ஒலிக்க, சதங்கை கிண்கிணி கொஞ்சுவது போல ஒலி செய்ய, மயிலின் மீது ஏறி மகிழ்ச்சியுடன் வந்து உன் செவ்விய பதங்களைப் பணிந்து இருப்பாயாக என்று மொழிந்தருளுக.

அனுமனின் துணையால் இலங்கை வெந்து அழியவும், கொடிய வனாகிய இராவணனுடைய உடல் அழிந்து பொடியாகவும், கும்பகர்ணன் மனம் கலங்க அம்பைச் செலுத்தி வெற்றி கொண்ட திருமாலின் மருகனே. பிறை, திருநீறு, தும்பை, கொன்றை, கங்கை இவற்றை அணிந்த சிவபெருமானின் அன்பால் தோன்றிய குமரனே, இந்திரன் தன் பதவி திரும்பப் பெறவும், தேவர்கள் பயம் ஒழியவும் செய்து முடித்த பின்னர், எண்கண் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. செம்பதம் பணிந்திடுவாய் என்று மொழிந்து அருளுக.


குகஸ்ரீ ரசபதி விளக்கவிரை அமரர் நடராஜன் சொன்னவண்ணம்

வாள் பலம், தோள் பலம், வர பலம் இம்மூன்றும் இலங்கை மாநகரில் எங்கும்  இருந்தன. அந்த இறுமாப்பில் மதுவில் மயங்கி மாதரில் உயங்கும் மந்த மதியில் அரக்கர் மலிந்தனர். செல்வி ஜானகி அவர்கள் இட்ட சிறையில் வருந்தி இருந்தனள். அவள் இருக்கும் இடத்தை அறிந்துவருக என ஆஞ்சநேயருக்கு இராகவன் அறிவித்தான்.அதி மேதை, அதிசய வீரர், பல கலை வல்லர். மகிமா எனும் யோக சித்தியால் அணுவினும் நுணுகுவர். மேருவினும் உயர்ந்தவரான அந்த சிறிய திருவடி, நீட்டி காலை முறுக்கி, பெருத்து, காலை மடக்கி, மார்பை ஒடுக்கி தோளை உயர்த்தி  தனியராய் வானத்தில் தாவினார். பாழ்படும் இலங்கையின் பரிபவம் அறிந்தார்.

தேவியை எங்கும் தேடினார். அக்கற்பின் செல்வியை இறுதியில் அசோக வனத்தில் கண்டார். அரக்கர் செயல் கண்டு ஆத்திரம்  கொண்டார். வனத்தை அழித்தார். கொதித்து எதிர்த்தாரைக் கொன்றார். அரக்கர் இராவணனை அணுகினார். நீதி கூறினார். தெய்வ நியதி  ஓதினார். வீணன் இராவணன் பிராட்டியை விட மாட்டேன் என்றான். மேலும் வானரத்தின் வாலில் நெருப்பை வையுங்கள் என்று உறுத்து
கதித்து உரைத்தான். இலங்கை அரக்கர்கள் அறிவுகண் அவிந்துளர். இருபது விழிகள் இருந்தும் காமத்தால் இராவணன் கண்கள் அவிந்துள்ளன. கும்பகர்ணனோ உறங்குபவன். இக்கபோதிகள் ஆட்சியில் அகில உலகும் அலறியது.அவர்கள் அழியத்தான் வேண்டும் என்று அனுமார் எண்ணினார்.அவர்கள் தம் வாலில் வைத்த தீயைக் கொண்டே இலங்கை முழுவதையும் எரித்தார்.அங்கிருந்து மீண்டார். இராகவன்
திருமுன் வந்தார்.விபரம் கூறினார்.ஏராளமான பலம் உடையவர் எதிரிகள். ஆனால் சத்தியமே ராம சரம்.  எழுந்தது போர். அசத்திய அரக்கர் படை அழிந்தன. கும்பகர்ணன் தொலைந்தான். இராவணனின் உடலம் சுக்கு நூறாக  ஒழிந்தது. அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன்  அங்கமும்  குலைந்து அரம் கொள் பொடியாக  அம்ப கும்பனும்  கலங்க வெஞ்சினம்  புரிந்து நின்று  அம்பு கொண்டு வென்ற கொண்டல்  என்று போற்றி திருமாலை மேலோர் புகழ்கின்றார்.அதுபோல் அசுரர் தேகத்தை அடக்கிய  நீர் அவரது மருகர்  என அறிந்து
மகிழ்கிறது எமது மனம். ( அம்பன் என்பவன் ஒரு அரக்கன். அவன் மகன் கும்பன்.  அவன் இராவணனது தோழன்.  சித்தர்கள் பலரை சிறையிலடைத்த அவனை போரில் சுக்ரீவன் வாரி அடித்து உயிரை வாங்கினான். அக்கும்பனையும் பொருளாக்கி எண்ண இடம் தருகிறது அம்ப கும்பனும் கலங்க எனும் பகுதி )

குத்து கரந்தை, கொட்டை கரந்தை, விஷ்ணு கரந்தை, சிவ கரந்தை, சுனை கரந்தை, சுரை கரந்தை, சூரிய கரந்தை என இருப்பவைகளில் சிவகரந்தைகளே  நறு மணம் கொண்டவை.  -  வாந்தி  அரோசகத்தை  மாற்றும் பசி கொடுக்கும் சாய்ந்த விந்துவைக் கட்டும் இழந்த அழகை தண்டாலும் சேர்க்கும் சார்ந்த பரிமளத்தைத் தாண்டா சிவ கரந்தை தானே - என்று தேரையர் இதன் பெருமைகளைத் தெரிவிக்கிறார்.

இதை அடுத்து என்றும் தும்பை எண்ணப்படும்.- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே- என்று எண்ணி மேலோர் ஏங்குவர். - சீறுகின்ற பாம்போடு சில் விடம் கால் சென்னி வலி ஏறு கலம் மாந்தம் இருக்குமோ மாறு மலர் கொம்பனைய மாதே குளிர சீத ஜன்னி விடும் தும்லை இலை என்று ஒரு கால் சொல். ( சில் விடம்

சில விஷ சுரம், கால் - வாத நோய்சென்னி வலி - தலை நோய்மாந்தம் - அக்னி மாந்தம், குளிர் சீதம் - சிலேத்தும ஜன்னி ) அகத்தியர் இப்படி தும்பையை அறிமுகப் படுத்துகிறார்.

இதை அடுத்து கொன்றை எண்ணப்படுகின்றது. இதன் மகரந்தம் ஓங்கார ரூபம். இதழ்கள்  ஐந்தும் நமச்சிவய மந்திரத்தை நினைவுறுத்துகின்றன. சரக் கொன்றை, சிறு கொன்றை, கருங்கொன்றை, செங்கொன்றை, நரிக் கொன்றை, புல் நகக் கொன்றைமந்தாரக் கொன்றை, முள் கொன்றைமயில் கொன்றை, செம்மயில் கொன்றை  என இது பத்து வகைப்படும். சிவபிரானது அடையாள மலர் இது.

இவைகளுடன் கர்மத்தைக் கழுவும் கங்கையையும் அமுத மதியையும் சிரத்தில் அணிந்துள்ள சிவ பெருமான் பரன் எனும் திரு நாமம் படைத்வர் ( பரன் - உயர்ந் ஞான உச்சியில் இருப்பவர். ) ஆன்மாக்கள் பால் ஆர்வம் கொண்ட  அவரது அன்பெனும் பண்பிலிருந்து உதயமான உம்மை பரன் தன் அன்பில் வந்த குமரேசா என்று பாடி அடியேம் பரவுவம்.

எவரினும் தேவசக்தி இருக்கிறது. அசுர அறிவு அதிகரிக்கும் போது அத்தேவசக்தி முழுவதும் தேய்ந்து போகும். அதன் பிறகு பொழுது போக்கி புரக்கணிக்கும் பொல்லாத சூழ்நிலை பொங்கி வரும். இப்படித் தான் ஒரு காலத்தில் இமையவர் பலரும் ஏமாந்தனர். அதன் பயனாக இந்திரன் தன் பதவியை இழந்தான். குமரேசா, நீர் அந்த அழிவு சக்திகளை ஞான சக்தியால் அடக்கினீர். அதன் பின் அமரர் அச்சம் அகன்றனர்.
இழந்த சொத்தை இந்திரன் பெற்றான்.

அவ்வளவும் நிகழ்ந்த பின் அமைதி  எங்கும் அமைய எண்ணும் யோகிகளின் விருப்பப்படி  எண்கண் தலத்தில் ஏகரூபியாய் இருந்தீர். அப்பகுதியில் ஓர் சிற்பி, அன்பின் இதயமானர், அவர் உமது அரிய திருவுருவை அமைத்தார். இது போல் ஓர் மூர்த்தத்தை அச்சிற்பி எங்கும் அமைப்பது கூடாது என்று அவ்வூரார் எண்ணினர். அதுகருதி அவரது வலக்கை விரல்களை அறுத்தனர்.  (அரசன்தான் தண்டனைக் கொடுத்தான் என்ற வரலாறும் உண்டு - தொகுப்ப்பாசிரியர்கள் )

ஆஹா, இது தான் உலக இயல்பு என்பதா? அயை உணர்ந்து எண்கண்ணரான நீர் உமது அருளாட்சி எட்டுக்குடியாக்கினீர். அத்தல அதிபர்கள் விண்ணப்பித்தபடி சிற்பியார் அங்கேயும் ஓர் மூர்த்தம் அமைத்தார்.அங்குள்ள தலைவர்கள் அதுபோல் ஒரு உருவை அச்சிற்பி எங்கும் அமைக்காதிருக்கும் படி அவரின் இடக்கை விரல்களைச் சீவினர்.அட பாவமே, அதுகண்ட எண்கண்ணர் நீர்  எச்சிக்கலும் இல்லாதிருக்க உமது சொரூபஜோதி விலாசத்தை  மற்றொரு தலத்தில் வளரச் செய்தீர். அங்குள்ளவர் வேண்ட இசைந்த சிற்பியார் இருகை விரல்கள் இல்லாதிருந்தும் அதிசய ரூபமாக உமக்கு அங்கும் ஒரு திரு உருவம் அமைத்தார். இந்த ஊராரும் இடர்  தருவரோ? சிங்கார வேலா, விதிவழி மதி. எவர் மேலும் பிழை இல்லை.  உலக உறவு போதும். சிக்கென பிடித்தேன் ஏற்றுக் கொள் இறைவா என்று தான் அமைத்த திருவுருவின் தாள் பற்றி அலறி விம்மி அவர் அழுதார்.  எண்கண்ணரான தேவரீர் சிக்கல் உலகச் சிதைவைத் தவிர்த்து  அவரைச் சிவரூபராக்கினீர்.அந்த சிக்கல் பதியிலும் எட்டிக்குடியிலும் சிறக்க விளங்கி சாந்த சொரூபமாகி எண்கண் அமர்ந்த பெருமாளே, எளியேன் எண்ணத்தை ஏற்றருளும்.

சந்தனத்தைப் பூசி அதன் மேல் குங்கும் குழம்பை அப்பி , சிவ போக தத்துவ கடப்ப மாலையையும் சிவ யோக தத்துவ செண்பக மாலையையும் சூடிய திருத்தோள்கள் சிறந்து விளங்க மணிகளை உள்ளிட்ட தண்டையும் சிலம்புகளும் ஒலிகை மலர்விக்க சலம் சலம் என்று வெண்டைகளும் சதங் சதங் என்று சதங்கைகளும் சப்திக்க  புனிதநடை நடந்து  புறப்பட்டு தாள ஒலிக்குத் தக்கபடி பரத நடனம் ஆடிவரும் ஏறு  மயிலில் ஏறி வா ஐயா, ( இது புறக்காட்சி ) அதன் பின் அடியேனது சித்தக் கோயிலில் சிறக்கப் புகுந்து இரு ஐயா, ( இது அகக் காட்சி )

அகக் கோயிலில் இருந்த படி  எமது திருப்புகழைப் பாடு. உணர்ந்து பாட மனம் ஒருமையுறும்.அந்நிலையில் எம்மையே தியானித்து இரு  என்று உமது திருவாக்கால் ஓர் வார்த்தை ஓதி அருள்  ஐயா.

- அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - என்பர் மேலோர். அதன் படி  புறக்காட்சியும் அகக் காட்சியும் புனிதம் அளிக்க உமது அருள் நோக்கில் அருள் வாக்கில்அகப்பட்டு அடியேன் உய்ய அருள் துரையே உணர அருள் என்று விம்மி அழுது விண்ணப்பித்த படி

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று

திம்    -   திசை முழுவதும்,
திம்    -   பெருகி உள்ளது பேரருள்,
இந்தி   -  அஷ்ட லக்ஷமிகளின்,
மிந்தி   -  உறவு,
மிந்தி   -  இனி அதிகரிக்கும்,
தம் தனம் - பேரின்பம் என்பது எமது பெரும் செல்வம்,
தனந்தன் என்று  
சென்று  -  யாமே பிரபு எனும் குறிப்பு வெளி பட்டு,



” tag:

211
எண்கண்
(திருவாரூருக்கு அருகில் உள்ளது)


மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர்.  ஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள்தான் தாங்கியிருக்கிறது. கால்களில் புடைத்திருக்கும் நரம்புகள் அதை தெளிவாக்கிறது. இத்தனை அற்புதமும் சிறப்பும் வாய்ந்த மூன்று சிலைகளை ஒரே சிற்பி வடிவமைத்த காரணம் அ‘னேகமாக எல்லோரும் அறிந்ததே. எனினும் பலர் அறியாதது விஷயம் அவர் அமைத்த எல்லாவற்றிலும் மிகப் பெரியது பொறவாச்சேரியில் உள்ளது. (சிலர் சிக்கல் என்று தவறாகக் கருதுகின்றனர்) மற்ற இரண்டும் எட்டிக்குடியும் எண்கண்ணும் இருக்கும் சிலைகளாகும்

             தந்தனந் தனந்த தந்த தந்தனந் தனந்த தந்த
             தந்தனந் தனந்த தந்த                           தனதான

சந்தனந் திமிர்ந்த ணைந்து குங்குமங் கடம்பி லங்கு
  சண்பகஞ் செறிந்தி லங்கு                              திரடோளுந்
தண்டையஞ் சிலம்ப லம்ப வெண்டையஞ் சலன்ச லென்று
  சஞ்சிதஞ் சதங்கை கொஞ்ச                             மயிலேறித்
திந்திமிந் திமிந்தி மிந்திதந் தனந்த னென்று
  சென்றசைந் துகந்து வந்து                         க்ருபையோடே
சிந்தையங் குலம்பு குந்து சந்ததம் புகழ்ந்து ணர்ந்து
  செம்பதம் பணிந்தி ரென்று                           மொழிவாயே
அந்தமந் திகொண்டி லங்கை வெந்தழிந் திடும்ப கண்டன்
  அங்கமுங் குலைந்த ரங்கொள்                         பொடியாக
அம்பகும் பனுங்க லங்க வெஞ்சினம் புரிந்து நின்று
  அம்புகொண் டுவென்ற கொண்டல்                  மருகோனே
இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையுஞ் சலம்பு னைந்தி
  டும்பரன் றனம்பில் வந்த                                  குமரேசா
இந்திரன் பதம்பெ றண்டர் தம்பயங் கடிந்து பின்பு
  எண்கணங் கமர்ந்தி ருந்த                              பெருமாளே

பதம் பிரித்தல்

சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு
சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும்

சந்தனம் திமிர்ந்து அணைந்து = சந்தனத்தை நிரம்பப் பூசிச் சேர்ந்து. குங்குமம் கடம்பு இலங்கு = குங்குமம், கடம்பு விளங்கும் சண்பகம் செறிந்து இலங்கு = சண்பகம் இவை நெருங்கி விளங்கும் திரள் தோளும் = திரண்ட தோள்களும் (விளங்க).

தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன் சல் என்று
சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி

தண்டை = தண்டைகளும் அம் = அழகிய. சிலம்பு அலம்ப = சிலம்பும் ஒலிக்க வெண்டையம் = வீரக் காலணி சலன்சல் என்று = சலன் சல் என்று ஒலிக்க சஞ்சு இதம் = உருவம் இனிதாக அமைந்துள்ள சதங்கை கொஞ்ச = கிண்கிணி கொஞ்சுவது போல ஒலிக்க மயில் ஏறி = மயிலின் மீது ஏறி.

திந்திமிந் திமிந்தி மிந்தி தந்தனந் தனந்தனந் என்று
சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே

திந்திமி......என்று = இத்தகைய ஒலிகளுடன் சென்று அசைந்து = மெல்ல அசைந்து உகந்து = மகிழ்ச்சியுடன் வந்து = வந்து.

சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து
செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே

க்ருபையுடனே = கிருபையுடன் சிந்தை அம் குலம் = (என்) மனமாகிய கோயிலில் புகந்து = புகுந்து. சந்ததம் = எப்போதும் புகழ்ந்து = புகழ்ந்து. உணர்ந்து = நன்கு அறிந்து செம் பதம் பணிந்து இரு என்று = செவ்விய பதங்களைப் பணிந்து இருப்பாயாக என்று மொழிவாயே = மொழிந்தருளுக.


அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன்
அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக

அந்த மந்தி கொண்டு = பேர் போன அந்தக் குரங்காகிய அனுமனைத் துணை கொண்டு இலங்கை வெந்து அழிந்து = இலங்கை வெந்து அழியவும் இடும்ப கண்டன் = கொடுஞ் செயலைக் கொண்ட வீரனாகிய இராவண னுடைய அங்கமும் குலைந்து = உடலும் அழிபட்டு அரம் கொள் பொடியாக = அரத்தினால் ராவினது போல் தூளாக.

அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே

அம்பு = அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட. கும்பனும் கலங்க = கும்பகர்ணனும் மனம் கலங்க. வெம் சினம் புரிந்து நின்று = கொடுங் கோபத்துடன் நின்று. அம்பு கொண்டு வென்ற = அம்பை ஏவி வெற்றி கொண்ட. கொண்டல் மருகோனே = மேக நிறம் கொண்ட திருமாலின். மருகோனே = மருகனே.

இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும்
பரன் தன் அன்பில் வந்த குமரேசா

இந்துவும் = பிற கரந்தை = திருநீற்றுப் பச்ச தும்பை கொன்றையும் = தும்பை, கொன்றையும் சலம் = கங்கையும் புனைந்திடும் = அணிந்திடும் பரன் தன் = சிவபெருமானுடை அன்பில் வந்த குமரேசா = அன்பால் தோன்றிய குமரேசா.

இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு
எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே.

இந்திரன் பதம் பெற = இந்திரன் தன் பதத்தைப் பெறுமாறு அண்டர் தம் பயம் கடிந்து = தேவர்களுடைய பயத்தைத் தவிர்த்த பின்பு = பின்னர எண்கண் அங்கு = எண்கண் என்னும் தலத்தில அமர்ந்திருந்த பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

சந்தனம், குங்குமம், கடம்பு இவை அணிந்த தோள்கள் விளங்க, சிலம்புகள் ஒலிக்க, சதங்கை கிண்கிணி கொஞ்சுவது போல ஒலி செய்ய, மயிலின் மீது ஏறி மகிழ்ச்சியுடன் வந்து உன் செவ்விய பதங்களைப் பணிந்து இருப்பாயாக என்று மொழிந்தருளுக.

அனுமனின் துணையால் இலங்கை வெந்து அழியவும், கொடிய வனாகிய இராவணனுடைய உடல் அழிந்து பொடியாகவும், கும்பகர்ணன் மனம் கலங்க அம்பைச் செலுத்தி வெற்றி கொண்ட திருமாலின் மருகனே. பிறை, திருநீறு, தும்பை, கொன்றை, கங்கை இவற்றை அணிந்த சிவபெருமானின் அன்பால் தோன்றிய குமரனே, இந்திரன் தன் பதவி திரும்பப் பெறவும், தேவர்கள் பயம் ஒழியவும் செய்து முடித்த பின்னர், எண்கண் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. செம்பதம் பணிந்திடுவாய் என்று மொழிந்து அருளுக.


குகஸ்ரீ ரசபதி விளக்கவிரை அமரர் நடராஜன் சொன்னவண்ணம்

வாள் பலம், தோள் பலம், வர பலம் இம்மூன்றும் இலங்கை மாநகரில் எங்கும்  இருந்தன. அந்த இறுமாப்பில் மதுவில் மயங்கி மாதரில் உயங்கும் மந்த மதியில் அரக்கர் மலிந்தனர். செல்வி ஜானகி அவர்கள் இட்ட சிறையில் வருந்தி இருந்தனள். அவள் இருக்கும் இடத்தை அறிந்துவருக என ஆஞ்சநேயருக்கு இராகவன் அறிவித்தான்.அதி மேதை, அதிசய வீரர், பல கலை வல்லர். மகிமா எனும் யோக சித்தியால் அணுவினும் நுணுகுவர். மேருவினும் உயர்ந்தவரான அந்த சிறிய திருவடி, நீட்டி காலை முறுக்கி, பெருத்து, காலை மடக்கி, மார்பை ஒடுக்கி தோளை உயர்த்தி  தனியராய் வானத்தில் தாவினார். பாழ்படும் இலங்கையின் பரிபவம் அறிந்தார்.

தேவியை எங்கும் தேடினார். அக்கற்பின் செல்வியை இறுதியில் அசோக வனத்தில் கண்டார். அரக்கர் செயல் கண்டு ஆத்திரம்  கொண்டார். வனத்தை அழித்தார். கொதித்து எதிர்த்தாரைக் கொன்றார். அரக்கர் இராவணனை அணுகினார். நீதி கூறினார். தெய்வ நியதி  ஓதினார். வீணன் இராவணன் பிராட்டியை விட மாட்டேன் என்றான். மேலும் வானரத்தின் வாலில் நெருப்பை வையுங்கள் என்று உறுத்து
கதித்து உரைத்தான். இலங்கை அரக்கர்கள் அறிவுகண் அவிந்துளர். இருபது விழிகள் இருந்தும் காமத்தால் இராவணன் கண்கள் அவிந்துள்ளன. கும்பகர்ணனோ உறங்குபவன். இக்கபோதிகள் ஆட்சியில் அகில உலகும் அலறியது.அவர்கள் அழியத்தான் வேண்டும் என்று அனுமார் எண்ணினார்.அவர்கள் தம் வாலில் வைத்த தீயைக் கொண்டே இலங்கை முழுவதையும் எரித்தார்.அங்கிருந்து மீண்டார். இராகவன்
திருமுன் வந்தார்.விபரம் கூறினார்.ஏராளமான பலம் உடையவர் எதிரிகள். ஆனால் சத்தியமே ராம சரம்.  எழுந்தது போர். அசத்திய அரக்கர் படை அழிந்தன. கும்பகர்ணன் தொலைந்தான். இராவணனின் உடலம் சுக்கு நூறாக  ஒழிந்தது. அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன்  அங்கமும்  குலைந்து அரம் கொள் பொடியாக  அம்ப கும்பனும்  கலங்க வெஞ்சினம்  புரிந்து நின்று  அம்பு கொண்டு வென்ற கொண்டல்  என்று போற்றி திருமாலை மேலோர் புகழ்கின்றார்.அதுபோல் அசுரர் தேகத்தை அடக்கிய  நீர் அவரது மருகர்  என அறிந்து
மகிழ்கிறது எமது மனம். ( அம்பன் என்பவன் ஒரு அரக்கன். அவன் மகன் கும்பன்.  அவன் இராவணனது தோழன்.  சித்தர்கள் பலரை சிறையிலடைத்த அவனை போரில் சுக்ரீவன் வாரி அடித்து உயிரை வாங்கினான். அக்கும்பனையும் பொருளாக்கி எண்ண இடம் தருகிறது அம்ப கும்பனும் கலங்க எனும் பகுதி )

குத்து கரந்தை, கொட்டை கரந்தை, விஷ்ணு கரந்தை, சிவ கரந்தை, சுனை கரந்தை, சுரை கரந்தை, சூரிய கரந்தை என இருப்பவைகளில் சிவகரந்தைகளே  நறு மணம் கொண்டவை.  -  வாந்தி  அரோசகத்தை  மாற்றும் பசி கொடுக்கும் சாய்ந்த விந்துவைக் கட்டும் இழந்த அழகை தண்டாலும் சேர்க்கும் சார்ந்த பரிமளத்தைத் தாண்டா சிவ கரந்தை தானே - என்று தேரையர் இதன் பெருமைகளைத் தெரிவிக்கிறார்.

இதை அடுத்து என்றும் தும்பை எண்ணப்படும்.- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே- என்று எண்ணி மேலோர் ஏங்குவர். - சீறுகின்ற பாம்போடு சில் விடம் கால் சென்னி வலி ஏறு கலம் மாந்தம் இருக்குமோ மாறு மலர் கொம்பனைய மாதே குளிர சீத ஜன்னி விடும் தும்லை இலை என்று ஒரு கால் சொல். ( சில் விடம்

சில விஷ சுரம், கால் - வாத நோய்சென்னி வலி - தலை நோய்மாந்தம் - அக்னி மாந்தம், குளிர் சீதம் - சிலேத்தும ஜன்னி ) அகத்தியர் இப்படி தும்பையை அறிமுகப் படுத்துகிறார்.

இதை அடுத்து கொன்றை எண்ணப்படுகின்றது. இதன் மகரந்தம் ஓங்கார ரூபம். இதழ்கள்  ஐந்தும் நமச்சிவய மந்திரத்தை நினைவுறுத்துகின்றன. சரக் கொன்றை, சிறு கொன்றை, கருங்கொன்றை, செங்கொன்றை, நரிக் கொன்றை, புல் நகக் கொன்றைமந்தாரக் கொன்றை, முள் கொன்றைமயில் கொன்றை, செம்மயில் கொன்றை  என இது பத்து வகைப்படும். சிவபிரானது அடையாள மலர் இது.

இவைகளுடன் கர்மத்தைக் கழுவும் கங்கையையும் அமுத மதியையும் சிரத்தில் அணிந்துள்ள சிவ பெருமான் பரன் எனும் திரு நாமம் படைத்வர் ( பரன் - உயர்ந் ஞான உச்சியில் இருப்பவர். ) ஆன்மாக்கள் பால் ஆர்வம் கொண்ட  அவரது அன்பெனும் பண்பிலிருந்து உதயமான உம்மை பரன் தன் அன்பில் வந்த குமரேசா என்று பாடி அடியேம் பரவுவம்.

எவரினும் தேவசக்தி இருக்கிறது. அசுர அறிவு அதிகரிக்கும் போது அத்தேவசக்தி முழுவதும் தேய்ந்து போகும். அதன் பிறகு பொழுது போக்கி புரக்கணிக்கும் பொல்லாத சூழ்நிலை பொங்கி வரும். இப்படித் தான் ஒரு காலத்தில் இமையவர் பலரும் ஏமாந்தனர். அதன் பயனாக இந்திரன் தன் பதவியை இழந்தான். குமரேசா, நீர் அந்த அழிவு சக்திகளை ஞான சக்தியால் அடக்கினீர். அதன் பின் அமரர் அச்சம் அகன்றனர்.
இழந்த சொத்தை இந்திரன் பெற்றான்.

அவ்வளவும் நிகழ்ந்த பின் அமைதி  எங்கும் அமைய எண்ணும் யோகிகளின் விருப்பப்படி  எண்கண் தலத்தில் ஏகரூபியாய் இருந்தீர். அப்பகுதியில் ஓர் சிற்பி, அன்பின் இதயமானர், அவர் உமது அரிய திருவுருவை அமைத்தார். இது போல் ஓர் மூர்த்தத்தை அச்சிற்பி எங்கும் அமைப்பது கூடாது என்று அவ்வூரார் எண்ணினர். அதுகருதி அவரது வலக்கை விரல்களை அறுத்தனர்.  (அரசன்தான் தண்டனைக் கொடுத்தான் என்ற வரலாறும் உண்டு - தொகுப்ப்பாசிரியர்கள் )

ஆஹா, இது தான் உலக இயல்பு என்பதா? அயை உணர்ந்து எண்கண்ணரான நீர் உமது அருளாட்சி எட்டுக்குடியாக்கினீர். அத்தல அதிபர்கள் விண்ணப்பித்தபடி சிற்பியார் அங்கேயும் ஓர் மூர்த்தம் அமைத்தார்.அங்குள்ள தலைவர்கள் அதுபோல் ஒரு உருவை அச்சிற்பி எங்கும் அமைக்காதிருக்கும் படி அவரின் இடக்கை விரல்களைச் சீவினர்.அட பாவமே, அதுகண்ட எண்கண்ணர் நீர்  எச்சிக்கலும் இல்லாதிருக்க உமது சொரூபஜோதி விலாசத்தை  மற்றொரு தலத்தில் வளரச் செய்தீர். அங்குள்ளவர் வேண்ட இசைந்த சிற்பியார் இருகை விரல்கள் இல்லாதிருந்தும் அதிசய ரூபமாக உமக்கு அங்கும் ஒரு திரு உருவம் அமைத்தார். இந்த ஊராரும் இடர்  தருவரோ? சிங்கார வேலா, விதிவழி மதி. எவர் மேலும் பிழை இல்லை.  உலக உறவு போதும். சிக்கென பிடித்தேன் ஏற்றுக் கொள் இறைவா என்று தான் அமைத்த திருவுருவின் தாள் பற்றி அலறி விம்மி அவர் அழுதார்.  எண்கண்ணரான தேவரீர் சிக்கல் உலகச் சிதைவைத் தவிர்த்து  அவரைச் சிவரூபராக்கினீர்.அந்த சிக்கல் பதியிலும் எட்டிக்குடியிலும் சிறக்க விளங்கி சாந்த சொரூபமாகி எண்கண் அமர்ந்த பெருமாளே, எளியேன் எண்ணத்தை ஏற்றருளும்.

சந்தனத்தைப் பூசி அதன் மேல் குங்கும் குழம்பை அப்பி , சிவ போக தத்துவ கடப்ப மாலையையும் சிவ யோக தத்துவ செண்பக மாலையையும் சூடிய திருத்தோள்கள் சிறந்து விளங்க மணிகளை உள்ளிட்ட தண்டையும் சிலம்புகளும் ஒலிகை மலர்விக்க சலம் சலம் என்று வெண்டைகளும் சதங் சதங் என்று சதங்கைகளும் சப்திக்க  புனிதநடை நடந்து  புறப்பட்டு தாள ஒலிக்குத் தக்கபடி பரத நடனம் ஆடிவரும் ஏறு  மயிலில் ஏறி வா ஐயா, ( இது புறக்காட்சி ) அதன் பின் அடியேனது சித்தக் கோயிலில் சிறக்கப் புகுந்து இரு ஐயா, ( இது அகக் காட்சி )

அகக் கோயிலில் இருந்த படி  எமது திருப்புகழைப் பாடு. உணர்ந்து பாட மனம் ஒருமையுறும்.அந்நிலையில் எம்மையே தியானித்து இரு  என்று உமது திருவாக்கால் ஓர் வார்த்தை ஓதி அருள்  ஐயா.

- அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - என்பர் மேலோர். அதன் படி  புறக்காட்சியும் அகக் காட்சியும் புனிதம் அளிக்க உமது அருள் நோக்கில் அருள் வாக்கில்அகப்பட்டு அடியேன் உய்ய அருள் துரையே உணர அருள் என்று விம்மி அழுது விண்ணப்பித்த படி

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று

திம்    -   திசை முழுவதும்,
திம்    -   பெருகி உள்ளது பேரருள்,
இந்தி   -  அஷ்ட லக்ஷமிகளின்,
மிந்தி   -  உறவு,
மிந்தி   -  இனி அதிகரிக்கும்,
தம் தனம் - பேரின்பம் என்பது எமது பெரும் செல்வம்,
தனந்தன் என்று  
சென்று  -  யாமே பிரபு எனும் குறிப்பு வெளி பட்டு,



210.ஓங்கும் ஐம்புலன்


210

எட்டிகுடி
(திருவாரூர் அருகில் உள்ளது)

மயிலின் கால்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட ஒர் அற்புதமான சிலை அமைப்பு பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர்   எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும்,  முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும்இளைஞனாக நினைத்து பார்த்தால்  இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.
        



             தாந்த தந்தன தான தனத்தம்          தனதான 

        ஓங்கு மைம்புல னோட நினைத்தின்            பயர்வேனை
           ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்   தனையாள்வாய்
        வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்                 புகடாவி
           வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்                     குமரேசா
        மூங்கி லம்புய வாச மணக்குஞ்                             சரிமானு
           மூண்ட பைங்குற மாது மணக்குந்                திருமார்பா
        காங்கை யங்கறு பாசில் மனத்தன்         பர்கள்வாழ்வே
           காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்                 பெருமாளே


 பதம் பிரித்தல்


ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்

ஓங்கும் = பெருகி வளரும் ஐம்புலன் ஓட = சுவைஒளிஊறுஓசைநாற்றம் என்னும் ஐந்து புலன்களும் என்னை இழுத்துக் கொண்டு ஓட நினைத்து இன்பு = அவ்வழியே நான் ஓட நினைத்து இன்பம் கொண்டு அயர்வேனை = தளர்ச்சி கொள்பவனாகிய எனக்கு ஓம் பெறும் ப்ரணவ ஆதி = ஓம் என்ற பிரணவப் பொருள் ஆகிய மந்திரங்களை உரைத்து = உபதேசித்து எந்தனை ஆள்வாய் = அடியேனை ஆண்டருளுக.

வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா

வாங்கி = வில்லை வளைத்து வெம் கணை = கொடிய அம்புகளைக் கொண்ட சூரர் குலக் கொம்பு தாவி = சூரர்களாகிய சிறந்த வீரக் கிளைஞர்கள் பாய்ந்து வர வாங்கி நின்றன = வளைந்து நின்ற சேனை ஏவில் உகைக்கும் = அம்பு கொண்டு செலுத்திய குமரேசா = குமரேசனே

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா

மூங்கில் அம்புய = மூங்கில் போன்ற அழகிய புயங்களை உடைய வாச மண =  நறு மணமுள்ள குஞ்சரி மானும் = யானை மகள் தேவசேனையும் மூண்ட = காதல் பொங்க. பைங் குற மாது = அழகிய குறவர் மகளாகிய வள்ளி. மணக்கும்= மணம் புரிந்த. திருமார்பா = அழகிய மார்பனே.
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே.

காங்கை = வெப்பம் (மனக் கொதிப்பு). அங்கு அறு = அங்கு இல்லாததும் பாசு இல் = பாசங்கள் இல்லாததும் ஆன மனத்து அன்பர்கள் = மனத்தராகிய அடியார்களின் வாழ்வே = செல்வமே  காஞ்சிரம் குடி = எட்டிகுடி என்னும் தலத்தில் வீற்றீருக்கும் ஆறு முகத்து எம்பெருமாளே = எமது ஆறு முகப் பெருமாளே.







 காஞ்சிரங்குடி








சுருக்க உரை

பெருகி வளரும் ஐம்புலங்களும் என்னை இழுக்கஅவ்வழியே ஓடி
அயர்வுறும் எனக்குஓம் என்னும் பிரணவம் ஆகிய மந்திரங்களை
உபதேசித்து அருளுக. 
கொடிய அம்புகளைக் கொண்ட சூரர்களின் கிளைஞர்கள் பாய்ந்து வர,
அந்த சேனை மீது அம்பு செலுத்திய குமரேசனே, தேவசேனையையும்
வள்ளியையும் மணம் கொண்ட திருமார்பனே, மனம் கொதிப்பு இல்லாத
அடியார்களின் செல்வமே, என்னை ஆண்டு கொள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

 காஞ்சிரங்குடி....

  இதனை எட்டிகுடி என்று மாற்றி அழைக்கப்பட்டுள்ளது என்பது வ.சு.
 செங்கல்வராயரரின் கருத்து.
பந்தணைநல்லூரைக் கந்துகாபுரி என்று அழைத்ததைப் போல   (திருப்புகழ் - மதியஞ்சத்தி).
  

இந்த திருத்தலத்தின் மூலவர் முருகன் சிற்பத்தை வடித்தவர் சிறந்த சிற்பி எண்கண்  மற்றும் சிக்கல் முருகன் சிலையை ( தற்சமயம் பொறாவாச்சேரியில் உள்ளது) வடித்துள்ளார். சிக்கல் தலத்தில் சிறந்த சிலையை அவர் வடித்தார். பின் அதை விட சிறந்ததாக எதுவும் அமைய விருப்பபடாத அரசன்  சிற்பியின் வலது கட்டை விரலை துண்டித்து விட்டான். முருகனின் அருள் பெற்ற அந்த சிற்பி கட்டை விரலிலாத கைகளினால் எட்டுக்குடி என்ற தலத்தில் முருகன் சிற்பத்தை வடித்தார் .அது சிக்கல்ச் சிற்பத்தை விட சிறந்ததாக அமைந்ததை தொடர்ந்து. அதனால் பொறாமை கொண்ட அரசன் சிற்பியின் கண்களைக் குருடாக்கினான்.

அதன் பின் முருகன் மீதுள்ள மிகந்த பக்தியால் தன்னுடைய பெண் உதவியுடன் என்கண் திருத்தலத்தில் சிலையை வடித்தார். அருமையாக அமைந்த சிலையின் கண்களை திறக்கும் பொழுது உளி கண்களில் பட்டுக் கண்பார்வை மீண்டும் பெற்றார் என்பது வரலாறு கூறும் நிகழ்ச்சி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&mid=5&sid=129&aid=4633

” tag:

210

எட்டிகுடி
(திருவாரூர் அருகில் உள்ளது)

மயிலின் கால்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட ஒர் அற்புதமான சிலை அமைப்பு பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர்   எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும்,  முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும்இளைஞனாக நினைத்து பார்த்தால்  இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.
        



             தாந்த தந்தன தான தனத்தம்          தனதான 

        ஓங்கு மைம்புல னோட நினைத்தின்            பயர்வேனை
           ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்   தனையாள்வாய்
        வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்                 புகடாவி
           வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்                     குமரேசா
        மூங்கி லம்புய வாச மணக்குஞ்                             சரிமானு
           மூண்ட பைங்குற மாது மணக்குந்                திருமார்பா
        காங்கை யங்கறு பாசில் மனத்தன்         பர்கள்வாழ்வே
           காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்                 பெருமாளே


 பதம் பிரித்தல்


ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்

ஓங்கும் = பெருகி வளரும் ஐம்புலன் ஓட = சுவைஒளிஊறுஓசைநாற்றம் என்னும் ஐந்து புலன்களும் என்னை இழுத்துக் கொண்டு ஓட நினைத்து இன்பு = அவ்வழியே நான் ஓட நினைத்து இன்பம் கொண்டு அயர்வேனை = தளர்ச்சி கொள்பவனாகிய எனக்கு ஓம் பெறும் ப்ரணவ ஆதி = ஓம் என்ற பிரணவப் பொருள் ஆகிய மந்திரங்களை உரைத்து = உபதேசித்து எந்தனை ஆள்வாய் = அடியேனை ஆண்டருளுக.

வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா

வாங்கி = வில்லை வளைத்து வெம் கணை = கொடிய அம்புகளைக் கொண்ட சூரர் குலக் கொம்பு தாவி = சூரர்களாகிய சிறந்த வீரக் கிளைஞர்கள் பாய்ந்து வர வாங்கி நின்றன = வளைந்து நின்ற சேனை ஏவில் உகைக்கும் = அம்பு கொண்டு செலுத்திய குமரேசா = குமரேசனே

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா

மூங்கில் அம்புய = மூங்கில் போன்ற அழகிய புயங்களை உடைய வாச மண =  நறு மணமுள்ள குஞ்சரி மானும் = யானை மகள் தேவசேனையும் மூண்ட = காதல் பொங்க. பைங் குற மாது = அழகிய குறவர் மகளாகிய வள்ளி. மணக்கும்= மணம் புரிந்த. திருமார்பா = அழகிய மார்பனே.
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே.

காங்கை = வெப்பம் (மனக் கொதிப்பு). அங்கு அறு = அங்கு இல்லாததும் பாசு இல் = பாசங்கள் இல்லாததும் ஆன மனத்து அன்பர்கள் = மனத்தராகிய அடியார்களின் வாழ்வே = செல்வமே  காஞ்சிரம் குடி = எட்டிகுடி என்னும் தலத்தில் வீற்றீருக்கும் ஆறு முகத்து எம்பெருமாளே = எமது ஆறு முகப் பெருமாளே.







 காஞ்சிரங்குடி








சுருக்க உரை

பெருகி வளரும் ஐம்புலங்களும் என்னை இழுக்கஅவ்வழியே ஓடி
அயர்வுறும் எனக்குஓம் என்னும் பிரணவம் ஆகிய மந்திரங்களை
உபதேசித்து அருளுக. 
கொடிய அம்புகளைக் கொண்ட சூரர்களின் கிளைஞர்கள் பாய்ந்து வர,
அந்த சேனை மீது அம்பு செலுத்திய குமரேசனே, தேவசேனையையும்
வள்ளியையும் மணம் கொண்ட திருமார்பனே, மனம் கொதிப்பு இல்லாத
அடியார்களின் செல்வமே, என்னை ஆண்டு கொள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

 காஞ்சிரங்குடி....

  இதனை எட்டிகுடி என்று மாற்றி அழைக்கப்பட்டுள்ளது என்பது வ.சு.
 செங்கல்வராயரரின் கருத்து.
பந்தணைநல்லூரைக் கந்துகாபுரி என்று அழைத்ததைப் போல   (திருப்புகழ் - மதியஞ்சத்தி).
  

இந்த திருத்தலத்தின் மூலவர் முருகன் சிற்பத்தை வடித்தவர் சிறந்த சிற்பி எண்கண்  மற்றும் சிக்கல் முருகன் சிலையை ( தற்சமயம் பொறாவாச்சேரியில் உள்ளது) வடித்துள்ளார். சிக்கல் தலத்தில் சிறந்த சிலையை அவர் வடித்தார். பின் அதை விட சிறந்ததாக எதுவும் அமைய விருப்பபடாத அரசன்  சிற்பியின் வலது கட்டை விரலை துண்டித்து விட்டான். முருகனின் அருள் பெற்ற அந்த சிற்பி கட்டை விரலிலாத கைகளினால் எட்டுக்குடி என்ற தலத்தில் முருகன் சிற்பத்தை வடித்தார் .அது சிக்கல்ச் சிற்பத்தை விட சிறந்ததாக அமைந்ததை தொடர்ந்து. அதனால் பொறாமை கொண்ட அரசன் சிற்பியின் கண்களைக் குருடாக்கினான்.

அதன் பின் முருகன் மீதுள்ள மிகந்த பக்தியால் தன்னுடைய பெண் உதவியுடன் என்கண் திருத்தலத்தில் சிலையை வடித்தார். அருமையாக அமைந்த சிலையின் கண்களை திறக்கும் பொழுது உளி கண்களில் பட்டுக் கண்பார்வை மீண்டும் பெற்றார் என்பது வரலாறு கூறும் நிகழ்ச்சி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&mid=5&sid=129&aid=4633