F

படிப்போர்

Friday 2 August 2013

237. பரிவுறு

237
சேலம்
சுகவனேசுவர் திருக்கோயில் சுகவன சுப்பிரமணியரை தரிசித்து பாடிய பாடல்
      
       தனதன தானத் தனதன தானத்
        தனதன தானத்            தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
    சிலைபொரு காலுற்                  றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
    குழல்தனி யோசைத்                  தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
    தனிமிக வாடித்                      தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
    தருள்முரு காவுற்                 றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
   தொடுகும ராமுத்                  தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
    திருவளர் சேலத்                 தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
    தனிமயி லேறித்                 திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
    கிளையவி நோதப்                பெருமாளே

பதம் பிரித்தல்

பரிவு உறு நார் அற்று அழல் மதி வீச
சிலை பொரு கால் உற்று அதனாலே

பனி படு சோலை குயில் அது கூவ
குழல் தனி ஓசை தரலாலே

மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர
தனி மிக வாடி தளராதே

மனம் உற வாழ திரு மணி மார்பத்து
அருள் முருகா உற்று அணைவாயே

கிரி தனில் வேல் விட்டு இரு தொளை ஆக
தொடு குமரா முத்தமிழோனே

கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி
திரு வளர் சேலத்து அமர்வோனே

பொரு கிரி சூர கிளை அது மாள
தனி மயில் ஏறி திரிவோனே

புகர் முக வேழ கணபதியாருக்கு
இளைய விநோத பெருமாளே


பரிவு உறு = இரக்கம் கொண்ட நார் = அன்பு அற்று = சற்றும் இல்லாமல் அழல் மதி = நெருப்பை நிலவு வீச = வீசுவதாலும் சிலை = (பொதிய) மலையினின்றும் பொரு = பொருந்தி வரும் கால் = தென்றல் காற்று உற்றனாலே = மேலே படுவதாலும்

பனிபடு = குளிர்ச்சியுள்ள சோலைக் குயில் அது = சோலையில் குயில் கூவுவதாலும் குழல் = புல்லாங்குழலின் தனி ஓசை = ஒப்பற்ற இன்னிசையை தரலாலே = தருவதாலும்

மருவு இயல் மாதுக்கு = பொருந்திய தன்மையில் உள்ள இந்தப் பெண்ணின் இரு கயல் = இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் சோர = சோர்வு அடையும்படி தனி = தனியே கிடந்து மிக வாடி = மிகவும் வாட்டமுற்று தளராதே = தளர்ச்சி உறாமல்

மனம் உற = மனம் ஒருமைப்பட்டு வாழ = வாழும் பொருட்டு திரு மணி மார்பத்து = (உனது) அழகிய இரத்தின மாலை அணிந்த மார்பில் அருள் முருகா = அருள் மூர்த்தியாகிய முருகனே உற்று = நீ வந்து அணைவாயே = அணைந்து அருள்வாயாக

கிரிதனில் = கிரவுஞ்ச மலை மீது வேல் விட்டு = வேலயுதத்தைச் செலுத்தி இரு = பெரிய தொளையாக = தொளைபடும்படி தொடு குமரா = செலுத்திய குமரனே முத்தமிழோனே = முத்தமிழ்ப் பெருமானே

கிளர் ஒளி = பேரொளிச் சொருபனாகிய நாதர்க்கு = தேவனாகிய சிவ பெருமானுக்கு ஒரு = ஒப்பற்ற மகனாகி = பிள்ளையாகி திரு வளர் = செல்வம் பெருகி ஓங்கும் சேலத்து அமர்வோனே = சேலத்தில் வீற்றிருப்பவனே

பொரு கிரி = போருக்கு எழுந்த எழு கிரியும் சூரக் கிளை அது = சூரனும் அவனுடைய சுற்றத்தாரும் மாள = இறக்க தனி மயில் ஏறி = ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி திரிவோனே = (உலகை) வலம் வந்தவனே

புகர் முக = புள்ளியை உடைய் முகத்தைக் கொண்ட கணபதியாருக்கு = விநாயகப் பெருமானுக்கு இளைய பெருமாளே = தம்பியே விநோதப் பெருமாளே = அற்புதப் பெருமாளே

சுருக்க உரை

அன்பு சற்றும் இல்லாமல் நிலவு நெருப்பை வீசுவதாலும், தென்றல் காற்று மேலே படுவதாலும், சோலையில் குயில்கள் கூவுதலாலும், குழல் இன்னிசையைத் தருவதாலும், தனிமையில் இருக்கும் இந்தப் பெண்ணின் கயல் மீன் போன்ற கண்கள் சோர்ந்து வாட்டம் உறாமல், அவள் நிம்மதியாக வாழும் பொருட்டு, முருகா, நீ வந்து, அவளை அணைந்தருள்வாயாக

கிரெளஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அதைத் தொளை பட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழ்ப் பெருமாளே, பேரொளி வடிவான சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, செல்வம் பெருகி ஓங்கும் சேலத்தில் வீற்றிருப்பவனே, ஏழு கிரியும், சூரனும் அவன் சுற்றமும் இறக்க, மயில் மேல் ஏறி உலகை வலம் வந்தவனே, கணபதிக்குத் தம்பியே அற்புதப் பெருமாளே, காம நோயால் வாடும் இந்தப்  பெண்ணை அணைந்தருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்

நிலவு, தென்றல், குயில், குழல், இவை விரத தாபம் கொண்டவர்களுக்கு வேதனை தருவன.  தெரிவினில் நடவார் என்ற திருப்புகழைப் பார்க்கவும்

ஒப்புக:
தனி மயில் ஏறித் திரிவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
............... திருப்புகழ், தொடத்து
” tag:
237
சேலம்
சுகவனேசுவர் திருக்கோயில் சுகவன சுப்பிரமணியரை தரிசித்து பாடிய பாடல்
      
       தனதன தானத் தனதன தானத்
        தனதன தானத்            தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
    சிலைபொரு காலுற்                  றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
    குழல்தனி யோசைத்                  தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
    தனிமிக வாடித்                      தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
    தருள்முரு காவுற்                 றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
   தொடுகும ராமுத்                  தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
    திருவளர் சேலத்                 தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
    தனிமயி லேறித்                 திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
    கிளையவி நோதப்                பெருமாளே

பதம் பிரித்தல்

பரிவு உறு நார் அற்று அழல் மதி வீச
சிலை பொரு கால் உற்று அதனாலே

பனி படு சோலை குயில் அது கூவ
குழல் தனி ஓசை தரலாலே

மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர
தனி மிக வாடி தளராதே

மனம் உற வாழ திரு மணி மார்பத்து
அருள் முருகா உற்று அணைவாயே

கிரி தனில் வேல் விட்டு இரு தொளை ஆக
தொடு குமரா முத்தமிழோனே

கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி
திரு வளர் சேலத்து அமர்வோனே

பொரு கிரி சூர கிளை அது மாள
தனி மயில் ஏறி திரிவோனே

புகர் முக வேழ கணபதியாருக்கு
இளைய விநோத பெருமாளே


பரிவு உறு = இரக்கம் கொண்ட நார் = அன்பு அற்று = சற்றும் இல்லாமல் அழல் மதி = நெருப்பை நிலவு வீச = வீசுவதாலும் சிலை = (பொதிய) மலையினின்றும் பொரு = பொருந்தி வரும் கால் = தென்றல் காற்று உற்றனாலே = மேலே படுவதாலும்

பனிபடு = குளிர்ச்சியுள்ள சோலைக் குயில் அது = சோலையில் குயில் கூவுவதாலும் குழல் = புல்லாங்குழலின் தனி ஓசை = ஒப்பற்ற இன்னிசையை தரலாலே = தருவதாலும்

மருவு இயல் மாதுக்கு = பொருந்திய தன்மையில் உள்ள இந்தப் பெண்ணின் இரு கயல் = இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் சோர = சோர்வு அடையும்படி தனி = தனியே கிடந்து மிக வாடி = மிகவும் வாட்டமுற்று தளராதே = தளர்ச்சி உறாமல்

மனம் உற = மனம் ஒருமைப்பட்டு வாழ = வாழும் பொருட்டு திரு மணி மார்பத்து = (உனது) அழகிய இரத்தின மாலை அணிந்த மார்பில் அருள் முருகா = அருள் மூர்த்தியாகிய முருகனே உற்று = நீ வந்து அணைவாயே = அணைந்து அருள்வாயாக

கிரிதனில் = கிரவுஞ்ச மலை மீது வேல் விட்டு = வேலயுதத்தைச் செலுத்தி இரு = பெரிய தொளையாக = தொளைபடும்படி தொடு குமரா = செலுத்திய குமரனே முத்தமிழோனே = முத்தமிழ்ப் பெருமானே

கிளர் ஒளி = பேரொளிச் சொருபனாகிய நாதர்க்கு = தேவனாகிய சிவ பெருமானுக்கு ஒரு = ஒப்பற்ற மகனாகி = பிள்ளையாகி திரு வளர் = செல்வம் பெருகி ஓங்கும் சேலத்து அமர்வோனே = சேலத்தில் வீற்றிருப்பவனே

பொரு கிரி = போருக்கு எழுந்த எழு கிரியும் சூரக் கிளை அது = சூரனும் அவனுடைய சுற்றத்தாரும் மாள = இறக்க தனி மயில் ஏறி = ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி திரிவோனே = (உலகை) வலம் வந்தவனே

புகர் முக = புள்ளியை உடைய் முகத்தைக் கொண்ட கணபதியாருக்கு = விநாயகப் பெருமானுக்கு இளைய பெருமாளே = தம்பியே விநோதப் பெருமாளே = அற்புதப் பெருமாளே

சுருக்க உரை

அன்பு சற்றும் இல்லாமல் நிலவு நெருப்பை வீசுவதாலும், தென்றல் காற்று மேலே படுவதாலும், சோலையில் குயில்கள் கூவுதலாலும், குழல் இன்னிசையைத் தருவதாலும், தனிமையில் இருக்கும் இந்தப் பெண்ணின் கயல் மீன் போன்ற கண்கள் சோர்ந்து வாட்டம் உறாமல், அவள் நிம்மதியாக வாழும் பொருட்டு, முருகா, நீ வந்து, அவளை அணைந்தருள்வாயாக

கிரெளஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அதைத் தொளை பட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழ்ப் பெருமாளே, பேரொளி வடிவான சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, செல்வம் பெருகி ஓங்கும் சேலத்தில் வீற்றிருப்பவனே, ஏழு கிரியும், சூரனும் அவன் சுற்றமும் இறக்க, மயில் மேல் ஏறி உலகை வலம் வந்தவனே, கணபதிக்குத் தம்பியே அற்புதப் பெருமாளே, காம நோயால் வாடும் இந்தப்  பெண்ணை அணைந்தருள்வாயாக

விளக்கக் குறிப்புகள்

நிலவு, தென்றல், குயில், குழல், இவை விரத தாபம் கொண்டவர்களுக்கு வேதனை தருவன.  தெரிவினில் நடவார் என்ற திருப்புகழைப் பார்க்கவும்

ஒப்புக:
தனி மயில் ஏறித் திரிவோனே
திருத்தி விட்டொரு நொடியினில் வலம் வரு மயில் வீரா
............... திருப்புகழ், தொடத்து

No comments:

Post a Comment

Your comments needs approval before being published