F

படிப்போர்

Friday 23 December 2016

291. தீராப்பிணி

291
பேரூர்

                தானாத் தனதான தானாத் தனதான

தீராப் பிணிதீர சீவாத் துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே       
பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே       
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே

பதம் பிரித்தல்

தீரா பிணி தீர சீவாத்தும ஞான    
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே       
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே       
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே

பத உரை

தீரா - முடிவே இல்லாத பிணி தீர - (பிறவியாகிய) நோய் முடிவு பெற சீவாத்தும-சீவனாகிய ஆத்துமாவைப் பற்றிய (இந்த சிற்றுயிருக்கு) ஞான - ஞான நிலையைத் தருவதும்

ஊர் ஆட்சியதான-உலக முழுவதையும் ஆட்சி செய்யக் கூடியதுமான ஓர் - ஒப்பற்ற வாக்கு - உபதேச மொழி ஒன்றை  அருள்வாயே - (எனக்கு) உபதேசித்து அருளுக

பாரோர்க்கு - உலகில் உள்ளவர்களுக்கு இறை - தலைவனாகிய
இறை - சிவபெருமானது சேயே குமாரனே பாலா -இளையோய் கிரி ராசே - மலைகளுக்குத் தலைவனே

பேரால் - புகழால் பெரியோனே - பெரியவனே பேரூர்ப் பெருமாளே - பேரூரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

தொலையாத பிறவியாகிய நோய் முடிவு பெற, சீவாத்துமாகிய இந்த சிற்றுயிருக்கு ஞான நிலைத் தருவதும், உலகெல்லாம் ஆட்சி செய்ய வல்லதுமான ஒப்பற்ற உபதேச மொழியை எனக்கு உபதேசித்து அருளுக

உலகத்தில் உள்ளோர்க்கு இறைவனான சிவபெருமானது குமாரனே செவ்வேளே மலைகளுக்குத் தலைவனே புகழால் பெரியோனே பேரூரில் உறையும் பெருமாளே ஒப்பற்ற உபதேச மொழியை எனக்குத் தந்து அருளுக

விளக்கக் குறிப்புகள்
பிணிகள் மூன்று. உடற்ப்பிணி, உள்ளப்பிணி, உயிர்ப் பிணி. உடற்ப்பிணி – பசி. உள்ளப்பிணி – காமம், ஆசை. உயிர்ப் பிணி – பிறவி. பசி என்ற தீராப்பிணியை தீர “ குகனே குருபரனே என நெஞ்சிற் புகழ அருள் கொண்டி நாவினிலின்பக் குமுளி சிவ அமுதூறுக உந்திப் பசியாறி ( குகனே – சிதம்பரம் திருப்புகழ்) என்பார். யாவாராலும் மாற்ற முடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து இறைவன் திருநாமங்கள்

காமம் என்கின்ற உள்ளப்பிணிதீர திருவடி தியானமே மருந்து.
இது ஒரு துதிப் பாடல்





” tag:
291
பேரூர்

                தானாத் தனதான தானாத் தனதான

தீராப் பிணிதீர சீவாத் துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே       
பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே       
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளே

பதம் பிரித்தல்

தீரா பிணி தீர சீவாத்தும ஞான    
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே       
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே       
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே

பத உரை

தீரா - முடிவே இல்லாத பிணி தீர - (பிறவியாகிய) நோய் முடிவு பெற சீவாத்தும-சீவனாகிய ஆத்துமாவைப் பற்றிய (இந்த சிற்றுயிருக்கு) ஞான - ஞான நிலையைத் தருவதும்

ஊர் ஆட்சியதான-உலக முழுவதையும் ஆட்சி செய்யக் கூடியதுமான ஓர் - ஒப்பற்ற வாக்கு - உபதேச மொழி ஒன்றை  அருள்வாயே - (எனக்கு) உபதேசித்து அருளுக

பாரோர்க்கு - உலகில் உள்ளவர்களுக்கு இறை - தலைவனாகிய
இறை - சிவபெருமானது சேயே குமாரனே பாலா -இளையோய் கிரி ராசே - மலைகளுக்குத் தலைவனே

பேரால் - புகழால் பெரியோனே - பெரியவனே பேரூர்ப் பெருமாளே - பேரூரில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

தொலையாத பிறவியாகிய நோய் முடிவு பெற, சீவாத்துமாகிய இந்த சிற்றுயிருக்கு ஞான நிலைத் தருவதும், உலகெல்லாம் ஆட்சி செய்ய வல்லதுமான ஒப்பற்ற உபதேச மொழியை எனக்கு உபதேசித்து அருளுக

உலகத்தில் உள்ளோர்க்கு இறைவனான சிவபெருமானது குமாரனே செவ்வேளே மலைகளுக்குத் தலைவனே புகழால் பெரியோனே பேரூரில் உறையும் பெருமாளே ஒப்பற்ற உபதேச மொழியை எனக்குத் தந்து அருளுக

விளக்கக் குறிப்புகள்
பிணிகள் மூன்று. உடற்ப்பிணி, உள்ளப்பிணி, உயிர்ப் பிணி. உடற்ப்பிணி – பசி. உள்ளப்பிணி – காமம், ஆசை. உயிர்ப் பிணி – பிறவி. பசி என்ற தீராப்பிணியை தீர “ குகனே குருபரனே என நெஞ்சிற் புகழ அருள் கொண்டி நாவினிலின்பக் குமுளி சிவ அமுதூறுக உந்திப் பசியாறி ( குகனே – சிதம்பரம் திருப்புகழ்) என்பார். யாவாராலும் மாற்ற முடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து இறைவன் திருநாமங்கள்

காமம் என்கின்ற உள்ளப்பிணிதீர திருவடி தியானமே மருந்து.
இது ஒரு துதிப் பாடல்





No comments:

Post a Comment

Your comments needs approval before being published