F

படிப்போர்

Wednesday 3 October 2012

114.அமைவுற்று


அமைவுற் றடையப் பசியுற் றவருக்
        கமுதைப் பகிர்தற்                      கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
        தருள்தப் பிமதத்                              தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
        சமனெட் டுயிரைக்              கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
        தளர்வுற் றொழியக்                  கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
        தவருக் கிசையப்                    புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
        கிரையிட் டிடுவிக்                         ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
        தவமுற் றவருட்                             புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
        தணியிற் குமரப்                       பெருமாளே.
-  114 திருத்தணி

பதம் பிரித்து உரை

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு
அமுதை பகிர்தற்கு இசையாதே

அடையப் பசி உற்றவருக்கு = முற்றும் பசியுடன் வந்தவருக்கு அமைவுற்று = மன அமைதியுடன் அமுதை= அன்னத்தை பகிர்தற்கு = ஒரு பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கு இசையாதே= மனம் வராமல்.

அடையப் பொருள கை இளமைக்கு என வைத்து
அருள் தப்பி மதத்து அயராதே

அடையப் பொருள் = வைத்துள்ள எல்லா பொருளையும் கை = கைவசத்தே இளமைக்கு என = (தாம் வரவர இளமை அடைவது போல்)தமது இளமைப் பருவத்துக்கு எனச் சேகரித்து வைத்து அருள் தப்பி = அருள் நெறியில் நின்றும் தடுமாறிப் போய் மதத்து அயராதே = ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல்.

தமர் சுற்றி அழ பறை கொட்டி இட
சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்

தமர்= சுற்றத்தார் சுற்றி அழ= சுற்றி அழ பறை கொட்டியிட = பறைகள் கொட்டி முழங்க சமன் = நமன் நெட்டு = நெடுந்தூரம் உயிரைக் கொடு போகும் = உயிரைக்கொண்டு போகின்ற

சரிரத்தினை நிற்கும் என கருதி
தளர் உற்று ஒழிய கடவேனோ

சரிரத்தினை = உடலை நிற்கும் எனக் கருதி = நிலைத்து நிற்கும் என்று நினைத்து தளர்வுற்று ஒழிய= தளர்ந்து ஒழிவதா கடவேனோ = என் தலை விதி?

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து
அவருக்கு இசைய புகல்வோனே

இமயத்து மயிற்கு = பரவத ராஜனிடம் வளர்ந்த மயில் போன்ற பார்வதிக்கு ஒரு பக்கம் அளித்தவருக்கு = தனது இடது பாகத்தைத் தந்தவராகிய சிவ பெருமானுக்கு இசையப் புகல்வோனே = அவர் மனம் உவக்க உபதேசித்தவனே (அல்லது ஞானசம்பந்தராகப் பதிகங்கள் சொன்னவனே).

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு
இரை விட்டிடும் விக்ரம வேலா

இரணித்தனில் = போரில் வந்து எற்றுவரை = எதிர்ப்பவரை கழுகுக்கு இரை விட்டிடும் = கழுகுக்கு உணவாக்குகின்ற விக்ரம வேலா = வீரம் கொண்ட வேலாயுதத்தை உடையவனே.

சமய சிலுகில் இட்டவரை தவறி
தவம் உற்ற அவருள் புக நாடும்

சமயச் சிலுகு இட்டவரை= மதப் போராட்டம் செய்பவர் களின்றும் தவறி= விலகி தவம் உற்று= என் தவம் நிறைவுற்று அருள் புக நாடும் = உனது திருவருளை அடைய நான் விரும்புகின்ற.

சடு பத்ம முக குக புக்கு கனம்
தணியில் குமரப் பெருமாளே.

சடு = ஆறு பத்மம் = தாமரை ஒத்த முக குக = திருமுகங் களை உடைய குகனே புக்கு = (சூரனொடு போர் முடிந்து வள்ளியை மணந்த பின்)  சென்று அமர்ந்துள்ள கனத் தணியில் = பெருமை வாய்ந்த தணிகையில் வீற்றிருக்கும்  குமரப் பெருமாளே = குமரப் பெருமாளே.

சுருக்க உரை

பசியுடன் வருபவர்க்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமல், எல்லா பொருள்களையும் சேகரித்து வைத்து, அருள் நெறியினின்றும் தவறிப் போய், ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் கதறி அழ, நமன் வெகு தூரம் கொண்டு போகின்ற உடலை நிலையானது என்று எண்ணி, அதற்காகப் பாடுபடுவது என் தலை விதியா?
பார்வதியைப் பக்கத்தில் வைத்துள்ள சிவபெருமானுக்கு அவர் உவக்க உபதேசம் செய்தவரே, போரில் எதிர்த்து வந்த சூரனைக் கழுகுக்கு இரையாகும்படி அழித்த வேலாயுதத்தை உடையவரே, மதப் போராட்டம் செய்பவர்கள் கூட்டத்தினின்று விலகி, உனது திருவடிகளை அடைய நான் விரும்புகின்ற ஆறு திரு முகங்களை உடையவரே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் நிலையில்லாத உடலை நிலை என்று நம்பித் தளர்வுறக் கடவேனோ?

ஒப்புக
சம நெட்டு உயிரைக் கொடு போகும் சரிரத்தினை நிற்கும்........
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே                    -                               கந்தர் அலங்காரம்



” tag:

அமைவுற் றடையப் பசியுற் றவருக்
        கமுதைப் பகிர்தற்                      கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
        தருள்தப் பிமதத்                              தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
        சமனெட் டுயிரைக்              கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
        தளர்வுற் றொழியக்                  கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
        தவருக் கிசையப்                    புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
        கிரையிட் டிடுவிக்                         ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
        தவமுற் றவருட்                             புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
        தணியிற் குமரப்                       பெருமாளே.
-  114 திருத்தணி

பதம் பிரித்து உரை

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு
அமுதை பகிர்தற்கு இசையாதே

அடையப் பசி உற்றவருக்கு = முற்றும் பசியுடன் வந்தவருக்கு அமைவுற்று = மன அமைதியுடன் அமுதை= அன்னத்தை பகிர்தற்கு = ஒரு பங்கு எடுத்துக் கொள்ளுவதற்கு இசையாதே= மனம் வராமல்.

அடையப் பொருள கை இளமைக்கு என வைத்து
அருள் தப்பி மதத்து அயராதே

அடையப் பொருள் = வைத்துள்ள எல்லா பொருளையும் கை = கைவசத்தே இளமைக்கு என = (தாம் வரவர இளமை அடைவது போல்)தமது இளமைப் பருவத்துக்கு எனச் சேகரித்து வைத்து அருள் தப்பி = அருள் நெறியில் நின்றும் தடுமாறிப் போய் மதத்து அயராதே = ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல்.

தமர் சுற்றி அழ பறை கொட்டி இட
சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்

தமர்= சுற்றத்தார் சுற்றி அழ= சுற்றி அழ பறை கொட்டியிட = பறைகள் கொட்டி முழங்க சமன் = நமன் நெட்டு = நெடுந்தூரம் உயிரைக் கொடு போகும் = உயிரைக்கொண்டு போகின்ற

சரிரத்தினை நிற்கும் என கருதி
தளர் உற்று ஒழிய கடவேனோ

சரிரத்தினை = உடலை நிற்கும் எனக் கருதி = நிலைத்து நிற்கும் என்று நினைத்து தளர்வுற்று ஒழிய= தளர்ந்து ஒழிவதா கடவேனோ = என் தலை விதி?

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து
அவருக்கு இசைய புகல்வோனே

இமயத்து மயிற்கு = பரவத ராஜனிடம் வளர்ந்த மயில் போன்ற பார்வதிக்கு ஒரு பக்கம் அளித்தவருக்கு = தனது இடது பாகத்தைத் தந்தவராகிய சிவ பெருமானுக்கு இசையப் புகல்வோனே = அவர் மனம் உவக்க உபதேசித்தவனே (அல்லது ஞானசம்பந்தராகப் பதிகங்கள் சொன்னவனே).

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு
இரை விட்டிடும் விக்ரம வேலா

இரணித்தனில் = போரில் வந்து எற்றுவரை = எதிர்ப்பவரை கழுகுக்கு இரை விட்டிடும் = கழுகுக்கு உணவாக்குகின்ற விக்ரம வேலா = வீரம் கொண்ட வேலாயுதத்தை உடையவனே.

சமய சிலுகில் இட்டவரை தவறி
தவம் உற்ற அவருள் புக நாடும்

சமயச் சிலுகு இட்டவரை= மதப் போராட்டம் செய்பவர் களின்றும் தவறி= விலகி தவம் உற்று= என் தவம் நிறைவுற்று அருள் புக நாடும் = உனது திருவருளை அடைய நான் விரும்புகின்ற.

சடு பத்ம முக குக புக்கு கனம்
தணியில் குமரப் பெருமாளே.

சடு = ஆறு பத்மம் = தாமரை ஒத்த முக குக = திருமுகங் களை உடைய குகனே புக்கு = (சூரனொடு போர் முடிந்து வள்ளியை மணந்த பின்)  சென்று அமர்ந்துள்ள கனத் தணியில் = பெருமை வாய்ந்த தணிகையில் வீற்றிருக்கும்  குமரப் பெருமாளே = குமரப் பெருமாளே.

சுருக்க உரை

பசியுடன் வருபவர்க்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமல், எல்லா பொருள்களையும் சேகரித்து வைத்து, அருள் நெறியினின்றும் தவறிப் போய், ஆணவத்தால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் கதறி அழ, நமன் வெகு தூரம் கொண்டு போகின்ற உடலை நிலையானது என்று எண்ணி, அதற்காகப் பாடுபடுவது என் தலை விதியா?
பார்வதியைப் பக்கத்தில் வைத்துள்ள சிவபெருமானுக்கு அவர் உவக்க உபதேசம் செய்தவரே, போரில் எதிர்த்து வந்த சூரனைக் கழுகுக்கு இரையாகும்படி அழித்த வேலாயுதத்தை உடையவரே, மதப் போராட்டம் செய்பவர்கள் கூட்டத்தினின்று விலகி, உனது திருவடிகளை அடைய நான் விரும்புகின்ற ஆறு திரு முகங்களை உடையவரே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் நிலையில்லாத உடலை நிலை என்று நம்பித் தளர்வுறக் கடவேனோ?

ஒப்புக
சம நெட்டு உயிரைக் கொடு போகும் சரிரத்தினை நிற்கும்........
குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே                    -                               கந்தர் அலங்காரம்



No comments:

Post a Comment

Your comments needs approval before being published