F

படிப்போர்

Saturday 25 August 2012

13.அருணமணி


அருணமணி மேவு பூஷித 
     ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின்  முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
     அங்கைக் கொங்கைக்                          கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
      லிழைகலைய மாத ரார்வழி
     யின்புற் றன்புற்                                 றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ  படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
     னெஞ்சிற் செஞ்சொற்                          றருவாயே
தருணமணி யாட ராவணி  குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
     சங்கத் துங்கக்                                   குழையாளர்
தருமுருக மேக சாயலர்தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யோயமு
     துண்டிட் டண்டர்க                             கருள்கூரும்                                                
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளினுடன் மூல மேயென
     முந்தச் சிந்தித்                                    தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
     செந்திற் கந்தப்                                  பெருமாளே.
- திருச்செந்துர்
 
பதம் பிரித்தல்
***********************
மாத ரார்வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்

மாதரார் வழி = விலை மாதர்களின் வசத்தே. இன்புற்று அன்புற்று = இன்பமும் அன்பும் கொண்டு. அழியா நீள் = அழிந்து நெடும்போது.

இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என்நெஞ்சில் செஞ்சொல் தருவாயே

இரவு பகல் மோகனாகியே = இரவம் பகலும் மோகம் கொண்டவனாக. படியில் = உலகில். மடியாமல் = இறவாமல். யானும் உன் = நானும் உனது. இணை அடிகள் பாடி = இணையடிகளைப் பாடி. வாழ = வாழ. என் நெஞ்சில் = என்னுடைய மனதில். செம் சொல் தருவாயே = செம் சொற்களைத் தந்து அருள்வாயாக.

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்

தருண= இளமையையும். மணி = மணிகளையும். ஆடு அரா அணி = ஆடலையும் உடைய பாம்புகளை அணிந்த. குடில = வளைந்த. சடில = சடையை உடைய. ஆதி = ஆதிப் பொருளும். ஓதிய சதுர் மறையின் ஆதியாகிய = ஓதியுள்ள நான்மறையின் ஆதிப் பொருளும் ஆகிய. சங்க = சங்கினால் ஆனதும். துங்க = பசிசுத்தமானதும் ஆன. குழையாளர் = குழையினராகிய சிவபெருமான். 

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவி
தனை முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள் கூரும்

தரு முருக = தந்து அருளிய முருகனே. மேக சாயலார் = நீல மேக நிறத்தினர். தமர = ஒலியுடன் கூடிய. மகர ஆழி = மகர மீன்கள் வாழ்கின்ற கடல். சூழ் = சூழ்ந்த. புவி தனை = பூமியை. முழுதும் வாரியே = முழுமையும் எடுத்து. அமுது உண்டிட்ட = அமுதென உண்டு. அண்டர்க்கு அருள் கூரும் = தேவர்களுக்கு அருள் பாலித்த.

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்

செரு முதலி = போருக்குத் தலைவரும். மேவும் = விரும்பும். மா வலி = மிக்க வலிமையும். அதி மத கபோல = அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தை உடைய. மாமலை = பெரிய மலை போன்ற கஜேந்திர யானை. தெளிவுடன் = தெளிந்த அறிவுடன். மூலமே என = ஆதி மூலமே என்று கதற. முந்தச் சிந்தித்து = முற்பட்டு கருணையுடன் நினைத்து. அருள் மாயன் = வந்து அருளியவருமான திருமாலின். 

திருமருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே.

திரு மருக = திருமருகனே. சூரன் மார்பொடு = சூரனுடைய மார்புடன். சிலை உருவ = (ஏழு) மலைகளையும் ஊடுருவிச் செல்லும்படி. வேலை ஏவிய = வேலாயுதத்தைச் செலுத்திய. ஜெய சரவணா = வெற்றிச் சரவணா. மனோகர = மனோகரனே. செந்தில் கந்தப் பெருமாளே = செந்தூர்க் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

******* விலை மாதர்களின் காம லீலைகளில் முழுகி, அவர்களுடன் உறவாடி, இன்பம் பூண்டவனாய் நான் அழிந்து இப் பூமியில இறந்து போகாமல், உனது திருவடிகளைப் பாடி வாழ என்னுடைய மனதில் செஞ்சொற்களைத் தந்து அருளுக.

பாம்பை அணிந்த சடையை உடைய ஆதிப் பெருமானும், நான்கு வேதங்களுக்கும் முதல்வனுமாகிய சிவபெருமான் தந்து அருளிய முருகனே. கஜேந்திரன் ஆதி மூலமே என்று கதறியவுடன், முன்னதாக வந்து அருளிய திருமாலின் மருகனே. சூரனுடைய மார்பும் அவனுடைய ஏழு மலைகளும் ஊடுருவும்படி வேலைச் செலுத்தியவனே. செந்தூர்க் கந்தப் பெருமாளே. உன்னைப் பாடி வாழ செஞ்சொற்களை எனக்குத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. இருள் நிறை அம் ஓதி.... கருமை வாய்ந்த கரிய கூந்தல்.
” tag:

அருணமணி மேவு பூஷித 
     ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின்  முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
     அங்கைக் கொங்கைக்                          கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
      லிழைகலைய மாத ரார்வழி
     யின்புற் றன்புற்                                 றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ  படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
     னெஞ்சிற் செஞ்சொற்                          றருவாயே
தருணமணி யாட ராவணி  குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
     சங்கத் துங்கக்                                   குழையாளர்
தருமுருக மேக சாயலர்தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யோயமு
     துண்டிட் டண்டர்க                             கருள்கூரும்                                                
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளினுடன் மூல மேயென
     முந்தச் சிந்தித்                                    தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
     செந்திற் கந்தப்                                  பெருமாளே.
- திருச்செந்துர்
 
பதம் பிரித்தல்
***********************
மாத ரார்வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்

மாதரார் வழி = விலை மாதர்களின் வசத்தே. இன்புற்று அன்புற்று = இன்பமும் அன்பும் கொண்டு. அழியா நீள் = அழிந்து நெடும்போது.

இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என்நெஞ்சில் செஞ்சொல் தருவாயே

இரவு பகல் மோகனாகியே = இரவம் பகலும் மோகம் கொண்டவனாக. படியில் = உலகில். மடியாமல் = இறவாமல். யானும் உன் = நானும் உனது. இணை அடிகள் பாடி = இணையடிகளைப் பாடி. வாழ = வாழ. என் நெஞ்சில் = என்னுடைய மனதில். செம் சொல் தருவாயே = செம் சொற்களைத் தந்து அருள்வாயாக.

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்

தருண= இளமையையும். மணி = மணிகளையும். ஆடு அரா அணி = ஆடலையும் உடைய பாம்புகளை அணிந்த. குடில = வளைந்த. சடில = சடையை உடைய. ஆதி = ஆதிப் பொருளும். ஓதிய சதுர் மறையின் ஆதியாகிய = ஓதியுள்ள நான்மறையின் ஆதிப் பொருளும் ஆகிய. சங்க = சங்கினால் ஆனதும். துங்க = பசிசுத்தமானதும் ஆன. குழையாளர் = குழையினராகிய சிவபெருமான். 

தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவி
தனை முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள் கூரும்

தரு முருக = தந்து அருளிய முருகனே. மேக சாயலார் = நீல மேக நிறத்தினர். தமர = ஒலியுடன் கூடிய. மகர ஆழி = மகர மீன்கள் வாழ்கின்ற கடல். சூழ் = சூழ்ந்த. புவி தனை = பூமியை. முழுதும் வாரியே = முழுமையும் எடுத்து. அமுது உண்டிட்ட = அமுதென உண்டு. அண்டர்க்கு அருள் கூரும் = தேவர்களுக்கு அருள் பாலித்த.

செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்

செரு முதலி = போருக்குத் தலைவரும். மேவும் = விரும்பும். மா வலி = மிக்க வலிமையும். அதி மத கபோல = அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தை உடைய. மாமலை = பெரிய மலை போன்ற கஜேந்திர யானை. தெளிவுடன் = தெளிந்த அறிவுடன். மூலமே என = ஆதி மூலமே என்று கதற. முந்தச் சிந்தித்து = முற்பட்டு கருணையுடன் நினைத்து. அருள் மாயன் = வந்து அருளியவருமான திருமாலின். 

திருமருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே.

திரு மருக = திருமருகனே. சூரன் மார்பொடு = சூரனுடைய மார்புடன். சிலை உருவ = (ஏழு) மலைகளையும் ஊடுருவிச் செல்லும்படி. வேலை ஏவிய = வேலாயுதத்தைச் செலுத்திய. ஜெய சரவணா = வெற்றிச் சரவணா. மனோகர = மனோகரனே. செந்தில் கந்தப் பெருமாளே = செந்தூர்க் கந்தப் பெருமாளே.

சுருக்க உரை

******* விலை மாதர்களின் காம லீலைகளில் முழுகி, அவர்களுடன் உறவாடி, இன்பம் பூண்டவனாய் நான் அழிந்து இப் பூமியில இறந்து போகாமல், உனது திருவடிகளைப் பாடி வாழ என்னுடைய மனதில் செஞ்சொற்களைத் தந்து அருளுக.

பாம்பை அணிந்த சடையை உடைய ஆதிப் பெருமானும், நான்கு வேதங்களுக்கும் முதல்வனுமாகிய சிவபெருமான் தந்து அருளிய முருகனே. கஜேந்திரன் ஆதி மூலமே என்று கதறியவுடன், முன்னதாக வந்து அருளிய திருமாலின் மருகனே. சூரனுடைய மார்பும் அவனுடைய ஏழு மலைகளும் ஊடுருவும்படி வேலைச் செலுத்தியவனே. செந்தூர்க் கந்தப் பெருமாளே. உன்னைப் பாடி வாழ செஞ்சொற்களை எனக்குத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. இருள் நிறை அம் ஓதி.... கருமை வாய்ந்த கரிய கூந்தல்.

No comments:

Post a Comment

Your comments needs approval before being published