F

படிப்போர்

Monday 5 November 2012

134துப்பாரப்பா


எவருக்கும் எட்டாத குமரக்கடவுளின் திருவருளை நாடி வேண்டுதல்

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்   
   சொற்பா வெளிமுக்                      குணமோகம்   
துற்றா யப்பீ றற்றோ லிட்டே   
   சுற்றா மதனப்                              பிணிதோயும்   
இப்பா வக்கா யத்தா சைப்பா   
   டெற்றே யுலகிற்                               பிறவாதே       
எத்தார் வித்தா ரத்தே கிட்டா   
   எட்டா அருளைத்                           தரவேணும்   
தப்பா மற்பா டிச்சே விப்பார்       
   தத்தாம் வினையைக்                 களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய்  மெய்ப்போ     
   தத்தாய் தணிகைத்                           தனிவேலா   
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா   
   வற்பா வைதனத்                      தணைவோனே   
அத்தா நித்தா முத்தா சித்தா   
   அப்பா குமரப்                               பெருமாளே.
-134 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால்   
சொல் பா வெளி முக்குண(ம்) மோகம்

துப்பு = உணவு தரும்.
பார் = மண்.
அப்பு = நீர்.
ஆடல் = அசைகின்ற.
தீ = நெருப்பு.
மொய் = நெருங்கி வீசும் கால் = காற்று  சொல் = புகழப்படு கின்ற பா = பரப்பு உள்ள வெளி = ஆகாயம் (ஆகிய பஞ்ச பூதங்கள்) முக் குணம் =  சத்துவம், தாமசம், இராசதம் என்னும் மூன்று குணங்கள் மோகம் = மண், பெண், பொன் ஆகிய மூவாசைகள் (ஆகியவற்றை).

துற்று ஆய பீறல் தோல் இட்டே
சுற்றா மதன பிணி தோயும்

துற்று ஆய = நெருக்கமாக வைக்கப்பட்டதும் பீறல் = கிழிந்த   
தோல் இட்டே = தோலிட்டு  சுற்றா = சுற்றி மேயப்பட்டதும்
மதனப் பிணி = காம நோய்  தோயும் = தோய்ந்துள்ளதுமான

இப் பாவ காயத்து ஆசைப்பாடு    
எற்றே உலகில் பிறவாதே

இப்பாவக் காயத்து = இந்த பாவத்துக்கு ஈடான உடலின் மேல் ஆசைப்பாடு எற்றே = ஆசைப் படுவதை மேற் கொண்டு உலகில் பிறவாதே = இந்த உலகில் பிறக்காமல்.

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா   
எட்டா அருளை தர வேணும்

எத்தார் = உன்னைத் துதிக்காதவருடைய வித்தாரத்தே = கல்வி சாமர்த்தியத்தால் கிட்டா = கிட்டாததும்  எட்டா = எட்டாததுமான அருளைத் தர வேணும் = உனது திருவருளைத் தந்து அருள வேண்டும்.

தப்பாமல் பாடி சேவிப்பார்   
தத்தாம் வினையை களைவோனே

தப்பாமல் = தவறாமல்  பாடிச் சேவிப்பார் = (உன்னைப்) பாடித் தொழுபவர்களுடைய தத்தாம் வினையை = அவரவர் களுடைய வினையை  களைவோனே = போக்குபவனே.

தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய்    
தணிகை தனி வேலா

தற்கு = செருக்கும் ( நான் என்ற ஆணவம்ஆழி = எதையும் ஆளும் எண்ணமும் கொண்ட  சூர் = சூரனை  செற்றாய் = அழித்தவனே மெய்ப் போதத்தாய் = மெய்ஞ்ஞான மூர்த்தியே
தணிகை = தணிகையில் வீற்றிருக்கும் தனி வேலா = ஒப்பற்ற வேலனே.

அப் பாகை பாலை போல் சொல் காவல்  
பாவை தனத்து அணைவோனே

அப் பாகை = அந்தச் சர்க்கரை வெல்லத்தையும் பாலைப் போல் = பாலையும் போல் இனிக்கும் சொல் = சொற்களை உடைய  காவல் பாவை = தினைப் புனம் காத்த வள்ளியின்.
தனத்து அணைவோனே = கொங்கைகளை அணைந்தவனே.

அத்தா நித்தா முத்தா சித்தா   
அப்பா குமர பெருமாளே.

அத்தா = உயர்ந்தோனே நித்தா = என்றும் அழியாமல் இருப்பவனே  முத்தா = பாசங்களை நீங்கியவனே சித்தா = சித்திகளில் வல்லவனே  அப்பா = தந்தையே  குமரப் பெருமாளே = குமரப் பெருமாளே.

சுருக்க உரை

ஐந்து பூதங்களும், முக்குணங்களும், மூவாசைகளும் நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும், கிழிந்த தோலால் மேயப்பட்டதும், காம நோய்களுக்கு இடமானதுமான, இந்த வினைகளால் ஏற்படும் உடலின் மேல் ஆசை வைத்து, மீண்டும் உலகில் பிறவாமல், உன்னைத் துதியாதவர்களின் கல்விக்கு எட்டாததான உனது திருவடிகளை எனக்குத் தந்து அருள வேண்டும்.

உன்னைத் தவறாமல் துதிப்போரின் வினைகளைக் களைபவனே. செருக்கும், ஆணவமும் கொண்ட சூரனை அழித்தவனே, மெய்ஞ்ஞான
மூர்த்தியே, தணிகையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலனே, இனிய சொற்களை உடைய தினைப்புனம் காத்த வள்ளியின் கொங்கைகளை அணைந்தவனே, அத்தனே. என்றும் அழிவில்லாதவனே, அப்பா, குமரப் பெருமாளே, உன் அருளைத் தந்தருள வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம். இது முருகக்
கடவுளின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று (வ.சு.செங்கல்வராய பிள்ளை).

மூவாசை : மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை . ஒப்புக ‘மூவேடணை’ - அநுபூதி


மூவாசை,  நிலையாமை,
  தணிகை,  வேல், வள்ளி, மெய்ஞ்ஞானம் 
” tag:

எவருக்கும் எட்டாத குமரக்கடவுளின் திருவருளை நாடி வேண்டுதல்

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்   
   சொற்பா வெளிமுக்                      குணமோகம்   
துற்றா யப்பீ றற்றோ லிட்டே   
   சுற்றா மதனப்                              பிணிதோயும்   
இப்பா வக்கா யத்தா சைப்பா   
   டெற்றே யுலகிற்                               பிறவாதே       
எத்தார் வித்தா ரத்தே கிட்டா   
   எட்டா அருளைத்                           தரவேணும்   
தப்பா மற்பா டிச்சே விப்பார்       
   தத்தாம் வினையைக்                 களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய்  மெய்ப்போ     
   தத்தாய் தணிகைத்                           தனிவேலா   
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா   
   வற்பா வைதனத்                      தணைவோனே   
அத்தா நித்தா முத்தா சித்தா   
   அப்பா குமரப்                               பெருமாளே.
-134 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால்   
சொல் பா வெளி முக்குண(ம்) மோகம்

துப்பு = உணவு தரும்.
பார் = மண்.
அப்பு = நீர்.
ஆடல் = அசைகின்ற.
தீ = நெருப்பு.
மொய் = நெருங்கி வீசும் கால் = காற்று  சொல் = புகழப்படு கின்ற பா = பரப்பு உள்ள வெளி = ஆகாயம் (ஆகிய பஞ்ச பூதங்கள்) முக் குணம் =  சத்துவம், தாமசம், இராசதம் என்னும் மூன்று குணங்கள் மோகம் = மண், பெண், பொன் ஆகிய மூவாசைகள் (ஆகியவற்றை).

துற்று ஆய பீறல் தோல் இட்டே
சுற்றா மதன பிணி தோயும்

துற்று ஆய = நெருக்கமாக வைக்கப்பட்டதும் பீறல் = கிழிந்த   
தோல் இட்டே = தோலிட்டு  சுற்றா = சுற்றி மேயப்பட்டதும்
மதனப் பிணி = காம நோய்  தோயும் = தோய்ந்துள்ளதுமான

இப் பாவ காயத்து ஆசைப்பாடு    
எற்றே உலகில் பிறவாதே

இப்பாவக் காயத்து = இந்த பாவத்துக்கு ஈடான உடலின் மேல் ஆசைப்பாடு எற்றே = ஆசைப் படுவதை மேற் கொண்டு உலகில் பிறவாதே = இந்த உலகில் பிறக்காமல்.

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா   
எட்டா அருளை தர வேணும்

எத்தார் = உன்னைத் துதிக்காதவருடைய வித்தாரத்தே = கல்வி சாமர்த்தியத்தால் கிட்டா = கிட்டாததும்  எட்டா = எட்டாததுமான அருளைத் தர வேணும் = உனது திருவருளைத் தந்து அருள வேண்டும்.

தப்பாமல் பாடி சேவிப்பார்   
தத்தாம் வினையை களைவோனே

தப்பாமல் = தவறாமல்  பாடிச் சேவிப்பார் = (உன்னைப்) பாடித் தொழுபவர்களுடைய தத்தாம் வினையை = அவரவர் களுடைய வினையை  களைவோனே = போக்குபவனே.

தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய்    
தணிகை தனி வேலா

தற்கு = செருக்கும் ( நான் என்ற ஆணவம்ஆழி = எதையும் ஆளும் எண்ணமும் கொண்ட  சூர் = சூரனை  செற்றாய் = அழித்தவனே மெய்ப் போதத்தாய் = மெய்ஞ்ஞான மூர்த்தியே
தணிகை = தணிகையில் வீற்றிருக்கும் தனி வேலா = ஒப்பற்ற வேலனே.

அப் பாகை பாலை போல் சொல் காவல்  
பாவை தனத்து அணைவோனே

அப் பாகை = அந்தச் சர்க்கரை வெல்லத்தையும் பாலைப் போல் = பாலையும் போல் இனிக்கும் சொல் = சொற்களை உடைய  காவல் பாவை = தினைப் புனம் காத்த வள்ளியின்.
தனத்து அணைவோனே = கொங்கைகளை அணைந்தவனே.

அத்தா நித்தா முத்தா சித்தா   
அப்பா குமர பெருமாளே.

அத்தா = உயர்ந்தோனே நித்தா = என்றும் அழியாமல் இருப்பவனே  முத்தா = பாசங்களை நீங்கியவனே சித்தா = சித்திகளில் வல்லவனே  அப்பா = தந்தையே  குமரப் பெருமாளே = குமரப் பெருமாளே.

சுருக்க உரை

ஐந்து பூதங்களும், முக்குணங்களும், மூவாசைகளும் நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும், கிழிந்த தோலால் மேயப்பட்டதும், காம நோய்களுக்கு இடமானதுமான, இந்த வினைகளால் ஏற்படும் உடலின் மேல் ஆசை வைத்து, மீண்டும் உலகில் பிறவாமல், உன்னைத் துதியாதவர்களின் கல்விக்கு எட்டாததான உனது திருவடிகளை எனக்குத் தந்து அருள வேண்டும்.

உன்னைத் தவறாமல் துதிப்போரின் வினைகளைக் களைபவனே. செருக்கும், ஆணவமும் கொண்ட சூரனை அழித்தவனே, மெய்ஞ்ஞான
மூர்த்தியே, தணிகையில் வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலனே, இனிய சொற்களை உடைய தினைப்புனம் காத்த வள்ளியின் கொங்கைகளை அணைந்தவனே, அத்தனே. என்றும் அழிவில்லாதவனே, அப்பா, குமரப் பெருமாளே, உன் அருளைத் தந்தருள வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

சித்தன் என்பது பிள்ளையாருக்குத் திருநாமம். இது முருகக்
கடவுளின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று (வ.சு.செங்கல்வராய பிள்ளை).

மூவாசை : மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை . ஒப்புக ‘மூவேடணை’ - அநுபூதி


மூவாசை,  நிலையாமை,
  தணிகை,  வேல், வள்ளி, மெய்ஞ்ஞானம் 

No comments:

Post a Comment

Your comments needs approval before being published