F

படிப்போர்

Friday 9 August 2013

242.சுருதி யாயிய

242
திருக்குடவாயில்
 பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய்
                                      
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன          தனதான

சுருதி யாயிய லாயியல் நீடிய
  தொகுதி யாய்வரு வாய்வெகு பாஷைகொள்
  தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு          துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
  விரியு மாய்விளை வாயருள் ஞானிகள்
  சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு                  சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
  பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
  பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு                  பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
  மறியொ ணாததை நீகுரு வாயிது
  பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு               பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
  கருதொ ணாவகை யோரர சாய்வரு
  கவுணி யோர்குல வேதிய னாயுமை                   கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலணு                                    
  மதலை யாய்மிகு பாடலின் மீறிய
  கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்               கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
  நிறைய தாய்விட நீறிட வேசெய்து
  கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை        குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
  யியலை யாரண வூரென நேர்செய்து
  குடசை மாநகர் வாழ்வுற மேவிய                   பெருமாளே

பதம் பிரித்தல்

சுருதியாய் இயலாய் இயல் நீடிய
தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்

சுருதியாய் = வேதமாய் இயலாய் = இயல் தமிழாய் இயல் நீடிய = அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான தொகுதி = பகுதியாய் வெகுவாய் = பலவுமாய் வெகு பாஷை = பல மொழிகளில் கொள் = கொள்ளப்பட்ட தொடர்புமாய் = சம்பத்தப்பட்டதாய் அடியாய் = அடிப்படையாய் நடுவாய் = நடுவாய் மிகு துணையாய் = மிக்க துணையாய் மேல் = பின்னும்

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு
விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்

துறவுமாய் = அனைத்தையும் துறந்த நிலையதாய் அறமாய் = தருமமாய் நெறியாய் = நல்லொழுக்க வழியாய் மிகு விரிவுமாய் = மிகுந்த விரிவு உடையதாய் விளைவாய் = விளைவுப் பொருளாய் அருள் ஞானிகள் = அருள் நிறைந்த ஞானிகள் சுகமுமாய் = அனுபவிக்கும் சுகப் பொருளாய் முகிலாய் = மேகமாய் மழையாய் = மழையாய் எழு சுடர் வீசும் = ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும்

பருதியாய் மதியாய் நிறை தாரகை
பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்

பருதியாய் = சூரியனாய் மதியாய் = சந்திரனாய் நிறை தாரகை பலவுமாய் = நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய் வெளியாய் = ஆகாய வெளியாய் ஒளியாய் = (ஸ்வயம்) சோதியாய் எழு = உண்டாகின்ற பகல் இராவு இலையாய் = பகலும் இரவும் இல்லாததாய் நிலையாய் = நிலைத்துள்ளதாய் மிகு பரமாகும் = மிக்க மேலான பொருளான

பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்

பரம மாயையின் = பெரிய மாயையின் நேர்மையை = உண்மைத் தத்துவத்தை யாவரும் அறிய ஒணாததை = எவரும் அறிய முடியாததை நீ குருவாய் = நீ குருவாக வந்து இது பகருமாறு செய்தாய் = (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய் முதல் நாள் உறு பயனோ தான் = (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?

கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
கருத ஒணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார

கருதும் = யாவராலும் கருதிப் போற்றப்படும் ஆறிரு தோள் = பன்னிரு தோள்கள் மயில், வேல் இவை = மயில், வேல் இவற்றை கருத ஒண் வகை = எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து) அரசாய் வரு = (சீர்காழியில்) அரசாக வந்த கவுணியோர் குல வேதியன்=கவுணிய குல ( கௌண்டிண்ய கோத்திர )  மறை யோனாய் - வேதியானாய் உமை கன பார = பார்வதியின் மிக்க பாரமான

களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு
மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற

களப பூண் முலை ஊறிய = கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் சுரந்த பால் உணு மதலையாய் = பாலைப் பருகிய குழந்தையாய் மிகு பாடலின் மீறிய = மிக்க பாடல்கள் பாடுவதில் மேம்பட்ட கவிஞனாய் = கவித் திறன் பெற்றவனாய் விளையாடு இடம் = திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில் வாதிகள் = வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழு ஏற = கழுவில் ஏறவும்

குருதி ஆறு எழ வீதி எ(ல்)லாம் மலர்
நிறைவதாய் விட நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்

குருதி ஆறு எழ = அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும் வீதி எலாம் மலர் நிறைவதாய் விட = தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும் நீறு இடவே செய்து = திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து கொடிய மாறன் = கொடிய மனம் வாய்ந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் மெய் கூன் = கூன் பட்ட உடல் நிமிரா = நிமிர்ந்து விளங்கவும் முனை குலையா = (சமண்) பகையை அழித்து வான் = பொன்னுலகில்

குடி புகீர் என மா மதுரா புரி
இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே

குடி புகீர் என = உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என மா = சிறந்த மதுராபுரி = மதுரையின் இயலை = (முன்னிருந்த சமண்) நிலையை மாற்றி ஆரண ஊர் என நேர் செய்து = வேத புரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து குடசை மாநகர் = திருக்குட வாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வுற = வாழ்வு கொண்டு மேவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை


”பால் கொடுத்தது யார்” என தந்தை கேட்க “அவர் தான்” என தந்தைக்கு சுட்டிகாட்டும் சம்பந்தர் – கோயில் சிற்பம்







வேதமாய், தமிழாய், இயற்றமிழையும் மிக்கான பல பகுதிகளாய், பல மொழிகளின் சம்பந்தம் உடையதாய், அடியாய், நடுவாய், துறவாய், நெறியாய்விரிவாய், விரிவு உடையதாய், ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஒளியாய், ஆகாய வெளியாய், சோதியாய், பகல் இரவு இல்லாததாய், மாயையின் உண்மைத் தத்துவமாய், எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து, அதை உலகத்தாருக்குஎடுத்து ஓதுமாறு எனக்குத் திருவருள் புரிந்தது நான் முற் பிறப்பில் செய்த தவத்தின்
பயனோ?

உன்னுடைய பன்னிரு தோள்களும், மயில், வேல் இவைகளை மறைத்து, கவுணிய குலத்தைச் சேர்ந்த காழிப்பதியின் அரசனாய்த் தோன்றி, உமையின்f பாலை உண்டு, பல திருவளையாடல்கள் செய்த சமயத்தில், வாதுக்கு வந்த சமணர்களை வென்று அவர்களைக் கழுவில் ஏற்றி, பாண்டியனின் உடல் கூனையும் நீக்கி, சமண் பகையை அழித்து, தேவர்கள் பொன்னுலகத்தில் குடி போகச்செய்து, மதுரையின் பெயரை வேத புரியாக மாற்றி, திருக்குட வாயிலில் வீfற்றிருக்கும் பெருமாளே நீ குருவாய் வந்தது நான் செய்த பயன் தான்


விளக்கக் குறிப்புகள்

சம்பந்தர் வரலாறு

பால் உ(ண்)ணு மதலையாய் மிகு பாடலின் மீறிய கவிஞனாய்

7-ம் நூற்றாண்டில் சைவம் தழைப்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவதரித்த ஸ்தலம் சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஊர். சிவபாத ஹிருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார் குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, ‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவினார் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல்
தேவாரப் பதிகம் இதுதான்

உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா
நடைபெறும்

ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான் 

சமணர்களை கழுவேறிய வரலாறு பாடல் 187 விளக்கத்தில் காணலாம்                                          

கருது மாறிரு தோள்மயல் வேலிவை கருதொணா வகை
   
முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்

திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு   மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினல்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற - திருப்புகழ் நிகமமெனி
  

ஆ நீ குருவாயிது பகரு மாறு செய்தாய்
  
அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து  வியக்கின்றார்

{உலகோருக்கு எடுத்துச் சொல்லுமாறு பணித்தாயே ( குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ) என்று காஞ்சியில் இறைஞ்சினார் குடவாயிலில் இது கிடைத்தது தனக்குக் கிடைத்த பரம மாயையின் விளக்கத்தை அகர முதலென, அதல விதல  முதலிய திருப்புகழ் பாடல்களில் சித்சக்தியின் வியாபகமாக

சித்தரித்திருக்கிறார்  நடராஜன்}
” tag:
242
திருக்குடவாயில்
 பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய்
                                      
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன
                   தனன தானன தானன தானன          தனதான

சுருதி யாயிய லாயியல் நீடிய
  தொகுதி யாய்வரு வாய்வெகு பாஷைகொள்
  தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு          துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
  விரியு மாய்விளை வாயருள் ஞானிகள்
  சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு                  சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
  பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
  பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு                  பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
  மறியொ ணாததை நீகுரு வாயிது
  பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு               பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
  கருதொ ணாவகை யோரர சாய்வரு
  கவுணி யோர்குல வேதிய னாயுமை                   கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலணு                                    
  மதலை யாய்மிகு பாடலின் மீறிய
  கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்               கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
  நிறைய தாய்விட நீறிட வேசெய்து
  கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை        குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
  யியலை யாரண வூரென நேர்செய்து
  குடசை மாநகர் வாழ்வுற மேவிய                   பெருமாளே

பதம் பிரித்தல்

சுருதியாய் இயலாய் இயல் நீடிய
தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்

சுருதியாய் = வேதமாய் இயலாய் = இயல் தமிழாய் இயல் நீடிய = அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான தொகுதி = பகுதியாய் வெகுவாய் = பலவுமாய் வெகு பாஷை = பல மொழிகளில் கொள் = கொள்ளப்பட்ட தொடர்புமாய் = சம்பத்தப்பட்டதாய் அடியாய் = அடிப்படையாய் நடுவாய் = நடுவாய் மிகு துணையாய் = மிக்க துணையாய் மேல் = பின்னும்

துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு
விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்

துறவுமாய் = அனைத்தையும் துறந்த நிலையதாய் அறமாய் = தருமமாய் நெறியாய் = நல்லொழுக்க வழியாய் மிகு விரிவுமாய் = மிகுந்த விரிவு உடையதாய் விளைவாய் = விளைவுப் பொருளாய் அருள் ஞானிகள் = அருள் நிறைந்த ஞானிகள் சுகமுமாய் = அனுபவிக்கும் சுகப் பொருளாய் முகிலாய் = மேகமாய் மழையாய் = மழையாய் எழு சுடர் வீசும் = ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும்

பருதியாய் மதியாய் நிறை தாரகை
பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்

பருதியாய் = சூரியனாய் மதியாய் = சந்திரனாய் நிறை தாரகை பலவுமாய் = நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய் வெளியாய் = ஆகாய வெளியாய் ஒளியாய் = (ஸ்வயம்) சோதியாய் எழு = உண்டாகின்ற பகல் இராவு இலையாய் = பகலும் இரவும் இல்லாததாய் நிலையாய் = நிலைத்துள்ளதாய் மிகு பரமாகும் = மிக்க மேலான பொருளான

பரம மாயையின் நேர்மையாய் யாவரும்
அறிய ஒணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்

பரம மாயையின் = பெரிய மாயையின் நேர்மையை = உண்மைத் தத்துவத்தை யாவரும் அறிய ஒணாததை = எவரும் அறிய முடியாததை நீ குருவாய் = நீ குருவாக வந்து இது பகருமாறு செய்தாய் = (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய் முதல் நாள் உறு பயனோ தான் = (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?

கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
கருத ஒணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார

கருதும் = யாவராலும் கருதிப் போற்றப்படும் ஆறிரு தோள் = பன்னிரு தோள்கள் மயில், வேல் இவை = மயில், வேல் இவற்றை கருத ஒண் வகை = எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து) அரசாய் வரு = (சீர்காழியில்) அரசாக வந்த கவுணியோர் குல வேதியன்=கவுணிய குல ( கௌண்டிண்ய கோத்திர )  மறை யோனாய் - வேதியானாய் உமை கன பார = பார்வதியின் மிக்க பாரமான

களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு
மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற

களப பூண் முலை ஊறிய = கலவைச் சாந்து அணிந்த கொங்கையில் சுரந்த பால் உணு மதலையாய் = பாலைப் பருகிய குழந்தையாய் மிகு பாடலின் மீறிய = மிக்க பாடல்கள் பாடுவதில் மேம்பட்ட கவிஞனாய் = கவித் திறன் பெற்றவனாய் விளையாடு இடம் = திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில் வாதிகள் = வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழு ஏற = கழுவில் ஏறவும்

குருதி ஆறு எழ வீதி எ(ல்)லாம் மலர்
நிறைவதாய் விட நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்

குருதி ஆறு எழ = அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும் வீதி எலாம் மலர் நிறைவதாய் விட = தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும் நீறு இடவே செய்து = திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து கொடிய மாறன் = கொடிய மனம் வாய்ந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் மெய் கூன் = கூன் பட்ட உடல் நிமிரா = நிமிர்ந்து விளங்கவும் முனை குலையா = (சமண்) பகையை அழித்து வான் = பொன்னுலகில்

குடி புகீர் என மா மதுரா புரி
இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே

குடி புகீர் என = உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என மா = சிறந்த மதுராபுரி = மதுரையின் இயலை = (முன்னிருந்த சமண்) நிலையை மாற்றி ஆரண ஊர் என நேர் செய்து = வேத புரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து குடசை மாநகர் = திருக்குட வாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வுற = வாழ்வு கொண்டு மேவிய பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை


”பால் கொடுத்தது யார்” என தந்தை கேட்க “அவர் தான்” என தந்தைக்கு சுட்டிகாட்டும் சம்பந்தர் – கோயில் சிற்பம்







வேதமாய், தமிழாய், இயற்றமிழையும் மிக்கான பல பகுதிகளாய், பல மொழிகளின் சம்பந்தம் உடையதாய், அடியாய், நடுவாய், துறவாய், நெறியாய்விரிவாய், விரிவு உடையதாய், ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஒளியாய், ஆகாய வெளியாய், சோதியாய், பகல் இரவு இல்லாததாய், மாயையின் உண்மைத் தத்துவமாய், எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து, அதை உலகத்தாருக்குஎடுத்து ஓதுமாறு எனக்குத் திருவருள் புரிந்தது நான் முற் பிறப்பில் செய்த தவத்தின்
பயனோ?

உன்னுடைய பன்னிரு தோள்களும், மயில், வேல் இவைகளை மறைத்து, கவுணிய குலத்தைச் சேர்ந்த காழிப்பதியின் அரசனாய்த் தோன்றி, உமையின்f பாலை உண்டு, பல திருவளையாடல்கள் செய்த சமயத்தில், வாதுக்கு வந்த சமணர்களை வென்று அவர்களைக் கழுவில் ஏற்றி, பாண்டியனின் உடல் கூனையும் நீக்கி, சமண் பகையை அழித்து, தேவர்கள் பொன்னுலகத்தில் குடி போகச்செய்து, மதுரையின் பெயரை வேத புரியாக மாற்றி, திருக்குட வாயிலில் வீfற்றிருக்கும் பெருமாளே நீ குருவாய் வந்தது நான் செய்த பயன் தான்


விளக்கக் குறிப்புகள்

சம்பந்தர் வரலாறு

பால் உ(ண்)ணு மதலையாய் மிகு பாடலின் மீறிய கவிஞனாய்

7-ம் நூற்றாண்டில் சைவம் தழைப்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தர். அவதரித்த ஸ்தலம் சீர்காழி என்ற இந்த பாடல் பெற்ற ஊர். சிவபாத ஹிருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார் குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, ‘பால் கொடுத்தது யார்?’ என்று வினவினார் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல்
தேவாரப் பதிகம் இதுதான்

உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா
நடைபெறும்

ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில்,
அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான் 

சமணர்களை கழுவேறிய வரலாறு பாடல் 187 விளக்கத்தில் காணலாம்                                          

கருது மாறிரு தோள்மயல் வேலிவை கருதொணா வகை
   
முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள்

திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு   மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினல்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற - திருப்புகழ் நிகமமெனி
  

ஆ நீ குருவாயிது பகரு மாறு செய்தாய்
  
அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து  வியக்கின்றார்

{உலகோருக்கு எடுத்துச் சொல்லுமாறு பணித்தாயே ( குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ) என்று காஞ்சியில் இறைஞ்சினார் குடவாயிலில் இது கிடைத்தது தனக்குக் கிடைத்த பரம மாயையின் விளக்கத்தை அகர முதலென, அதல விதல  முதலிய திருப்புகழ் பாடல்களில் சித்சக்தியின் வியாபகமாக

சித்தரித்திருக்கிறார்  நடராஜன்}

No comments:

Post a Comment

Your comments needs approval before being published