F

படிப்போர்

Sunday 29 December 2013

257. இகலவருதிரை

257
திருமயிலை
அடியவருடன் கலந்து நலம் பெற அருள்புரிவீர்
            
              தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன            தனதான

   இகல வருதிரை பெருகிய சலநிதி
         நிலவு முலகினி லிகமுறு பிறவியி
         னினிமை பெறவரு மிடருறு மிருவினை      யதுதீர
    இசையு முனதிரு பதமலர் தனைமன
         மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
         ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி        உமைபாகர்
    மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
         மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
         வசன மறவுறு மவுனமொ டுறைகிலி           மடமாதர்
    மயம தடரிட இடருறு மடியனு
         மினிமை தருமுன தடியவ ருடனுற
         மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ       தொருநாளே
    சிகர தனகிரி குறமக ளினிதுற
         சிலத நலமுறு சிலபல வசனமு
         திறைய அறைபயி லறுமுக நிறைதரு          மருணீத
    சிரண புரணவி தரணிவி சிரவண
         சரணு சரவண பவகுக சயனொளி        
         திரவ பரவதி சிரமறை முடிவுறு               பொருணீத
    அகர உகரதி மகரதி சிகரதி
         யகர அருளதி தெருளதி வலவல
         அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில்    விடுவோனே
    அழகு மிலகிய புலமையு மகிமையும்
         வளமு முறைதிரு மயிலையி லநுதின
            மமரு மரகர சிவசுத அடியவர்           பெருமாளே.
 
பதம் பிரித்தல்


இகல வரு திரை பெருகிய சல நிதி
நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இரு வினை அது தீர

இகல வரு திரை = ஒன்றோடொன்று மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகிய சல நிதி = பெருகியுள்ள கடல் நிலவும் = சூழ்ந்துள்ள உலகினில் = உலகத்தில் இகம் உறு பிறவியில் = இப்போது (இம்மை) உள்ள பிறப்பில் இனிமை பெற = இன்பத்தைப் பெறவும் வரும் = வருகின்ற இடர் உறும் இரு வினை அது தீர = துன்பத் தடைகளோடு கூடிய இரு வினைகள (நல் வினை, தீ வினை) ஒழியவும்

இசையும் உனது இரு திரு பத மலர் தனை மனம்
இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமை பாகர்

இசையும் = பொருந்தியுள்ள உனது இரு பத மலர்தனை = உன்னுடைய இரண்டு பாத மலர்களை மனம் இசைய நினைகிலை = மனம் பொருந்த நினைக்காதவன் இதம் உற = இன்பம் பெருக உனது அருள் இவர = உன்னுடைய அருள் கைகூடிக் கிடைக்க உருகிலி = உருகாதவன் அயர்கிலி = (பக்தியால்) தளர்ச்சி உறாதவன் (தன் வசம் அழியாதவன்) தொழுகிலி = (உன்னை) வணங்காதவன் உமை பாகர் = உமா தேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான்


மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மடமாதர்

மகிழும் மகவு என = மகிழ்கின்ற குழந்தையே என்று அறைகிலி = கூறாதவன் நிறைகிலி = மன நிறைவு இல்லாதவன் மடமை = பேதைமை குறைகிலி = குறையாதவன் மதி உணர்வு அறிவிலி = அறிவு தெளிவு பெறாதவன் வசனம் அற = பேச்சு அற உறு = பொருந்திய மவுனமொடு உறைகிலி = மவுன நிலையில் இல்லாதவன் மட மாதர் = அழகிய பெண்களின்

மயம் அது அடரிட இடர் உறும் அடியனும்
இனிமை தரும் உனது அடியவர் உடன் உற
மருவ அருள் தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே

மயம் அது = அழகு அடரிட = மனதில் செறிந்து இடம் கொள்ள இடர் உறும் அடியனும் = அதனால் துன்பம் அடைகின்றவனான அடியேனும் இனிமை தரும் உனது அடியவருடன் = இன்ப சுகம் தருகின்ற உன்னுடைய அடியார்களோடு உற மருவ = கூடியிருக்கும் அருள் தரு கிருபையின் = திருவருளைத் தருவதான உனது கிருபைக்கு மலிகுவது = பாத்திரனாகிருக்க ஒரு நாளே = ஒரு நாள் கிடைக்குமோ?

சிகர தன கிரி குற மகள் இனிது உற
சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறு முக நிறை தரும் அருள் நீத

சிகர = உயர்ந்த தன கிரி = மலை போன்ற கொங்கையை உடைய குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளி இனிது உற = இனிமை பெற சிலதன் நலம் உறு = தோழன் (ஏவல் செய்வோன்) போன்று சில பல வசன அமுது இறைய = பேச்சாகிய அமுதத்தை வீசிப் பரப்பி அறை பயில் உறு = (அவளுடன்) பேசப் பயின்ற அறு முக = ஆறு முகனே. நிறைதரு = நிறைந்து விளங்கும் அருள் நீத = அருள் கொண்ட நீதிமானே.

சிரண புரணம் விதரண விசிரவண
சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத

சிரண = (சீர்+அண) பெருமை பொறுந்திய புரண = நிறைவே, பழமையானபரே விதரண = இரக்க குணத்தனே விசிரவண = நிரம்ப கேள்வி உடையவனே. சரண் = அடைக்கலம் புரியத்தக்க உ = இறைவனே சரவண பவ குகனே = சரவண மடுவில் தோன்றியவனே, குகனே. சயன் = சிவபெருமானுடைய ஒளி திரவ = ஒளி பாய்ந்தவனே. பர = பரனே, மேலானவரே அதி சிரம் = மிகுந்த மேன்மை உடையவனே. மறை முடிவு உறு பொருள் நீத = வேதத்தின் முடிவான பொருளான நீதியனே.

அகர உகர தீ மகர தீ சிகர தீ
யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரண் உறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே

அகர = அகரம் போன்ற முதற் பொருளே உகர தீ = சிவ சக்தியாய் விளங்கும் நல் அறிவே மகர = ஆணவ மலத்தை தீ = தகிப்பவனே சிகர தீ = சிவமாகிய அறிவே யகர = ஜீவான்மாவில் விளங்குபவனே அருளதி = அதிக அருளே தெருளதி = அதிக ஞானமே வலவல = மிக்க வலிமை வாய்ந்த அரணம் = காவல் கோட்டை முரண் உறு = பகைமை பூண்ட. அசுரர்கள் = அசுரர்களும் கெட அயில் விடுவோனே = அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே.


அழகும் இலகிய புலமையும் மகிமையும்
வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே.

அழகும் = சிறப்பும் இலகிய புலமையும் = விளங்கும் கல்வி ஞானமும் மகிமையும் = பெருமையும் வளமும் = வளப்பமும் உறை = நிறைந்திருக்கும் திரு மயிலையில் = மயிலாப்பூரில் அநுதினம் = நாள் தோறும் அமரும் = வீற்றிருக்கும் அரகர = ஹர ஹர என்னும் ஒலிக்கு உரிய சிவ சுத = சிவனுடைய குமாரனே அடியவர் பெருமாளே = அடியவர் தம் பெருமாளே.

சுருக்க உரை

இரு வினைகள் ஒழிய உனது பாதங்களை நினையாதவனும், உன்னை
வணங்காதவனும், பேதையுமாகிய அடியேன் உன் அடியார்களுடன் கூடி இருக்கும் அருளுக்குப் பாத்திரமாவது என்று கிடைக்குமோ.

வள்ளியுடன் இனிய பேச்சுக்களை வீசிய அறுமுக வேளே. பெருமையும் தயாள குணமும் கேள்வியும் உடைவனே. உன்னை அடைக்கலம் புகுதற்கு உரியவனே. சிவபெருமான் குமாரனே. அகர, உகர, மகர, யகர சக்திகள் அடங்கிய சிவமாகிய அறிவே. அசுரர்கள் அழிய வேலைச்  செலுத்தினவனே. மயிலையில் நிலையாக வீற்றிருக்கும் பெருமாளே.  உனது கிருபை எனக்கு என்று கிடைக்கும்?

விளக்கக் குறிப்புகள்
  
1. உனது அருள் இவர உருகிலி....
இவர்தல் = பொருந்துதல்.
மாதிவர் பாகன் மறை பயின்ற..............மாணிக்கவாசகர் திருவாசகம்

2. சரணு சரவணபவ குக...
சரண்+உ = சரணு. உ = இறைவன்.
உண்ணா முலை உ மைந்து ஆசு அரண்      --- .........கந்தர் அந்தாதி

     

     
” tag:
257
திருமயிலை
அடியவருடன் கலந்து நலம் பெற அருள்புரிவீர்
            
              தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன            தனதான

   இகல வருதிரை பெருகிய சலநிதி
         நிலவு முலகினி லிகமுறு பிறவியி
         னினிமை பெறவரு மிடருறு மிருவினை      யதுதீர
    இசையு முனதிரு பதமலர் தனைமன
         மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
         ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி        உமைபாகர்
    மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
         மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
         வசன மறவுறு மவுனமொ டுறைகிலி           மடமாதர்
    மயம தடரிட இடருறு மடியனு
         மினிமை தருமுன தடியவ ருடனுற
         மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ       தொருநாளே
    சிகர தனகிரி குறமக ளினிதுற
         சிலத நலமுறு சிலபல வசனமு
         திறைய அறைபயி லறுமுக நிறைதரு          மருணீத
    சிரண புரணவி தரணிவி சிரவண
         சரணு சரவண பவகுக சயனொளி        
         திரவ பரவதி சிரமறை முடிவுறு               பொருணீத
    அகர உகரதி மகரதி சிகரதி
         யகர அருளதி தெருளதி வலவல
         அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில்    விடுவோனே
    அழகு மிலகிய புலமையு மகிமையும்
         வளமு முறைதிரு மயிலையி லநுதின
            மமரு மரகர சிவசுத அடியவர்           பெருமாளே.
 
பதம் பிரித்தல்


இகல வரு திரை பெருகிய சல நிதி
நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இரு வினை அது தீர

இகல வரு திரை = ஒன்றோடொன்று மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகிய சல நிதி = பெருகியுள்ள கடல் நிலவும் = சூழ்ந்துள்ள உலகினில் = உலகத்தில் இகம் உறு பிறவியில் = இப்போது (இம்மை) உள்ள பிறப்பில் இனிமை பெற = இன்பத்தைப் பெறவும் வரும் = வருகின்ற இடர் உறும் இரு வினை அது தீர = துன்பத் தடைகளோடு கூடிய இரு வினைகள (நல் வினை, தீ வினை) ஒழியவும்

இசையும் உனது இரு திரு பத மலர் தனை மனம்
இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமை பாகர்

இசையும் = பொருந்தியுள்ள உனது இரு பத மலர்தனை = உன்னுடைய இரண்டு பாத மலர்களை மனம் இசைய நினைகிலை = மனம் பொருந்த நினைக்காதவன் இதம் உற = இன்பம் பெருக உனது அருள் இவர = உன்னுடைய அருள் கைகூடிக் கிடைக்க உருகிலி = உருகாதவன் அயர்கிலி = (பக்தியால்) தளர்ச்சி உறாதவன் (தன் வசம் அழியாதவன்) தொழுகிலி = (உன்னை) வணங்காதவன் உமை பாகர் = உமா தேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான்


மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மடமாதர்

மகிழும் மகவு என = மகிழ்கின்ற குழந்தையே என்று அறைகிலி = கூறாதவன் நிறைகிலி = மன நிறைவு இல்லாதவன் மடமை = பேதைமை குறைகிலி = குறையாதவன் மதி உணர்வு அறிவிலி = அறிவு தெளிவு பெறாதவன் வசனம் அற = பேச்சு அற உறு = பொருந்திய மவுனமொடு உறைகிலி = மவுன நிலையில் இல்லாதவன் மட மாதர் = அழகிய பெண்களின்

மயம் அது அடரிட இடர் உறும் அடியனும்
இனிமை தரும் உனது அடியவர் உடன் உற
மருவ அருள் தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே

மயம் அது = அழகு அடரிட = மனதில் செறிந்து இடம் கொள்ள இடர் உறும் அடியனும் = அதனால் துன்பம் அடைகின்றவனான அடியேனும் இனிமை தரும் உனது அடியவருடன் = இன்ப சுகம் தருகின்ற உன்னுடைய அடியார்களோடு உற மருவ = கூடியிருக்கும் அருள் தரு கிருபையின் = திருவருளைத் தருவதான உனது கிருபைக்கு மலிகுவது = பாத்திரனாகிருக்க ஒரு நாளே = ஒரு நாள் கிடைக்குமோ?

சிகர தன கிரி குற மகள் இனிது உற
சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறு முக நிறை தரும் அருள் நீத

சிகர = உயர்ந்த தன கிரி = மலை போன்ற கொங்கையை உடைய குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளி இனிது உற = இனிமை பெற சிலதன் நலம் உறு = தோழன் (ஏவல் செய்வோன்) போன்று சில பல வசன அமுது இறைய = பேச்சாகிய அமுதத்தை வீசிப் பரப்பி அறை பயில் உறு = (அவளுடன்) பேசப் பயின்ற அறு முக = ஆறு முகனே. நிறைதரு = நிறைந்து விளங்கும் அருள் நீத = அருள் கொண்ட நீதிமானே.

சிரண புரணம் விதரண விசிரவண
சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத

சிரண = (சீர்+அண) பெருமை பொறுந்திய புரண = நிறைவே, பழமையானபரே விதரண = இரக்க குணத்தனே விசிரவண = நிரம்ப கேள்வி உடையவனே. சரண் = அடைக்கலம் புரியத்தக்க உ = இறைவனே சரவண பவ குகனே = சரவண மடுவில் தோன்றியவனே, குகனே. சயன் = சிவபெருமானுடைய ஒளி திரவ = ஒளி பாய்ந்தவனே. பர = பரனே, மேலானவரே அதி சிரம் = மிகுந்த மேன்மை உடையவனே. மறை முடிவு உறு பொருள் நீத = வேதத்தின் முடிவான பொருளான நீதியனே.

அகர உகர தீ மகர தீ சிகர தீ
யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரண் உறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே

அகர = அகரம் போன்ற முதற் பொருளே உகர தீ = சிவ சக்தியாய் விளங்கும் நல் அறிவே மகர = ஆணவ மலத்தை தீ = தகிப்பவனே சிகர தீ = சிவமாகிய அறிவே யகர = ஜீவான்மாவில் விளங்குபவனே அருளதி = அதிக அருளே தெருளதி = அதிக ஞானமே வலவல = மிக்க வலிமை வாய்ந்த அரணம் = காவல் கோட்டை முரண் உறு = பகைமை பூண்ட. அசுரர்கள் = அசுரர்களும் கெட அயில் விடுவோனே = அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே.


அழகும் இலகிய புலமையும் மகிமையும்
வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே.

அழகும் = சிறப்பும் இலகிய புலமையும் = விளங்கும் கல்வி ஞானமும் மகிமையும் = பெருமையும் வளமும் = வளப்பமும் உறை = நிறைந்திருக்கும் திரு மயிலையில் = மயிலாப்பூரில் அநுதினம் = நாள் தோறும் அமரும் = வீற்றிருக்கும் அரகர = ஹர ஹர என்னும் ஒலிக்கு உரிய சிவ சுத = சிவனுடைய குமாரனே அடியவர் பெருமாளே = அடியவர் தம் பெருமாளே.

சுருக்க உரை

இரு வினைகள் ஒழிய உனது பாதங்களை நினையாதவனும், உன்னை
வணங்காதவனும், பேதையுமாகிய அடியேன் உன் அடியார்களுடன் கூடி இருக்கும் அருளுக்குப் பாத்திரமாவது என்று கிடைக்குமோ.

வள்ளியுடன் இனிய பேச்சுக்களை வீசிய அறுமுக வேளே. பெருமையும் தயாள குணமும் கேள்வியும் உடைவனே. உன்னை அடைக்கலம் புகுதற்கு உரியவனே. சிவபெருமான் குமாரனே. அகர, உகர, மகர, யகர சக்திகள் அடங்கிய சிவமாகிய அறிவே. அசுரர்கள் அழிய வேலைச்  செலுத்தினவனே. மயிலையில் நிலையாக வீற்றிருக்கும் பெருமாளே.  உனது கிருபை எனக்கு என்று கிடைக்கும்?

விளக்கக் குறிப்புகள்
  
1. உனது அருள் இவர உருகிலி....
இவர்தல் = பொருந்துதல்.
மாதிவர் பாகன் மறை பயின்ற..............மாணிக்கவாசகர் திருவாசகம்

2. சரணு சரவணபவ குக...
சரண்+உ = சரணு. உ = இறைவன்.
உண்ணா முலை உ மைந்து ஆசு அரண்      --- .........கந்தர் அந்தாதி

     

     

256.அறமிலா

256
திருமயிலை
 
               தனதனாதன தானன தந்தத்      தனதான

 அறமிலாவதி பாதக வஞ்சத்               தொழிலாலே
        அடியனேன்மெலி வாகிம னஞ்சற்   றிளையாதே
 திறல்குலாவிய சேவடி வந்தித்               தருள்கூடத்
       தினமுமேமிக வாழ்வுறு மின்பைத்      தருவாயே
 விறல்நிசாசரர் சேனைக ளஞ்சப்         பொரும்வேலா
      விமலமாதபி ராமித ருஞ்செய்ப்      புதல்வோனே
 மறவர்வாணுதல் வேடைகொ ம்பொற்         புயவீரா
       மயிலைமாநகர் மேவிய கந்தப்        பெருமாளே
 
   பதம் பிரித்தல்

அறம் இல் அதி பாதக வஞ்ச தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே

அறம் இலா = தருமமே இல்லாத அதி பாதக = மிகவும்
பாவகரமான வஞ்சத் தெழிலாலே = வஞ்சனை கொண்ட செயல்களாலே அடியனேன் மெலிவாகி =
அடியவனாகிய நான் தளர்ச்சி உற்று மனம் சற்று இளையாதே = மனம் கொஞ்சமும் சோர்வு அடையாமல்

திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட
தினமுமே மிக வாழ்வு உறும் இன்பை  தருவாயே

திறல் குலாவிய = வெற்றி விளங்கும் சேவடி வந்தித்து = திருவடிகளைப் போற்றி வணங்கி அருள் கூட = உனது திருவருள் கூடுமாறு தினமுமே மிக வாழ்வுறு = நாள் தோறும் நல்ல வாழ்வு தரும் இன்பத்தைத் தருவாயே = இன்பத்தைத் தந்து அருளுக.


விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா
விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே

விறல் = வீரம் வாய்ந்த நிசாசரர் = அசுரர்களுடைய
சேனைகள் அஞ்ச = சேனைகள் பயப்படும்படி பொரும் வேலா = போர் செய்த வேலனே. விமல = பரிசுத்த மூர்த்தியே மாது அபிராமி = தாய் அபிராமி தரும் = பெற்ற செய்ப் புதல்வோனே = செந்நிறத்த குழந்தையே

மறவர் வாள் நுதல் வேடை கொளும் பொன் புய வீரா
மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே.

மறவர் = வேடர்களுடைய வாள் = ஒளி பெற்ற நுதல் = நெற்றி உடைய (வள்ளி  நாயகி) வேடை கொள்ளும் = விருப்பம் கொள்கின்ற பொன் புய வீரா = அழகிய புய வீரனே மயிலை மா நகர் மேவிய = மயிலை மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

தருமமே இல்லாத பாவமும் வஞ்சகமும் கொண்ட செயல்களால் அடியவனாகிய நான், மெலிந்து மனம் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய திருவடியைப் போற்றி வணங்கி, உன் திருவடியைக் கூடுமாறு நல்ல வாழ்வைத் தந்து அருள வேண்டும்.

வீரம் வாய்ந்த அசுரர்களுடைய சேனைகள் அஞ்ச சண்டை செய்த வேலனே,பரிசுத்த மூர்த்தியே, வேடர் பெண்ணான வள்ளியின் மீது பற்று கொண்ட புய வீரனே, மயிலை நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே, உனது திருவடி இன்பத்தைத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

 செய்ப் புதல்வோனே....
பொய்யா மறையோனும் பூமி அளந்தோனும் போற்ற மன்னிச்
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே
                                                                               ---- சம்பந்தர் தேவாரம்.
  புதல்வோனே .............
முருகோனே - என்ற பொருளில் வந்தது.


” tag:
256
திருமயிலை
 
               தனதனாதன தானன தந்தத்      தனதான

 அறமிலாவதி பாதக வஞ்சத்               தொழிலாலே
        அடியனேன்மெலி வாகிம னஞ்சற்   றிளையாதே
 திறல்குலாவிய சேவடி வந்தித்               தருள்கூடத்
       தினமுமேமிக வாழ்வுறு மின்பைத்      தருவாயே
 விறல்நிசாசரர் சேனைக ளஞ்சப்         பொரும்வேலா
      விமலமாதபி ராமித ருஞ்செய்ப்      புதல்வோனே
 மறவர்வாணுதல் வேடைகொ ம்பொற்         புயவீரா
       மயிலைமாநகர் மேவிய கந்தப்        பெருமாளே
 
   பதம் பிரித்தல்

அறம் இல் அதி பாதக வஞ்ச தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே

அறம் இலா = தருமமே இல்லாத அதி பாதக = மிகவும்
பாவகரமான வஞ்சத் தெழிலாலே = வஞ்சனை கொண்ட செயல்களாலே அடியனேன் மெலிவாகி =
அடியவனாகிய நான் தளர்ச்சி உற்று மனம் சற்று இளையாதே = மனம் கொஞ்சமும் சோர்வு அடையாமல்

திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட
தினமுமே மிக வாழ்வு உறும் இன்பை  தருவாயே

திறல் குலாவிய = வெற்றி விளங்கும் சேவடி வந்தித்து = திருவடிகளைப் போற்றி வணங்கி அருள் கூட = உனது திருவருள் கூடுமாறு தினமுமே மிக வாழ்வுறு = நாள் தோறும் நல்ல வாழ்வு தரும் இன்பத்தைத் தருவாயே = இன்பத்தைத் தந்து அருளுக.


விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா
விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே

விறல் = வீரம் வாய்ந்த நிசாசரர் = அசுரர்களுடைய
சேனைகள் அஞ்ச = சேனைகள் பயப்படும்படி பொரும் வேலா = போர் செய்த வேலனே. விமல = பரிசுத்த மூர்த்தியே மாது அபிராமி = தாய் அபிராமி தரும் = பெற்ற செய்ப் புதல்வோனே = செந்நிறத்த குழந்தையே

மறவர் வாள் நுதல் வேடை கொளும் பொன் புய வீரா
மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே.

மறவர் = வேடர்களுடைய வாள் = ஒளி பெற்ற நுதல் = நெற்றி உடைய (வள்ளி  நாயகி) வேடை கொள்ளும் = விருப்பம் கொள்கின்ற பொன் புய வீரா = அழகிய புய வீரனே மயிலை மா நகர் மேவிய = மயிலை மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

தருமமே இல்லாத பாவமும் வஞ்சகமும் கொண்ட செயல்களால் அடியவனாகிய நான், மெலிந்து மனம் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய திருவடியைப் போற்றி வணங்கி, உன் திருவடியைக் கூடுமாறு நல்ல வாழ்வைத் தந்து அருள வேண்டும்.

வீரம் வாய்ந்த அசுரர்களுடைய சேனைகள் அஞ்ச சண்டை செய்த வேலனே,பரிசுத்த மூர்த்தியே, வேடர் பெண்ணான வள்ளியின் மீது பற்று கொண்ட புய வீரனே, மயிலை நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே, உனது திருவடி இன்பத்தைத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

 செய்ப் புதல்வோனே....
பொய்யா மறையோனும் பூமி அளந்தோனும் போற்ற மன்னிச்
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே
                                                                               ---- சம்பந்தர் தேவாரம்.
  புதல்வோனே .............
முருகோனே - என்ற பொருளில் வந்தது.