F

படிப்போர்

Monday 16 November 2015

276.சதுரத்தரை

276
திருவேட்களம்
(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது)

             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன    தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
  கதிரொத்திட ஆக்கிய கோளகை
  தழையச்சிவ பாக்கிய நாடக             அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
  மலமற்றிட வாட்டிய ஆறிரு
  சயிலக்குயில் மீட்டிய தோளொடு    முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
  மயிலின்புற நோக்கிய னாமென
  கருணைக்கடல் காட்டிய கோலமும் டியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
  யவர்முத்தமி ழாற்புக வேபர
  கதிபெற்றிட நோக்கிய பார்வையு   மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
  நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
  சிதறக்கட லார்ப்புற வேயயில்   விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
  பதசத்தினி மூத்தவி நாயகி
  செகமிப்படி தோற்றிய பார்வதி   யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
  விகடத்துற வாக்கிய மாதவன்
  விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
  கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
  விறல்மெய்த்திரு வேட்கள மேவிய   பெருமாளே

பதம் பிரித்து உரை

சதுர தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி

சதுர = நான்கு இதழ் கொண்டதாய் தரை நோக்கிய = தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவொடு = (மூலாதாரக்) கமலம் (முதல்) கதிர் ஒத்திட ஆக்கிய = முச்சுடர்களால் ஆன கோளகை = மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) தழைய = குளிர்ந்து தழைய சிவ பாக்கிய = சிவப் பேற்றைத் தருவதான நாடக அநுபூதி = நாடக பெரும்பேறு ஆகிய

சரண கழல் காட்டியே என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்

சரணக் கழல் காட்டி = திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி என் ஆணவ மலம் = என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மலங்கள் அற்றிட = தொலைந்து போய் வாட்டிய = கெடுத்து ஒழித்த ஆறிரு = (உனது) பன்னிரண்டு சயிலக் குலம் ஈட்டிய = சிறந்த மலைகள் போன்ற தோளொடு = தோள்களையும் முகம் ஆறும் = ஆறு முகங்களையும்

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை

கதிர் சுற்று = ஒளி சுற்றிலும் பரவி உக நோக்கிய பதமும் = (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும் மயிலின் புறம் நோக்கியனாம் என = மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய = கருணைக் கடலைக் காட்டி அருளிய கோலமும் = திருக்கோலத்தையும் அடியேனை = அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே

கனகத்தினும் = பொன்னைக் காட்டிலும் இனிய நோக்கி இனிதாய் = பார்வையுடன் அடியவர் = அடியவர்கள் முத்தமிழால் புகவே = முத்தமிழ் கொண்டு பாடிப் புகவும் பர கதி பெற்றிட = (நான்) மேலான நற் கதியைப் பெறவும் நோக்கிய பார்வையும் மறவேனே = அருள் மிக்க பார்வையையும் (நான்) மறவேன்

சிதற தரை நால் திசை பூதர(ம்)
நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே

தரை சிதற = பூமி அதிர நால் திசை பூதரம் = நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிய = நெரிந்து பொடிபட பறை மூர்க்கர்கள் = பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் மா முடி = பெரிய முடிகள் சிதற = சிதறுண்டு விழ கடல் ஆர்ப்புறவே = கடல் ஒலி செய்து வாய்விட அயில்
விடுவோனே = வேலைச் செலுத்தியவனே

சிவ பத்தினி கூற்றினை மோதிய
பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா

சிவ பத்தினி = சிவனது பத்தினியும் கூற்றினை மோதிய = யமனை உதைத்த பத = பாதங்களைக் கொண்ட சத்தினி = சத்தி வாய்ந்தவளும் மூத்த = யாவர்க்கும் மூத்தவளும் விநாயகி = (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும் செகம் இப்படி தோற்றிய = அண்டங்களை இவ்வாறு படைத்தவளுமாகிய பார்வதி அருள் பாலா = உமா தேவி ஈன்ற பாலனே

விதுரற்கும் அரா கொடி யானையும்
விகட துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே

விதுரற்கும் = விதுரனுக்கும் அராக் கொடியானையும் = பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும் விகட = (மனம்) வேறுபடும்படியான துறவு = பிரிவினையை ஆக்கிய = உண்டு பண்ணிய மாதவன் = கண்ணபிரான் விசையற்கு = அருச்சுனனுடைய உயர் = பெரிய தேர்ப் பரி = தேர்க் குதிரைகளை ஊர்பவன் மருகோனே = (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகோனே = மருகனே

வெளி எண் திசை சூர் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே

வெளி எட்டு திசை = வெளியிலே எட்டுத் திக்குகளிலும் சூர்ப் பொருது ஆடிய = சூரனாய் நின்று போர் செய்து கொடி கைக்கொடு = கொடியைக் கையிலேந்தி கீர்த்தி உலாவிய = புகழ் விளங்க உலவிய (பெருமாளே) விறல் மெய்த்திரு= வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் மேவிய பெருமாளே = திருவேட்களம் என்னும் தலத்தில் வீfற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவோடு ஆக்கிய ஆறு ஆதார நிலைகளெல்லாம் தழைத்த சிவப் பேற்றைத் தரும் திருவடிக் கழலை எனக்குக் காட்டி, எனது ஆணவ மலம் தொலைய, உனது பன்னிரு தோள்களையும், ஆறு முகங்களையும், திருவடியையும் மயில் மீது வந்து அருளிய திருக் கோலத்தையும், முத்தமிழில் உன் புகழைப் பாடி, நான் நற்கதியைப் பெறவும் அருள் செய்ததை மறவேன்
மலைகள் பொடிபடவும், கடல் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சிவனுடைய பத்தினியும், நமனை உதைக்கும் சக்தி வாய்ந்தவளும், அடியார்கள் இடர்களை நீக்குபவளும் ஆகிய பார்வதியின் மகனே திருமாலின் மருகனே சூரனுடன் போர் செய்து கோழிக் கொடியைக் கையிலேந்தி விளங்கும் பெருமாளே திருவேட்களம் என்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே நீ காட்சி அளித்ததை என்றும் மறவேன்

விளக்கக் குறிப்புகள்

1 சிவபத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
கூற்றுவனைக் காய்ந்தஅபிராமி மனதாரஅருள் கந்தவேளே
                                                      திருப்புகழ் -வாட்டியெனை 
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்       திருப்புகழ் ஏட்டின்விதி
யமனை உதித்தது தேவியின் கால்களே என்பது அருணகிரிநாதரின் கூற்று
2 செகமிப்படி தோற்றிய பார்வதி
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்   -  திருப்புகழ் தொடத்துளக்கி

3 சூர்ப் பொருதாடிய கொடியைக் கொடு
சூரனுடைய இரு பிளவில் ஒன்று சேவலாகி வர, முருக வேள் அதனைக் கொடியாக நியமித்தார்





” tag:
276
திருவேட்களம்
(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது)

             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன
             தனதத்தன தாத்தன தானன    தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
  கதிரொத்திட ஆக்கிய கோளகை
  தழையச்சிவ பாக்கிய நாடக             அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
  மலமற்றிட வாட்டிய ஆறிரு
  சயிலக்குயில் மீட்டிய தோளொடு    முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
  மயிலின்புற நோக்கிய னாமென
  கருணைக்கடல் காட்டிய கோலமும் டியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
  யவர்முத்தமி ழாற்புக வேபர
  கதிபெற்றிட நோக்கிய பார்வையு   மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
  நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
  சிதறக்கட லார்ப்புற வேயயில்   விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
  பதசத்தினி மூத்தவி நாயகி
  செகமிப்படி தோற்றிய பார்வதி   யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
  விகடத்துற வாக்கிய மாதவன்
  விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
  கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
  விறல்மெய்த்திரு வேட்கள மேவிய   பெருமாளே

பதம் பிரித்து உரை

சதுர தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி

சதுர = நான்கு இதழ் கொண்டதாய் தரை நோக்கிய = தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவொடு = (மூலாதாரக்) கமலம் (முதல்) கதிர் ஒத்திட ஆக்கிய = முச்சுடர்களால் ஆன கோளகை = மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்) தழைய = குளிர்ந்து தழைய சிவ பாக்கிய = சிவப் பேற்றைத் தருவதான நாடக அநுபூதி = நாடக பெரும்பேறு ஆகிய

சரண கழல் காட்டியே என் ஆணவ
மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்

சரணக் கழல் காட்டி = திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி என் ஆணவ மலம் = என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மலங்கள் அற்றிட = தொலைந்து போய் வாட்டிய = கெடுத்து ஒழித்த ஆறிரு = (உனது) பன்னிரண்டு சயிலக் குலம் ஈட்டிய = சிறந்த மலைகள் போன்ற தோளொடு = தோள்களையும் முகம் ஆறும் = ஆறு முகங்களையும்

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை

கதிர் சுற்று = ஒளி சுற்றிலும் பரவி உக நோக்கிய பதமும் = (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும் மயிலின் புறம் நோக்கியனாம் என = மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய = கருணைக் கடலைக் காட்டி அருளிய கோலமும் = திருக்கோலத்தையும் அடியேனை = அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே

கனகத்தினும் = பொன்னைக் காட்டிலும் இனிய நோக்கி இனிதாய் = பார்வையுடன் அடியவர் = அடியவர்கள் முத்தமிழால் புகவே = முத்தமிழ் கொண்டு பாடிப் புகவும் பர கதி பெற்றிட = (நான்) மேலான நற் கதியைப் பெறவும் நோக்கிய பார்வையும் மறவேனே = அருள் மிக்க பார்வையையும் (நான்) மறவேன்

சிதற தரை நால் திசை பூதர(ம்)
நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே

தரை சிதற = பூமி அதிர நால் திசை பூதரம் = நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிய = நெரிந்து பொடிபட பறை மூர்க்கர்கள் = பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் மா முடி = பெரிய முடிகள் சிதற = சிதறுண்டு விழ கடல் ஆர்ப்புறவே = கடல் ஒலி செய்து வாய்விட அயில்
விடுவோனே = வேலைச் செலுத்தியவனே

சிவ பத்தினி கூற்றினை மோதிய
பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா

சிவ பத்தினி = சிவனது பத்தினியும் கூற்றினை மோதிய = யமனை உதைத்த பத = பாதங்களைக் கொண்ட சத்தினி = சத்தி வாய்ந்தவளும் மூத்த = யாவர்க்கும் மூத்தவளும் விநாயகி = (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும் செகம் இப்படி தோற்றிய = அண்டங்களை இவ்வாறு படைத்தவளுமாகிய பார்வதி அருள் பாலா = உமா தேவி ஈன்ற பாலனே

விதுரற்கும் அரா கொடி யானையும்
விகட துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே

விதுரற்கும் = விதுரனுக்கும் அராக் கொடியானையும் = பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும் விகட = (மனம்) வேறுபடும்படியான துறவு = பிரிவினையை ஆக்கிய = உண்டு பண்ணிய மாதவன் = கண்ணபிரான் விசையற்கு = அருச்சுனனுடைய உயர் = பெரிய தேர்ப் பரி = தேர்க் குதிரைகளை ஊர்பவன் மருகோனே = (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகோனே = மருகனே

வெளி எண் திசை சூர் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே

வெளி எட்டு திசை = வெளியிலே எட்டுத் திக்குகளிலும் சூர்ப் பொருது ஆடிய = சூரனாய் நின்று போர் செய்து கொடி கைக்கொடு = கொடியைக் கையிலேந்தி கீர்த்தி உலாவிய = புகழ் விளங்க உலவிய (பெருமாளே) விறல் மெய்த்திரு= வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம் மேவிய பெருமாளே = திருவேட்களம் என்னும் தலத்தில் வீfற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவோடு ஆக்கிய ஆறு ஆதார நிலைகளெல்லாம் தழைத்த சிவப் பேற்றைத் தரும் திருவடிக் கழலை எனக்குக் காட்டி, எனது ஆணவ மலம் தொலைய, உனது பன்னிரு தோள்களையும், ஆறு முகங்களையும், திருவடியையும் மயில் மீது வந்து அருளிய திருக் கோலத்தையும், முத்தமிழில் உன் புகழைப் பாடி, நான் நற்கதியைப் பெறவும் அருள் செய்ததை மறவேன்
மலைகள் பொடிபடவும், கடல் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சிவனுடைய பத்தினியும், நமனை உதைக்கும் சக்தி வாய்ந்தவளும், அடியார்கள் இடர்களை நீக்குபவளும் ஆகிய பார்வதியின் மகனே திருமாலின் மருகனே சூரனுடன் போர் செய்து கோழிக் கொடியைக் கையிலேந்தி விளங்கும் பெருமாளே திருவேட்களம் என்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே நீ காட்சி அளித்ததை என்றும் மறவேன்

விளக்கக் குறிப்புகள்

1 சிவபத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
கூற்றுவனைக் காய்ந்தஅபிராமி மனதாரஅருள் கந்தவேளே
                                                      திருப்புகழ் -வாட்டியெனை 
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்       திருப்புகழ் ஏட்டின்விதி
யமனை உதித்தது தேவியின் கால்களே என்பது அருணகிரிநாதரின் கூற்று
2 செகமிப்படி தோற்றிய பார்வதி
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்   -  திருப்புகழ் தொடத்துளக்கி

3 சூர்ப் பொருதாடிய கொடியைக் கொடு
சூரனுடைய இரு பிளவில் ஒன்று சேவலாகி வர, முருக வேள் அதனைக் கொடியாக நியமித்தார்





Friday 13 November 2015

275. வண்டுபோல்

275
திருவெஞ்சமாக்கூடல்

(கருவூருக்கு அருகில் 19 கிமீ தொலைவில்)

விக்ருதீஸ்வ்ரர் திருக்கோயிலில்  வெஞ்சமாக் கூடற்பெருமான் பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறான்

                               தந்தனாத் தானத்    தனதான

வண்டுபோற் சாரத்              தருள்தேடி
      மந்திபோற் காலப்        பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்            துடனாடிச்
      சிந்தைமாய்த் தேசித்     தருள்வாயே
தொண்டராற் காணப்        பெறுவேனா
      துங்கவேற் கானத்      துறைவோனே
மிண்டராற் காணக்          கிடையோனே
      வெஞ்சமாக் கூடற்       பெருமாளே

பதம் பிரித்தல்

வண்டு போல் சாரத்து அருள் தேடி
வண்டு போல் - வண்டு எவ்வாறு
சாரத்து - மலர்த் தேனை (நாடிப் பருகிக் களிக்கின்றதோ) அருள் தேடி - அவ்வாறு நான் உனது திருவருள் என்னும் தேனை நாடவும்

மந்தி போல் கால பிணி சாடி


மந்தி போல் - குரங்கு எவ்வாறு மரக் கிளைகளத் தாண்டித் திரிய வல்லதாய் இருக்கின்றதோ அவ்வாறு
காலப் பிணி சாடி - யமன் என்னைப் பாசத்தினால் கட்டுவதை சாடி - தாண்ட வல்லவன் ஆகுமாறும்


செண்டு போல் பாசத்துடன் ஆடி

செண்டு போல் - செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு
பாசத்துடன் ஆடி - நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே

சிந்தை மாய்த்தே - என் மனத்தே நீ அழிய வைத்து
சித்து அருள்வாயே - சும்மா இருக்கும்அறிவைஅருள்வாயே

தொண்டரால் காண பெறுவோனே

தொண்டரால் - அடியார்களால்
காணப் பெறுவோனே - காணப் பெறும்படி இருப்பவனே

துங்க வேற்கானத்து உறைவோனே
துங்க - பரிசுத்தமான
வேற்கானத்து - திருவேற்காடு என்னும் தலத்தில்
உறைவோனே - வீற்றிருப்பவனே

மிண்டரால் காண கிடையானே

மிண்டரால் - ஆணவம் கொண்டவர்களால்
காணக் கிடையானே - காணக் கூடாதவனே

வெஞ்ச மா கூடல் பெருமாளே

வெஞ்சமாக் கூடல் பெருமாளே - வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

வண்டு மலர்த் தேனைப் பருகிக் களிப்பதைப் போல் நானும் உன் திருவருள் தேனை நாடவும், குரங்கு எவ்வாறு மரக் கிளையைத் தாண்டித் திரிகின்றதோ, அவ்வாறே நானும் யமன் பாசத்தினால் என்னைக் கட்டுவதைத் தாண்டும் வலிமை பெறவும், செண்டாயுதம் எவ்வாறு பகையை அழிக்கின்றதோ, அவ்வாறு நானும் பாசங்களுடன் போறாடி வெல்லுமாறும், என் மனத்தை மாய்த்து, சும்மா இருக்கும் நிலையைத் தந்து மெய்யறிவைப் பெறுவேனோ?

அடியார்களால் காணப் பெறுவோனே பரிசுத்தமான திருவேற்காட்டில் வீற்றிருப்பவனே ஆணவ மலம் மிகுந்தவர்களால் காண முடியாதவனே வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குச் சித்து அருள்வாயக

விளக்கக் குறிப்புகள்

1 வண்டு போல் சாரத்து

இறைவன் திருவருளைப் பெறுதற்கு வண்டு தான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு தூது பாடுவார்கள் அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்க வேண்டும் என்பது கருத்து

2 செண்டு - பிரம்பை போல் நுணி வளைந்திருக்கும் ஓர் ஆயுதம். பழங்கால தமிழர்களின் ஒரு போர் கருவி. 

இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே திருப்புகழ்  

ஐயனார்க்கு இந்த ஆயுதம் உண்டு. (கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி). மன்னார்குடி ராஜகோபால சுவாமி, மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கைகளில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம்

3தொண்டரால் காணப் பெறுவேனோ

பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
காணும் காரோணத்தானே ......                             சம்பந்தர் தேவாரம்



” tag:
275
திருவெஞ்சமாக்கூடல்

(கருவூருக்கு அருகில் 19 கிமீ தொலைவில்)

விக்ருதீஸ்வ்ரர் திருக்கோயிலில்  வெஞ்சமாக் கூடற்பெருமான் பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறான்

                               தந்தனாத் தானத்    தனதான

வண்டுபோற் சாரத்              தருள்தேடி
      மந்திபோற் காலப்        பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்            துடனாடிச்
      சிந்தைமாய்த் தேசித்     தருள்வாயே
தொண்டராற் காணப்        பெறுவேனா
      துங்கவேற் கானத்      துறைவோனே
மிண்டராற் காணக்          கிடையோனே
      வெஞ்சமாக் கூடற்       பெருமாளே

பதம் பிரித்தல்

வண்டு போல் சாரத்து அருள் தேடி
வண்டு போல் - வண்டு எவ்வாறு
சாரத்து - மலர்த் தேனை (நாடிப் பருகிக் களிக்கின்றதோ) அருள் தேடி - அவ்வாறு நான் உனது திருவருள் என்னும் தேனை நாடவும்

மந்தி போல் கால பிணி சாடி


மந்தி போல் - குரங்கு எவ்வாறு மரக் கிளைகளத் தாண்டித் திரிய வல்லதாய் இருக்கின்றதோ அவ்வாறு
காலப் பிணி சாடி - யமன் என்னைப் பாசத்தினால் கட்டுவதை சாடி - தாண்ட வல்லவன் ஆகுமாறும்


செண்டு போல் பாசத்துடன் ஆடி

செண்டு போல் - செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு
பாசத்துடன் ஆடி - நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்

சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே

சிந்தை மாய்த்தே - என் மனத்தே நீ அழிய வைத்து
சித்து அருள்வாயே - சும்மா இருக்கும்அறிவைஅருள்வாயே

தொண்டரால் காண பெறுவோனே

தொண்டரால் - அடியார்களால்
காணப் பெறுவோனே - காணப் பெறும்படி இருப்பவனே

துங்க வேற்கானத்து உறைவோனே
துங்க - பரிசுத்தமான
வேற்கானத்து - திருவேற்காடு என்னும் தலத்தில்
உறைவோனே - வீற்றிருப்பவனே

மிண்டரால் காண கிடையானே

மிண்டரால் - ஆணவம் கொண்டவர்களால்
காணக் கிடையானே - காணக் கூடாதவனே

வெஞ்ச மா கூடல் பெருமாளே

வெஞ்சமாக் கூடல் பெருமாளே - வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

வண்டு மலர்த் தேனைப் பருகிக் களிப்பதைப் போல் நானும் உன் திருவருள் தேனை நாடவும், குரங்கு எவ்வாறு மரக் கிளையைத் தாண்டித் திரிகின்றதோ, அவ்வாறே நானும் யமன் பாசத்தினால் என்னைக் கட்டுவதைத் தாண்டும் வலிமை பெறவும், செண்டாயுதம் எவ்வாறு பகையை அழிக்கின்றதோ, அவ்வாறு நானும் பாசங்களுடன் போறாடி வெல்லுமாறும், என் மனத்தை மாய்த்து, சும்மா இருக்கும் நிலையைத் தந்து மெய்யறிவைப் பெறுவேனோ?

அடியார்களால் காணப் பெறுவோனே பரிசுத்தமான திருவேற்காட்டில் வீற்றிருப்பவனே ஆணவ மலம் மிகுந்தவர்களால் காண முடியாதவனே வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குச் சித்து அருள்வாயக

விளக்கக் குறிப்புகள்

1 வண்டு போல் சாரத்து

இறைவன் திருவருளைப் பெறுதற்கு வண்டு தான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு தூது பாடுவார்கள் அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்க வேண்டும் என்பது கருத்து

2 செண்டு - பிரம்பை போல் நுணி வளைந்திருக்கும் ஓர் ஆயுதம். பழங்கால தமிழர்களின் ஒரு போர் கருவி. 

இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே திருப்புகழ்  

ஐயனார்க்கு இந்த ஆயுதம் உண்டு. (கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி). மன்னார்குடி ராஜகோபால சுவாமி, மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கைகளில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம்

3தொண்டரால் காணப் பெறுவேனோ

பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
காணும் காரோணத்தானே ......                             சம்பந்தர் தேவாரம்