F

படிப்போர்

Saturday 25 August 2012

12.அமுதுததி


அமுதுதி விடமுமிழு செங்கட் டிங்கட்
        பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
        தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச்        சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
        பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
        கரையவுற வினரலற உந்திச் சந்தித்              தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
        பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
        கிளையமுது வசைதவிர இன்றைக் கன்றைக்   கெனநாடா
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
        டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
        டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப்        பகிராதோ
குமுதபதி வகிரமுது சகிரமுது சிந்தச் சிந்தச்
        சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
        குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்      கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
        கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
        தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
        தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
        திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற்               குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
        புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
        திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப்               பெருமாளே.

- திருச்செந்துர்

பதம் பிரித்து பதவுரை
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள்
பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை

அமுது உததி விடம் = அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை. உமிழும் = கக்கும். செம் கண் = சிவந்த கண்களையும். திங்கள் = சந்திரனுடைய. பகவின் = பிளவு போல். ஒளிர் = ஒளி விடுகின்ற. வெளிறு எயிறு = வெண்மையான பற்கள். துஞ்சல் குஞ்சி தலையும் உடையவன் = சுருளுகின்ற தன்மையுடைய மயிர்த் தலையையும் கொண்டவனும். அரவ = பேரொலியும். தண்ட = தண்டாயுதமும். சண்ட = கொடுங் கோபமும் கொண்டவனுமான. சமன் ஓலை அது = கூற்றுவனுடைய ஓலை. 

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு
பறை திமிலை தமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே

வருகும் அளவில் = வரும்போது. உயிர் அங்கிட்டு இங்கு = உயிர் அங்கும் இங்குமாக ஊசலாட. பறை திமிலை = பறையும், மற்ற பறை வகைகளும். திமிர்தம் மிகு = பேரொலி மிக்க. தம்பட்டம் பல = தம்பட்டம் முதலிய பல வாத்தியங்கள். கரைய =பல விதமாக ஒலிக்கவும். உறவினர் அலற = சுற்றத்தார் கதறி அழ. உந்தி சந்தி தெருவூடே= கொண்டு போகும் சந்தித் தெரு வழியே. 

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி
பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது

எமது பொருள் எனு = எம்முடைய பொருள் என்னும் பற்று. மருளை இன்றி = மயக்கம் இல்லாமல். குன்றி பிளவு அளவு = குன்றி மணியில் பாதி யாகிலும். தினை அளவு = தினை அளவு கூட. பங்கிட்டு உண்கைக்கு = பங்கிட்டுத் தந்து  உண்ண வேண்டிய (அற வழியில் நின்று). இளையும் = இளைத்த. முது = பெரும். வசை தவிர = பழி நீங்க. இன்றைக்கு அன்றைக்கு என நாடாது = இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல். 

இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு
டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ

இடுக கடிது எனும் உணர்வு = இடுவாயாக என்னும் உணர்வு. பொன்றிக் கொண்டிட்டு = அழிந்து போக எடுத்துக் கொண்டு போய். டுடுடுடு...... என அகலும் = டுடு டுடுடு எனப் போகின்ற. நெறி கருத = விதியை நினைத்து. நெஞ்சத்து அஞ்சி = மனத்தால் பயம் கொண்டு. பகிராதோ = ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ.

குமுத பதி வகிர் அமுது சிந்த சிந்த
சரண பரிபுர சுருதி கொஞ்ச கொஞ்ச
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட

குமுதபதி = (தலையில் சூடியுள்ள) ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின். வகிர் = பிளவு (பிறை). அமுத சிந்தச் சிந்த = அமிர்த கிரணங்களை மிகவும் சிந்த. சரண பரிபுரம் = திருவடிச் சிலம்பு. சுருதி கொஞ்சக் கொஞ்ச = வேத மொழிகளை மிகக் கொஞ்சி ஒலிக்கவும். குடில சடை = வளைவுடைய சடை. பவுரி கொடு = மண்டலமிட்டுச் சுழன்று. தொங்க = தொங்க. பங்கில் = பக்கத்தில் உள்ள. கொடி ஆட = கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும்.

குல தடினி அசைய இசை பொங்க பொங்க
கழல் அதிர டெகு டெகுட டெங்கட் டெங்க
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க தொகுதீதோ

குல தடினி = சிறந்த கங்கை ஆறு. அசைய = அசையவும். இசை பொங்கப் பொங்க = இசை ஒலி மிகப் பொங்கவும். கழல் அதிர = கழல்கள் அதிர்ந்து ஒலிக்கவும். டெகு டெகு.....தீதோ திமிதம் என = டெகு டகுட....என்னும் பேரொலியுடன்.

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை
தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற் குருநாதா

முழவு = முழவு வாத்தியம். ஒலி முழங்க = முழங்கவும். செங்கை = சிவந்த கையில் உள்ள. தமருகம் = உடுக்கை. அதிர் சதியொடு = அதிரும் தாளத்துடன். அன்பர்க்கு = அடியார்களுக்கு. இன்பத் திறம் உதவும் = இன்ப நிலையை உதவுகின்ற. பரத குரு = நடன குருவாகிய சிவபெருமான். வந்திக்கும் = வணங்கும். சற் குரு நாதா = சற் குரு நாதரே.

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி
புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே.

திரளும் = திரண்டு. மணி தரளம் = மணியும் முத்தும். உயர் தெங்கில் = உயரமான தென்னை மரங்களில். தங்கிப் புரள = தங்கிப் புரளும்படி. எறி = வீசுகின்ற. திரை = அலைகளையும். மகர சங்கம் = மகர மீன்களையும் சங்குகளையும் உடைய. துங்க = பரிசுத்தமான. திமிர சலநிதி தழுவு= கடல் நீர் அணைந்துள்ள. செந்தில் = திருச் செந்தூரில் வாழும். கந்தப் பெருமாளே = கந்தப் பெருமையில் சிறந்தவரே.

சுருக்க உரை
விடத்தைக் கக்கும் சிவந்த கண்களையும், கொடுங் கோபமும் உடைய நமனது ஓலை வரும்போது உயிர் ஊசலாட, பல வகையான வாத்தியங்கள் முழங்க, உறவினர் கதறி அழ, தெரு வழியே உடலைக் கொண்டு போகும் போது, நம்முடைய பொருள் என்ற பற்று இல்லாமல், ஒரு குண்டு மணி அளவு கூட உணவைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் பழி நீங்க, இப்போதே மனமாற ஈதல் புரிய மாட்டேனோ?

காலில் உள்ள சிலம்புகள் வேத மொழிகளை ஒலிக்க, வளைந்த சடைகள் சுழல, பக்கத்தில் உள்ள பார்வதி ஆட, கங்கை அசைய, கழல்கள் அதிர, அன்பர்களுக்கு இன்ப நிலையை உதவும் நடன குருவான சிவபெருமான் வணங்கும் சற்குரு நாதனே. மணியும் முத்தும் உயர்ந்துள்ள தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அலைகளை வீசுகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. மனம் அஞ்சிப் பகிர்ந்து வாழ மாட்டேனோ?

விளக்கக் குறிப்புகள்
அ. அரவ தண்டச் சண்டச் சமனோலை.....
(அரவ தண்டத்தில் உய்யலு மாமா..) - நாலாயிர திவ்ய ப்ரபந்தம் (பெரியாழ்வார) 4-5-3.
ஆ அமுத உததி - திருபாற்கடல்

” tag:

அமுதுதி விடமுமிழு செங்கட் டிங்கட்
        பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
        தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச்        சமனோலை
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
        பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
        கரையவுற வினரலற உந்திச் சந்தித்              தெருவூடே
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
        பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
        கிளையமுது வசைதவிர இன்றைக் கன்றைக்   கெனநாடா
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
        டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
        டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப்        பகிராதோ
குமுதபதி வகிரமுது சகிரமுது சிந்தச் சிந்தச்
        சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
        குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற்      கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
        கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
        தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
        தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
        திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற்               குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
        புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
        திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப்               பெருமாளே.

- திருச்செந்துர்

பதம் பிரித்து பதவுரை
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள்
பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை

அமுது உததி விடம் = அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை. உமிழும் = கக்கும். செம் கண் = சிவந்த கண்களையும். திங்கள் = சந்திரனுடைய. பகவின் = பிளவு போல். ஒளிர் = ஒளி விடுகின்ற. வெளிறு எயிறு = வெண்மையான பற்கள். துஞ்சல் குஞ்சி தலையும் உடையவன் = சுருளுகின்ற தன்மையுடைய மயிர்த் தலையையும் கொண்டவனும். அரவ = பேரொலியும். தண்ட = தண்டாயுதமும். சண்ட = கொடுங் கோபமும் கொண்டவனுமான. சமன் ஓலை அது = கூற்றுவனுடைய ஓலை. 

அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு
பறை திமிலை தமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே

வருகும் அளவில் = வரும்போது. உயிர் அங்கிட்டு இங்கு = உயிர் அங்கும் இங்குமாக ஊசலாட. பறை திமிலை = பறையும், மற்ற பறை வகைகளும். திமிர்தம் மிகு = பேரொலி மிக்க. தம்பட்டம் பல = தம்பட்டம் முதலிய பல வாத்தியங்கள். கரைய =பல விதமாக ஒலிக்கவும். உறவினர் அலற = சுற்றத்தார் கதறி அழ. உந்தி சந்தி தெருவூடே= கொண்டு போகும் சந்தித் தெரு வழியே. 

எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி
பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது

எமது பொருள் எனு = எம்முடைய பொருள் என்னும் பற்று. மருளை இன்றி = மயக்கம் இல்லாமல். குன்றி பிளவு அளவு = குன்றி மணியில் பாதி யாகிலும். தினை அளவு = தினை அளவு கூட. பங்கிட்டு உண்கைக்கு = பங்கிட்டுத் தந்து  உண்ண வேண்டிய (அற வழியில் நின்று). இளையும் = இளைத்த. முது = பெரும். வசை தவிர = பழி நீங்க. இன்றைக்கு அன்றைக்கு என நாடாது = இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல். 

இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு
டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ

இடுக கடிது எனும் உணர்வு = இடுவாயாக என்னும் உணர்வு. பொன்றிக் கொண்டிட்டு = அழிந்து போக எடுத்துக் கொண்டு போய். டுடுடுடு...... என அகலும் = டுடு டுடுடு எனப் போகின்ற. நெறி கருத = விதியை நினைத்து. நெஞ்சத்து அஞ்சி = மனத்தால் பயம் கொண்டு. பகிராதோ = ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ.

குமுத பதி வகிர் அமுது சிந்த சிந்த
சரண பரிபுர சுருதி கொஞ்ச கொஞ்ச
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட

குமுதபதி = (தலையில் சூடியுள்ள) ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின். வகிர் = பிளவு (பிறை). அமுத சிந்தச் சிந்த = அமிர்த கிரணங்களை மிகவும் சிந்த. சரண பரிபுரம் = திருவடிச் சிலம்பு. சுருதி கொஞ்சக் கொஞ்ச = வேத மொழிகளை மிகக் கொஞ்சி ஒலிக்கவும். குடில சடை = வளைவுடைய சடை. பவுரி கொடு = மண்டலமிட்டுச் சுழன்று. தொங்க = தொங்க. பங்கில் = பக்கத்தில் உள்ள. கொடி ஆட = கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும்.

குல தடினி அசைய இசை பொங்க பொங்க
கழல் அதிர டெகு டெகுட டெங்கட் டெங்க
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க தொகுதீதோ

குல தடினி = சிறந்த கங்கை ஆறு. அசைய = அசையவும். இசை பொங்கப் பொங்க = இசை ஒலி மிகப் பொங்கவும். கழல் அதிர = கழல்கள் அதிர்ந்து ஒலிக்கவும். டெகு டெகு.....தீதோ திமிதம் என = டெகு டகுட....என்னும் பேரொலியுடன்.

திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை
தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற் குருநாதா

முழவு = முழவு வாத்தியம். ஒலி முழங்க = முழங்கவும். செங்கை = சிவந்த கையில் உள்ள. தமருகம் = உடுக்கை. அதிர் சதியொடு = அதிரும் தாளத்துடன். அன்பர்க்கு = அடியார்களுக்கு. இன்பத் திறம் உதவும் = இன்ப நிலையை உதவுகின்ற. பரத குரு = நடன குருவாகிய சிவபெருமான். வந்திக்கும் = வணங்கும். சற் குரு நாதா = சற் குரு நாதரே.

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி
புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே.

திரளும் = திரண்டு. மணி தரளம் = மணியும் முத்தும். உயர் தெங்கில் = உயரமான தென்னை மரங்களில். தங்கிப் புரள = தங்கிப் புரளும்படி. எறி = வீசுகின்ற. திரை = அலைகளையும். மகர சங்கம் = மகர மீன்களையும் சங்குகளையும் உடைய. துங்க = பரிசுத்தமான. திமிர சலநிதி தழுவு= கடல் நீர் அணைந்துள்ள. செந்தில் = திருச் செந்தூரில் வாழும். கந்தப் பெருமாளே = கந்தப் பெருமையில் சிறந்தவரே.

சுருக்க உரை
விடத்தைக் கக்கும் சிவந்த கண்களையும், கொடுங் கோபமும் உடைய நமனது ஓலை வரும்போது உயிர் ஊசலாட, பல வகையான வாத்தியங்கள் முழங்க, உறவினர் கதறி அழ, தெரு வழியே உடலைக் கொண்டு போகும் போது, நம்முடைய பொருள் என்ற பற்று இல்லாமல், ஒரு குண்டு மணி அளவு கூட உணவைப் பிறருக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் பழி நீங்க, இப்போதே மனமாற ஈதல் புரிய மாட்டேனோ?

காலில் உள்ள சிலம்புகள் வேத மொழிகளை ஒலிக்க, வளைந்த சடைகள் சுழல, பக்கத்தில் உள்ள பார்வதி ஆட, கங்கை அசைய, கழல்கள் அதிர, அன்பர்களுக்கு இன்ப நிலையை உதவும் நடன குருவான சிவபெருமான் வணங்கும் சற்குரு நாதனே. மணியும் முத்தும் உயர்ந்துள்ள தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அலைகளை வீசுகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. மனம் அஞ்சிப் பகிர்ந்து வாழ மாட்டேனோ?

விளக்கக் குறிப்புகள்
அ. அரவ தண்டச் சண்டச் சமனோலை.....
(அரவ தண்டத்தில் உய்யலு மாமா..) - நாலாயிர திவ்ய ப்ரபந்தம் (பெரியாழ்வார) 4-5-3.
ஆ அமுத உததி - திருபாற்கடல்

No comments:

Post a Comment

Your comments needs approval before being published