F

படிப்போர்

Monday 5 November 2012

135தொக்கறா


தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக 
   துக்கமாற் கடமு                             மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
   துப்பிலாப் பலச                           மயநூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
   லப்புலாற் றசைகு                          ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
   சட்டவாக் கழிவ                         தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
   அர்ச்சியாத் தொழுமு                        நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
   வெற்பபார்ப் பதிந                            திகுமாரா 
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
   வத்தினோர்க் குதவு                  மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
   டெத்தினார்க் கெளிய                 பெருமாளே
-135 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக(ம்)
துக்கம் மால் கடம் மு(ம்)மலம் மாயை

தொக்கு அறா = தோல் நீங்காத குடில் = குடிசையாகிய உடல் அசுத்தம் ஏற்ற = அழுக்கை ஏற்றதும் சுக துக்க மால் கடம் = இன்பம், துன்பம், ஆசை கொண்டதுமான குடம்              
மும்மல மாயை = மும்மலங்களும், மாயையும்

துற்ற கால் பதலை சொல் படா குதலை
துப்பு இலா பல சமய நூலை

துற்ற = நெருங்க வைத்த கால் பதலை = காற்று அடங்கும் பானை  சொல் படா குதலை = சொல் சொல்லாக விளங்காத மழலைச் சொல்  போன்ற துப்பு இலா = அறிவுக்குப் பொருந்தாத பல சமய நூலை = பல சமய நூல்களை.

கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல
புலால் தசை குருதியாலே

கைக்கொளா = மேற்கொண்டு கதறுகை = வீண் கூச்சலை
கொளா = கைப்பிடித்து ஆக்கை = உடம்பு அவல = துன்பத்துக்கு இடமான புலால் = மாமிசம் தசை குருதியாலே = சதை, இரத்தம் இவற்றால்.

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல
சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே

கட்டுக் கூட்டு = கட்டப்பட்ட கலப்பு அருவருப்பு = (மிக) வெறுக்கத்தக்க (பொருளான இந்த சரீரத்தை) வேட்டு = விரும்பி உழல = திரிகின்ற எனக்கு  சட்ட = நன்றாக வாக்கு அழிவதுவாக்கு 
அழிவதும் (மவுன நிலை கூடவும்) ஒரு நாளே = ஒரு நாள் வருமோ?

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர்
அர்ச்சியா தொழும் முநிவனாய்

அக்கு அராப் பொடியின் = எலும்பு, பாம்பு, திருநீறு (இவைகளை) மெய்க்கு இடா குரவர் = உடம்பில் அணிந்துள்ள பெரியவராகிய சிவபெருமான் அர்ச்சியாத் தொழு = அர்ச்சித்துத் தொழுத முநிவன் ஆய = ஞானியாகிய.

அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல்
வெற்ப பார்ப்பதி நதி குமாரா

அப்ப = அப்பனே போர் = போர் செய்ய வல்ல பன்னிரு = பன்னிரு வெற்ப = மலை போன்ற தோளனே  பூத் தணியல் வெற்ப = (குவளை) மலர் மலர்கின்ற தணிகை மலை (வாழ்வே).
பார்ப்பதி = பார்வதிக்கும்  நதி = (கங்கை) நதிக்கும் குமாரா = குமரனே.

இக்கண் நோக்கு உறில் நிருத்த நோக்கு உறு 
தவத்தினோர்க்கு உதவும் இளையோனே

இக்கண் நோக்கு உறில் = இந்தப் பூமியில் நோக்கம் என்பது
இருந்தால் நிருத்த நோக்கு = அது உன்னுடைய நடனத்தை நோக்கும்  நோக்கு ஒன்றே உறு தவத்தினோர்க்கு = அத்தகைய நோக்கை உடைய தவசிகளுக்கு. உதவும் இளையோனே = உதவும் இளையவனே.

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு
எத்தினார்க்கு எளிய பெருமாளே.

எத்திடார்க்கு = உன்னை ஏத்தாதவர்களுக்கு அரிய = அரியவனே முத்த = பாசங்களை நீங்கிய முத்தனே  தமிழ்கொடு = தமிழ்ப் 
பாக்களால் எத்தினார்க்கு = உன்னை எத்தினவர்களுக்கு  எளிய = எளிய பெருமாளே = பெருமையின் மிக்கவரே.

சுருக்க உரை

தோல் நீங்காத குடிசையாகிய உடல் அசுத்தத்தையும், சுகம், துக்கம், ஆசை ஆகியவைகளையும் ஏற்கும் குடமாகும். மும்மலம், மாயை நெருங்க வைக்கப்பட்ட பானையாகும். மழலைச் சொல் போன்று அறிவுக்குப் பொருந்தாதப் பல சமய நூல்களைக் கற்றுக் கதறுவதை மேற்கொண்டு, துன்பத்துக்கு இடமான உடலை விரும்பித் திரிகின்ற எனக்கு இவ்வுடலை வெறுத்து மவுன நிலை கூடுவது ஒரு நாள் வருமோ?

எலும்பு, பாம்பு, திருநீறு இவற்றைத் தரித்த பெரியோனாகிய சிவபெருமான் உன்னை அருச்சித்துத் தொழுத ஞானியாகிய அப்பனே,
பன்னிரு மலை போன்ற தோள்களை உடையவனே, பார்வதிக்கும், கங்கை நதிக்கும் குமாரனே, இந்தப் பூமியில் நோக்கம் என்பது இருந்தால்
அது உன் நடனத்தைக் காணும் நோக்கம் ஒன்றே ஆகும். அத்தகைய
நடனத்தைக் காணத் தவசீலர்களுக்கு உதவும் இளையோனே, உன்னைத் துதியாதவர்களுக்கு அரிதானவனே, தமிழ்ப் பாடல்களால் உன்னைப் பாடித் துதிப்பவர்களுக்கு எளிமையானவனே, என் வாக்கு ஒழிந்து
மவுன நிலை கிட்டுவது ஒரு நாளோ?
சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே

விளக்கக் குறிப்புகள்

அர்ச்சியா தொழும் முநிவனாய் : இது சிவபெருமான் தணிகையில் முருகவேளிடம் உபதேசம் பெற்றதைக் குறிக்கும்.
சிலைமகள் நாயகன் கலைமகள் நாயகன்
திருமகள் நாயகன்  தொழும்வேலா     ...            திருப்புகழ், கலைமடவார்.



” tag:

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக 
   துக்கமாற் கடமு                             மலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
   துப்பிலாப் பலச                           மயநூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
   லப்புலாற் றசைகு                          ருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
   சட்டவாக் கழிவ                         தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
   அர்ச்சியாத் தொழுமு                        நிவனாய
அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
   வெற்பபார்ப் பதிந                            திகுமாரா 
இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
   வத்தினோர்க் குதவு                  மிளையோனே
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
   டெத்தினார்க் கெளிய                 பெருமாளே
-135 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக(ம்)
துக்கம் மால் கடம் மு(ம்)மலம் மாயை

தொக்கு அறா = தோல் நீங்காத குடில் = குடிசையாகிய உடல் அசுத்தம் ஏற்ற = அழுக்கை ஏற்றதும் சுக துக்க மால் கடம் = இன்பம், துன்பம், ஆசை கொண்டதுமான குடம்              
மும்மல மாயை = மும்மலங்களும், மாயையும்

துற்ற கால் பதலை சொல் படா குதலை
துப்பு இலா பல சமய நூலை

துற்ற = நெருங்க வைத்த கால் பதலை = காற்று அடங்கும் பானை  சொல் படா குதலை = சொல் சொல்லாக விளங்காத மழலைச் சொல்  போன்ற துப்பு இலா = அறிவுக்குப் பொருந்தாத பல சமய நூலை = பல சமய நூல்களை.

கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல
புலால் தசை குருதியாலே

கைக்கொளா = மேற்கொண்டு கதறுகை = வீண் கூச்சலை
கொளா = கைப்பிடித்து ஆக்கை = உடம்பு அவல = துன்பத்துக்கு இடமான புலால் = மாமிசம் தசை குருதியாலே = சதை, இரத்தம் இவற்றால்.

கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல
சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே

கட்டுக் கூட்டு = கட்டப்பட்ட கலப்பு அருவருப்பு = (மிக) வெறுக்கத்தக்க (பொருளான இந்த சரீரத்தை) வேட்டு = விரும்பி உழல = திரிகின்ற எனக்கு  சட்ட = நன்றாக வாக்கு அழிவதுவாக்கு 
அழிவதும் (மவுன நிலை கூடவும்) ஒரு நாளே = ஒரு நாள் வருமோ?

அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர்
அர்ச்சியா தொழும் முநிவனாய்

அக்கு அராப் பொடியின் = எலும்பு, பாம்பு, திருநீறு (இவைகளை) மெய்க்கு இடா குரவர் = உடம்பில் அணிந்துள்ள பெரியவராகிய சிவபெருமான் அர்ச்சியாத் தொழு = அர்ச்சித்துத் தொழுத முநிவன் ஆய = ஞானியாகிய.

அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல்
வெற்ப பார்ப்பதி நதி குமாரா

அப்ப = அப்பனே போர் = போர் செய்ய வல்ல பன்னிரு = பன்னிரு வெற்ப = மலை போன்ற தோளனே  பூத் தணியல் வெற்ப = (குவளை) மலர் மலர்கின்ற தணிகை மலை (வாழ்வே).
பார்ப்பதி = பார்வதிக்கும்  நதி = (கங்கை) நதிக்கும் குமாரா = குமரனே.

இக்கண் நோக்கு உறில் நிருத்த நோக்கு உறு 
தவத்தினோர்க்கு உதவும் இளையோனே

இக்கண் நோக்கு உறில் = இந்தப் பூமியில் நோக்கம் என்பது
இருந்தால் நிருத்த நோக்கு = அது உன்னுடைய நடனத்தை நோக்கும்  நோக்கு ஒன்றே உறு தவத்தினோர்க்கு = அத்தகைய நோக்கை உடைய தவசிகளுக்கு. உதவும் இளையோனே = உதவும் இளையவனே.

எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு
எத்தினார்க்கு எளிய பெருமாளே.

எத்திடார்க்கு = உன்னை ஏத்தாதவர்களுக்கு அரிய = அரியவனே முத்த = பாசங்களை நீங்கிய முத்தனே  தமிழ்கொடு = தமிழ்ப் 
பாக்களால் எத்தினார்க்கு = உன்னை எத்தினவர்களுக்கு  எளிய = எளிய பெருமாளே = பெருமையின் மிக்கவரே.

சுருக்க உரை

தோல் நீங்காத குடிசையாகிய உடல் அசுத்தத்தையும், சுகம், துக்கம், ஆசை ஆகியவைகளையும் ஏற்கும் குடமாகும். மும்மலம், மாயை நெருங்க வைக்கப்பட்ட பானையாகும். மழலைச் சொல் போன்று அறிவுக்குப் பொருந்தாதப் பல சமய நூல்களைக் கற்றுக் கதறுவதை மேற்கொண்டு, துன்பத்துக்கு இடமான உடலை விரும்பித் திரிகின்ற எனக்கு இவ்வுடலை வெறுத்து மவுன நிலை கூடுவது ஒரு நாள் வருமோ?

எலும்பு, பாம்பு, திருநீறு இவற்றைத் தரித்த பெரியோனாகிய சிவபெருமான் உன்னை அருச்சித்துத் தொழுத ஞானியாகிய அப்பனே,
பன்னிரு மலை போன்ற தோள்களை உடையவனே, பார்வதிக்கும், கங்கை நதிக்கும் குமாரனே, இந்தப் பூமியில் நோக்கம் என்பது இருந்தால்
அது உன் நடனத்தைக் காணும் நோக்கம் ஒன்றே ஆகும். அத்தகைய
நடனத்தைக் காணத் தவசீலர்களுக்கு உதவும் இளையோனே, உன்னைத் துதியாதவர்களுக்கு அரிதானவனே, தமிழ்ப் பாடல்களால் உன்னைப் பாடித் துதிப்பவர்களுக்கு எளிமையானவனே, என் வாக்கு ஒழிந்து
மவுன நிலை கிட்டுவது ஒரு நாளோ?
சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே

விளக்கக் குறிப்புகள்

அர்ச்சியா தொழும் முநிவனாய் : இது சிவபெருமான் தணிகையில் முருகவேளிடம் உபதேசம் பெற்றதைக் குறிக்கும்.
சிலைமகள் நாயகன் கலைமகள் நாயகன்
திருமகள் நாயகன்  தொழும்வேலா     ...            திருப்புகழ், கலைமடவார்.



No comments:

Post a Comment

Your comments needs approval before being published