F

படிப்போர்

Wednesday 3 October 2012

115.அரகர சிவன்


அரகர சிவனரி அயனிவர் பரவிமு
      னறுமுக சரவண                   பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
      அனலென எழவிடு                       மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
      உளமதி லுறவருள்                     முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
      பரமன திருசெவி                            களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
      உரைதரு குருபர                        வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
      ரவர்களு முறுவர                   முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
      பணிதிகழ் தணிகையி          லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
      மிருபுடை யுறவரு                   பெருமாளே
-115 திருத்தணிகை
 
பதம் பிரித்து உரை

அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன்
அறு முக சரவணபவ என்று

அரகர சிவன் = அரகர என்னும் அருமைச் சொல்லுக்கு உரிய சிவபெருமானும் அரி, அயன் = திருமாலும், பிரமனும் இவர் = ஆகிய இம் மூவர் பரவி = போற்றி முன் = உனது முன்னிலையில் அறு முக சரவண பவனே என்று = ஆறுமுகனே, சரவணபவனே என்று.

அநுதின(ம்) மொழி தர அசுரர்கள் கெட அயில்
அனல் என எழ விடும் அதி வீரா

அநுதினம் = நாள் தோறும் மொழிதர = துதிக்க அசுரர்கள்
கெட = அசுரர்கள் அழியும்படி அயில் = வேலாயுதத்தை 
அனல் என = நெருப்பு போல் எழ விடும் அதி தீரா = செல்ல விட்ட சிறந்த வீரனே.

பரிபுர கமலம் அது அடி இணை அடியவர்
உளம் அதில் உற அருள் முருகேசா

பரிபுரம் = சிலம்புகள் அணிந்த. கமல அடி இணை = தாமரை போன்ற இரண்டு திருவடிகளை. அடியவர் = அடியாருடைய. உளம் அதில் உற = உள்ளத்தில் பொருந்தும்படி. அருள் முருகேசா = அருளும் முருகேசனே.

பகவதி வரை மகள் உமை தர வரு குக
பரமனது இரு செவி களிகூர

பகவதி = பகவதி வரை மகள் = இமவான் மகள் பார்வதி உமை = உமா தேவி. தர = அருள வரு குக = வந்குகனே பரமனது = பரசிவனுடைய இரு செவி = இரண்டு காதுகளிலும் களி கூர = மகிழச்சி கொள்ள.

உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை
உரை தரு குருபர உயர்வாய

உரை செயும் = (யாவராலும்) போற்றப்படும் ஒரு மொழி = ஒப்பற்ற மொழியான பிரணவ முடிவதை = பிரணவ மந்திரத்தின் முடிவுப் பொருளை உரை தரு = எடுத்துரைத்த. குருபர = குருபர மூர்த்தியே. உயர்வாய = சிறப்புப் பொருந்திய.

உலக மன் அலகில உயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர முநிவோரும்

உலகம் மன் = உலகத்திலுள்ள அலகில = கணக்கற்ற உயிர்களும் = உயிர்களும் இமையவர் அவர்களும் = தேவர்களும் உறுவர = (நாம் முன்பு சென்று வழிபடுவதற்கு இல்லையே என்று) முணுமுணுக்கும் பட முநிவோரும் =
முனிவர்களும்.

பரவி முன் அநுதினம் மனம் மகிழ் உற அணி
பணி திகழ் தணிகையில் உறைவோனே

பரவி = போற்றி. முன் = முன் நின்று அநுதினம் = நாள்தோறும் மனம் மகிழ் உற = மன மகிழ்ச்சி அடைய
அணி = அழகிய பணி = பாம்பும் திகழ் = விளங்கும் தணிகையில் உறைவோனே = திருத்தணிகையில் வீற்றிருப்பவனே.

பகர் தரு குற மகள் தரு அமை வநிதையும்
இருபுடை உற வரு பெருமாளே.

பகர் தரு = யாவராலும் புகழப் படும் குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளியும் தரு = கற்பக மரத்தின் நிழலில் அமை = வீற்றிருந்த வநிதையும் = பெண்ணாகிய தேவ சேனையும் இரு புடை உற வரும் பெருமாளே = இரண்டு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளி இருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
அரகர என்னும் சொல்லுக்கு உரிய சிவபெருமானும், திருமாலும், பிரமனும் போற்றி உன் முன்னிலையில் ஆறுமுகனே சரவணனே என்று நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செல்ல விட்ட சிறந்த வீரனே, சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடியை அடியார்கள் உள்ளத்தில் பொருந்த அருளும் முருகனே, மலைமகளாகிய பார்வதி அருளிய குகனே, 

பரம சிவனின் இரண்டு செவிகளிலும் மகிழ்ச்சி கொள்ள பிரணவத்தின் முடிவுப் பொருளை அவருக்கு எடுத்துரைத்த குருபரனே, சிறப்பு பொருந்திய உலகோரும், தேவர்களும், முனிவர்களும் நாள்தோறும் மகிழும்படி தணிகையில் உறைபவனே, யாவராலும் புகழப்படும் வள்ளியும், கற்பக தருவின் நிழலில் வீற்றிருந்த தேவசேனையும் இரு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

இது ஒரு துதிப் பாடல்.

விளக்கக் குறிப்புகள்
1.இரு செவி களி கூர....
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா -------                                                     திருப்புகழ் , சிவனார்
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே             ----                                    திருப்புகழ் , குசமாகி

2.. உலகம் மன் அலகில உயிர்களும்......
பக்குவப் படாத உயிர்களெலாம் தாங்கள் முருக வழிபாட்டில்
பக்குவப்பட்ட முனிவர்களை முந்திக் கொள்ளவில்லயே என்று நொந்து
கொண்டு முணு முணுத்தல்.  இக்கருத்தைத் திருவாசகத்திலும் காணலாம்.
அறுகு எடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம்
நம்மில்பின்பு அல்லது எடுக்க ஓட்டோம்.ப்           ---             திருவாசகம் திருப்பொற்சுண்ணம்

3. பணிதிகழ் தணிகையில் உறைவோனே....
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிகைமலையி லுறைகின்ற பெருமாளே ---                                         திருப்புகழ், முலைபுளக


” tag:

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
      னறுமுக சரவண                   பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
      அனலென எழவிடு                       மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
      உளமதி லுறவருள்                     முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
      பரமன திருசெவி                            களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
      உரைதரு குருபர                        வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
      ரவர்களு முறுவர                   முநிவோரும்
பரவி முனநுதின மனமகிழ் வுறவணி
      பணிதிகழ் தணிகையி          லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
      மிருபுடை யுறவரு                   பெருமாளே
-115 திருத்தணிகை
 
பதம் பிரித்து உரை

அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன்
அறு முக சரவணபவ என்று

அரகர சிவன் = அரகர என்னும் அருமைச் சொல்லுக்கு உரிய சிவபெருமானும் அரி, அயன் = திருமாலும், பிரமனும் இவர் = ஆகிய இம் மூவர் பரவி = போற்றி முன் = உனது முன்னிலையில் அறு முக சரவண பவனே என்று = ஆறுமுகனே, சரவணபவனே என்று.

அநுதின(ம்) மொழி தர அசுரர்கள் கெட அயில்
அனல் என எழ விடும் அதி வீரா

அநுதினம் = நாள் தோறும் மொழிதர = துதிக்க அசுரர்கள்
கெட = அசுரர்கள் அழியும்படி அயில் = வேலாயுதத்தை 
அனல் என = நெருப்பு போல் எழ விடும் அதி தீரா = செல்ல விட்ட சிறந்த வீரனே.

பரிபுர கமலம் அது அடி இணை அடியவர்
உளம் அதில் உற அருள் முருகேசா

பரிபுரம் = சிலம்புகள் அணிந்த. கமல அடி இணை = தாமரை போன்ற இரண்டு திருவடிகளை. அடியவர் = அடியாருடைய. உளம் அதில் உற = உள்ளத்தில் பொருந்தும்படி. அருள் முருகேசா = அருளும் முருகேசனே.

பகவதி வரை மகள் உமை தர வரு குக
பரமனது இரு செவி களிகூர

பகவதி = பகவதி வரை மகள் = இமவான் மகள் பார்வதி உமை = உமா தேவி. தர = அருள வரு குக = வந்குகனே பரமனது = பரசிவனுடைய இரு செவி = இரண்டு காதுகளிலும் களி கூர = மகிழச்சி கொள்ள.

உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை
உரை தரு குருபர உயர்வாய

உரை செயும் = (யாவராலும்) போற்றப்படும் ஒரு மொழி = ஒப்பற்ற மொழியான பிரணவ முடிவதை = பிரணவ மந்திரத்தின் முடிவுப் பொருளை உரை தரு = எடுத்துரைத்த. குருபர = குருபர மூர்த்தியே. உயர்வாய = சிறப்புப் பொருந்திய.

உலக மன் அலகில உயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர முநிவோரும்

உலகம் மன் = உலகத்திலுள்ள அலகில = கணக்கற்ற உயிர்களும் = உயிர்களும் இமையவர் அவர்களும் = தேவர்களும் உறுவர = (நாம் முன்பு சென்று வழிபடுவதற்கு இல்லையே என்று) முணுமுணுக்கும் பட முநிவோரும் =
முனிவர்களும்.

பரவி முன் அநுதினம் மனம் மகிழ் உற அணி
பணி திகழ் தணிகையில் உறைவோனே

பரவி = போற்றி. முன் = முன் நின்று அநுதினம் = நாள்தோறும் மனம் மகிழ் உற = மன மகிழ்ச்சி அடைய
அணி = அழகிய பணி = பாம்பும் திகழ் = விளங்கும் தணிகையில் உறைவோனே = திருத்தணிகையில் வீற்றிருப்பவனே.

பகர் தரு குற மகள் தரு அமை வநிதையும்
இருபுடை உற வரு பெருமாளே.

பகர் தரு = யாவராலும் புகழப் படும் குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளியும் தரு = கற்பக மரத்தின் நிழலில் அமை = வீற்றிருந்த வநிதையும் = பெண்ணாகிய தேவ சேனையும் இரு புடை உற வரும் பெருமாளே = இரண்டு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளி இருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
அரகர என்னும் சொல்லுக்கு உரிய சிவபெருமானும், திருமாலும், பிரமனும் போற்றி உன் முன்னிலையில் ஆறுமுகனே சரவணனே என்று நாள்தோறும் துதிக்க, அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செல்ல விட்ட சிறந்த வீரனே, சிலம்பணிந்த தாமரை போன்ற திருவடியை அடியார்கள் உள்ளத்தில் பொருந்த அருளும் முருகனே, மலைமகளாகிய பார்வதி அருளிய குகனே, 

பரம சிவனின் இரண்டு செவிகளிலும் மகிழ்ச்சி கொள்ள பிரணவத்தின் முடிவுப் பொருளை அவருக்கு எடுத்துரைத்த குருபரனே, சிறப்பு பொருந்திய உலகோரும், தேவர்களும், முனிவர்களும் நாள்தோறும் மகிழும்படி தணிகையில் உறைபவனே, யாவராலும் புகழப்படும் வள்ளியும், கற்பக தருவின் நிழலில் வீற்றிருந்த தேவசேனையும் இரு பக்கங்களிலும் பொருந்த எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

இது ஒரு துதிப் பாடல்.

விளக்கக் குறிப்புகள்
1.இரு செவி களி கூர....
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா -------                                                     திருப்புகழ் , சிவனார்
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே             ----                                    திருப்புகழ் , குசமாகி

2.. உலகம் மன் அலகில உயிர்களும்......
பக்குவப் படாத உயிர்களெலாம் தாங்கள் முருக வழிபாட்டில்
பக்குவப்பட்ட முனிவர்களை முந்திக் கொள்ளவில்லயே என்று நொந்து
கொண்டு முணு முணுத்தல்.  இக்கருத்தைத் திருவாசகத்திலும் காணலாம்.
அறுகு எடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம்
நம்மில்பின்பு அல்லது எடுக்க ஓட்டோம்.ப்           ---             திருவாசகம் திருப்பொற்சுண்ணம்

3. பணிதிகழ் தணிகையில் உறைவோனே....
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிகைமலையி லுறைகின்ற பெருமாளே ---                                         திருப்புகழ், முலைபுளக


No comments:

Post a Comment

Your comments needs approval before being published