F

படிப்போர்

Monday 8 October 2012

126.கலைமடவார்


இந்த ஆன்மாவின் துயர் நீங்க நினது திருமாலைத் தந்து அருள் புரியவேண்டும் என்பது துதி

கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
        கனவளை யாலுங்                              கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
        கருதலை யாலுஞ்                             சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
        கொடியிடை யாள்நின்                          றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
        குளிர்தொடை நீதந்                            தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
        திருமகள் நாயன்                           தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
        செறிவுடன் மேவுந்                               திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
        தணிகையில் வாழ்செங்                      கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
        தனிமயி லேறும்                                  பெருமாளே
-126 திருத்தணிகை


பதம் பிரித்து உரை

கலை மடவார் தம் சிலை அதனாலும்
கன வளையாலும் கரை மேலே

கலை = மேகலை முதலிய இடையணிகள் பூணும். மடவார் தம் = பெண்களின் சிலை அதனாலும் = வசைப் பேச்சின் ஒலியாலும் கன = திரண்ட. வளையாலும் = சங்கின் ஒலியாலும். கரை மேலே = கரை மேல் (இருந்து கூவும்).

கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும் சிலை ஆலும்

கருகிய = கரிய காளம் = (மன்மதனின் ஊது குழலாகிய) குயிலின் ஒலியாலும் பெருகிய தோயம் = பெருகியுள்ள (கடல்) நீரின் ஒலியாலும் சிலை ஆலும் = வில்லினிடத்து அசைகின்ற.

கொலை தரு காமன் பல கணையாலும்
கொடி இடையாள் நின்று அழியாதே

கொலை தரு காமன் = கொலையே செய்ய வல்ல மன்மதனது பல கணையாலும் = பல பாணங்களாலும் கொடி இடையாள் = கொடி போன்ற இடையை உடைய இவள் (தலைவி) நின்று அழியாதே = கவலைப் பட்டு நின்று அழிவு படாமல்.

குரவ அணி நீடும் புயம் அணி நீபம்
குளிர் தொடை நீ தந்து அருள்வாயே

குரவு அணி = குரவ மலர்களால் அலங்காரம் கொண்டு. நீடும் = விளங்கும் புயம் அணி = திருப்புயத்தில் அணிந்துள்ள. நீபம் = கடப்ப மலரின் குளிர் தொடை = குளிர்ந்த மாலையை நீ தந்து அருள்வாயே = நீ  கொடுத்து அருள வேண்டும்.

சிலை மகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும் வேலா

சிலை மகள் நாயன் = பர்வதராசன் மகளின் தலைவனான சிவபெருமானும் கலை மகள் நாயன் = சரஸ்வதியின் தலைவனான பிரமனும். திருமகள் நாயன் = இலக்குமியின் தலைவனான் திருமாலும் தொழும் வேலா = தொழும் வேலனே.

தினை வன மானும் கந வன மானும்
செறிவுடன் மேவும் திருமார்பா

தினை வன மானும் = தினைப் புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியும் கந வன மான = விண்ணுலகத்திலுள்ள கற்பக வனத்தில் வளர்ந்த தெய்வயானையும் செறிவுடன் = நெருங்கி  மேவும் = அணையும் திருமார்பா = திருமார்பனே


தல மகள் மீது எண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ் செம் கதிர் வேலா

தல மகள் மீது = ஸ்தலமகளாகிய பூமியின் மேல் எண் புலவர் = மதிக்கப்படும் தேவர்கள் உலாவும் = வந்து உலாவும். தணிகையில் வாழ் = திருத்தணிகையில் வாழும் செம் = செவ்விய கதிர் வேலா = ஒளி வாய்ந்த வேலனே.

தனி அவர் கூரும் தனி கெட நாளும்
தனி மயில் ஏறும் பெருமாளே.

தனி அவர் கூரும் = (சுற்றமும் பற்றும் ஒழித்துத்) தனிமையை விரும்பித் தவம் செய்யும் தன்மையாளரின் தனி கெட = தனிமை நீங்க நாளும் = நாள் தோறும் தனி மயில் ஏறும் பெருமாளே = ஒப்பற்ற மயில் மீது ஏறி வந்து அவர்களுக்கு உதவும் பெருமாளே

சுருக்க உரை
பெண்களின் வசைப் பேச்சாலும், சங்கின் ஒலியாலும், குயிலின்ஒலியாலும்,
பெருகியுள்ள நீராலும், எண்ணி எண்ணிக் கருதும்சிந்தையாலும் நிற்கும் இப்
பெண் கவலைப் பட்டு அழியாமல்,அவளுக்குக் குரா மலர் விளங்கும் திருப்புயத்
 தில் கடப்ப மலையைத் தந்து அருள வேண்டும்.  பார்வதியின் தலைவனான சிவபெருமானும், சரஸ்வதியின் தலைவனான பிரமனும், இலக்குமியின் தலைவனான திருமாலும் தொழும் வேலனே,
தினைப்புனத்தில் வாழும் வள்ளியும், கற்பக வனத்தில் வாழும் தெய்வ யானையும் நெருங்கி அணையும் மார்பனே, பூமியில் வந்து தேவர்கள் உலாவும் தணிகையில் வாழும் வேலனே, சுற்றமும், பற்றும் ஒழித்துத் தனிமையில் தவம் செய்பவர்களின் தனிமையைப் போக்கும் பெருமாளேகாம நோயால் வாடும் இப் பெண்ணுக்குக் குளிர்ந்த கடப்ப மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது. தனித்திருந்து வருந்தும் துயர் உறும் தலைவிக் குக் குளிர்ந்த கடப்ப மாலயைத் தரவேண்டும் என்பது, தனித்திருந்து நின்று போற்றுபவரின் துயரைக் களைவது போல் என்ற கருத்து.

கலை மகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா....
திருமால் முருகனை வழிபட்டு தாரகாசுரனால் கவரப்பட்டத் தமது சக்கரம், சங்கு முதலியவற்றைப் திரும்பப் பெற்றார். பிரமன் முருகனை வழிபட்டு சிருட்டித் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார்.

ஒப்புக
சிவன் முருகனைத் தியானித்து உபதேசம் பெற்றார்.
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு னிவனாய..                                     ---               திருப்புகழ் ,தொக்கறாக்கு


” tag:

இந்த ஆன்மாவின் துயர் நீங்க நினது திருமாலைத் தந்து அருள் புரியவேண்டும் என்பது துதி

கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
        கனவளை யாலுங்                              கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
        கருதலை யாலுஞ்                             சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
        கொடியிடை யாள்நின்                          றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
        குளிர்தொடை நீதந்                            தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
        திருமகள் நாயன்                           தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
        செறிவுடன் மேவுந்                               திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
        தணிகையில் வாழ்செங்                      கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
        தனிமயி லேறும்                                  பெருமாளே
-126 திருத்தணிகை


பதம் பிரித்து உரை

கலை மடவார் தம் சிலை அதனாலும்
கன வளையாலும் கரை மேலே

கலை = மேகலை முதலிய இடையணிகள் பூணும். மடவார் தம் = பெண்களின் சிலை அதனாலும் = வசைப் பேச்சின் ஒலியாலும் கன = திரண்ட. வளையாலும் = சங்கின் ஒலியாலும். கரை மேலே = கரை மேல் (இருந்து கூவும்).

கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும் சிலை ஆலும்

கருகிய = கரிய காளம் = (மன்மதனின் ஊது குழலாகிய) குயிலின் ஒலியாலும் பெருகிய தோயம் = பெருகியுள்ள (கடல்) நீரின் ஒலியாலும் சிலை ஆலும் = வில்லினிடத்து அசைகின்ற.

கொலை தரு காமன் பல கணையாலும்
கொடி இடையாள் நின்று அழியாதே

கொலை தரு காமன் = கொலையே செய்ய வல்ல மன்மதனது பல கணையாலும் = பல பாணங்களாலும் கொடி இடையாள் = கொடி போன்ற இடையை உடைய இவள் (தலைவி) நின்று அழியாதே = கவலைப் பட்டு நின்று அழிவு படாமல்.

குரவ அணி நீடும் புயம் அணி நீபம்
குளிர் தொடை நீ தந்து அருள்வாயே

குரவு அணி = குரவ மலர்களால் அலங்காரம் கொண்டு. நீடும் = விளங்கும் புயம் அணி = திருப்புயத்தில் அணிந்துள்ள. நீபம் = கடப்ப மலரின் குளிர் தொடை = குளிர்ந்த மாலையை நீ தந்து அருள்வாயே = நீ  கொடுத்து அருள வேண்டும்.

சிலை மகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும் வேலா

சிலை மகள் நாயன் = பர்வதராசன் மகளின் தலைவனான சிவபெருமானும் கலை மகள் நாயன் = சரஸ்வதியின் தலைவனான பிரமனும். திருமகள் நாயன் = இலக்குமியின் தலைவனான் திருமாலும் தொழும் வேலா = தொழும் வேலனே.

தினை வன மானும் கந வன மானும்
செறிவுடன் மேவும் திருமார்பா

தினை வன மானும் = தினைப் புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியும் கந வன மான = விண்ணுலகத்திலுள்ள கற்பக வனத்தில் வளர்ந்த தெய்வயானையும் செறிவுடன் = நெருங்கி  மேவும் = அணையும் திருமார்பா = திருமார்பனே


தல மகள் மீது எண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ் செம் கதிர் வேலா

தல மகள் மீது = ஸ்தலமகளாகிய பூமியின் மேல் எண் புலவர் = மதிக்கப்படும் தேவர்கள் உலாவும் = வந்து உலாவும். தணிகையில் வாழ் = திருத்தணிகையில் வாழும் செம் = செவ்விய கதிர் வேலா = ஒளி வாய்ந்த வேலனே.

தனி அவர் கூரும் தனி கெட நாளும்
தனி மயில் ஏறும் பெருமாளே.

தனி அவர் கூரும் = (சுற்றமும் பற்றும் ஒழித்துத்) தனிமையை விரும்பித் தவம் செய்யும் தன்மையாளரின் தனி கெட = தனிமை நீங்க நாளும் = நாள் தோறும் தனி மயில் ஏறும் பெருமாளே = ஒப்பற்ற மயில் மீது ஏறி வந்து அவர்களுக்கு உதவும் பெருமாளே

சுருக்க உரை
பெண்களின் வசைப் பேச்சாலும், சங்கின் ஒலியாலும், குயிலின்ஒலியாலும்,
பெருகியுள்ள நீராலும், எண்ணி எண்ணிக் கருதும்சிந்தையாலும் நிற்கும் இப்
பெண் கவலைப் பட்டு அழியாமல்,அவளுக்குக் குரா மலர் விளங்கும் திருப்புயத்
 தில் கடப்ப மலையைத் தந்து அருள வேண்டும்.  பார்வதியின் தலைவனான சிவபெருமானும், சரஸ்வதியின் தலைவனான பிரமனும், இலக்குமியின் தலைவனான திருமாலும் தொழும் வேலனே,
தினைப்புனத்தில் வாழும் வள்ளியும், கற்பக வனத்தில் வாழும் தெய்வ யானையும் நெருங்கி அணையும் மார்பனே, பூமியில் வந்து தேவர்கள் உலாவும் தணிகையில் வாழும் வேலனே, சுற்றமும், பற்றும் ஒழித்துத் தனிமையில் தவம் செய்பவர்களின் தனிமையைப் போக்கும் பெருமாளேகாம நோயால் வாடும் இப் பெண்ணுக்குக் குளிர்ந்த கடப்ப மாலையைத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது. தனித்திருந்து வருந்தும் துயர் உறும் தலைவிக் குக் குளிர்ந்த கடப்ப மாலயைத் தரவேண்டும் என்பது, தனித்திருந்து நின்று போற்றுபவரின் துயரைக் களைவது போல் என்ற கருத்து.

கலை மகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா....
திருமால் முருகனை வழிபட்டு தாரகாசுரனால் கவரப்பட்டத் தமது சக்கரம், சங்கு முதலியவற்றைப் திரும்பப் பெற்றார். பிரமன் முருகனை வழிபட்டு சிருட்டித் தொழில் செய்யும் ஆற்றலைப் பெற்றார்.

ஒப்புக
சிவன் முருகனைத் தியானித்து உபதேசம் பெற்றார்.
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு னிவனாய..                                     ---               திருப்புகழ் ,தொக்கறாக்கு


No comments:

Post a Comment

Your comments needs approval before being published