F

படிப்போர்

Wednesday 20 March 2013

200.பாதாள


200
விராலிமலை

          தானான தான தான தனதன
           தானான தான தான தனதன
           தானான தான தான தனதன    தனதான

பாதாள மாதி லோக நிகிலமு
   மாதார மான மேரு வெனவளர்
   படீர பார மான முலையினை        விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
   லாலேய நேக மோக மிடுபவர்
   பாதாதி கேச மாக வகைவகை          கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
   நாதானி லாத பாவி யநிஜவன்
   வீணாள்ப டாத போத தவமிலி            பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
   சீர்பாத தூளி யாகி நரகிடை
   வீழாம லேசு வாமி திருவருள்           புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
   வேதாமு ராரி யோட அடுபடை
   சோரா வலாரி சேனை பொடி பட  மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
   மாமாய வீர்ர கோர முடனிகல்
   சூர்மாள வேலை யேவும் வயலியி   லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
   சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
   கோலால நாத கீத மதுகர                மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
   கானாறு பாயு மேரி வயல்பயில்
   கோனாடு சூழ்வி ராலி மலையுறை        பெருமாளே

பதம் பிரித்தல்

******
வேதாளன் ஞான கீனன் விதரண
நா தான் இலாத பாவியன் அநிஜவன்
வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச

*****
வேதாள(ன்) = பேயன் ஞான கீனன் = ஞானம் குறைந்தவன் விதரண = விவேகமுள்ள நா தான் = நாக்கே இலாத பாவி = இல்லாத பாவி அநிஜவன் = உண்மை இல்லாதவன் வீணாள் படாத = வீணாள் உண்டாகாமல் காக்கும் போதம் = அறிவும் தவம் இலி = தவமும் இல்லாதவன் பசு பாசம் = உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும்.

வியாபார மூடன் யானும் உனது இரு
சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே

வியாபார மூடன் = பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன் யானும் = இத்தகைய குணங்களை உடைய நானும் உனது இரு சீர் = உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாத தூளி ஆகி = பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகு இடை வீழாமல் = நரகில் விழாமல் சுவாமி = சுவாமியே. திரு அருள் புரிவாயே = திருவருள் புரிவாயாக.

தூதாளர் ஓடு காலன் வெருவிட
வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி

தூதாளரோடு = (தன்னுடைய) தூதர்களோடு காலன் வெருவிட = யமன் அஞ்சவும் வேதா = பிரமனும் முராரி = திருமாலும் ஓட  (அஞ்சி) ஓடவும் அடு பாடை = கொல்ல வல்ல சேனை சோர = சோர்ந்து போய் வலாரி சேனை பொடிபட = இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும் மறை வேள்வி = வேத வேள்விகள்.

சோமாசிமார் சிவாய நம என
மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
சோமாசிமார் = சோம யாகம் செய்யும் பெரியோர்கள். சிவாயநம என = பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும் மா மாய = பெரிய மாயங்களும் வீர = வீரமும் கோரமுடன் = கோரமும் பொருந்தி இகல் = போர் செய்த. சூர் மாள = சூரன் இறக்கும்படி வேலை ஏவும் = வேலாயுதத்தைச் செலுத்திய வயலியில் இளையோனே = வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே.

கூதாள நீப நாக மலர் மிசை
சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை

கூதாள = கூதாளப் பூ. நீபம் = கடப்ப மலர். நாக மலர் = சுரபுன்னை மலர் மிசை = இவைகளின் மீது சாதாரி, தேசி, நாமக்ரியை முதல் = சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான கோலாகல = ஆடம்பரமான நாத கீத = ஒலி இசைகளைப் பாடும் மதுகரம் = வண்டுகள் அடர் சோலை = நிறைந்த சோலைகளும்.

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய
கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.

கூர் = நிரம்ப ஆரல் = ஆரல் மீன்களை தேரும் நாரை = தேடும் நாரைகள் மருவிய = பொருந்திய கான் ஆறு = காட்டாறுகள் பாயும் = பாய்கின்ற ஏரி = ஏரிகளும் வயல் = வயல்களும் பயில் = நெருங்கியுள்ள கோனாடு சூழ் = கோனாடு என்னும் நாட்டில் உள்ள விராலி மலை உறை = விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாயிருக்கும் மேரு மலையைப் போல் உயர்ந்த கொங்கைகளை விலை கூறி, இனிய பேச்சுக்களைப் பேசி, காம மோகம் தரும் விலை மாதர்களின் அங்கங்களைப் பல வகைகளில் வர்ணித்துக் கவிகளைப் பாடும் பேயன் நான். ஞானம் குறைந்தவன். விவேகம் இல்லாதவன். பொய்யன். அறமும், தவமும் இல்லாதாவன். பதி ஞானம் சிறிதும் இல்லாதவன். இத்தகைய மூடனாகிய என்னை உனது அழகிய பாதங்களின் தூளியாகும் பேற்றை அளித்து, நான் நரகில் வீழாமல் விழாதவாறு திருவருள் புரிவாயாக.

யமன் அஞ்சவும், பிரமனும், திருமாலும் பயந்து ஓடவும், இந்திரனுடைய படைகள் சோர்ந்து போகவும், சோமயாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதி நிற்கவும், சூரன் மாளவும் வேலாயுதத்தைச் செலுத்திய இளையோனே. கூதாளம், நீபம், நாகம் ஆகிய மலர்களின் மீது, பல வித இராகங்களைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும், ஏரிகளும், வயல்களும் நிறைந்த கோனாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் நரகில் வீழாமல் திருவருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்

சோமாசிமார் சிவான நம என.....
சோமாசிமார் = சோம யாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவ யாகங்களை நியதியுடன் செய்யும் மறையோர். சோமயாகம் தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.





” tag:

200
விராலிமலை

          தானான தான தான தனதன
           தானான தான தான தனதன
           தானான தான தான தனதன    தனதான

பாதாள மாதி லோக நிகிலமு
   மாதார மான மேரு வெனவளர்
   படீர பார மான முலையினை        விலைகூறிப்
பாலோடு பாகு தேனெ னினியசொ
   லாலேய நேக மோக மிடுபவர்
   பாதாதி கேச மாக வகைவகை          கவிபாடும்
வேதாள ஞான கீனன் விதரண
   நாதானி லாத பாவி யநிஜவன்
   வீணாள்ப டாத போத தவமிலி            பசுபாச
வ்யாபார மூடன் யானு முனதிரு
   சீர்பாத தூளி யாகி நரகிடை
   வீழாம லேசு வாமி திருவருள்           புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
   வேதாமு ராரி யோட அடுபடை
   சோரா வலாரி சேனை பொடி பட  மறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
   மாமாய வீர்ர கோர முடனிகல்
   சூர்மாள வேலை யேவும் வயலியி   லிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
   சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
   கோலால நாத கீத மதுகர                மடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
   கானாறு பாயு மேரி வயல்பயில்
   கோனாடு சூழ்வி ராலி மலையுறை        பெருமாளே

பதம் பிரித்தல்

******
வேதாளன் ஞான கீனன் விதரண
நா தான் இலாத பாவியன் அநிஜவன்
வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச

*****
வேதாள(ன்) = பேயன் ஞான கீனன் = ஞானம் குறைந்தவன் விதரண = விவேகமுள்ள நா தான் = நாக்கே இலாத பாவி = இல்லாத பாவி அநிஜவன் = உண்மை இல்லாதவன் வீணாள் படாத = வீணாள் உண்டாகாமல் காக்கும் போதம் = அறிவும் தவம் இலி = தவமும் இல்லாதவன் பசு பாசம் = உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும்.

வியாபார மூடன் யானும் உனது இரு
சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே

வியாபார மூடன் = பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன் யானும் = இத்தகைய குணங்களை உடைய நானும் உனது இரு சீர் = உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாத தூளி ஆகி = பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகு இடை வீழாமல் = நரகில் விழாமல் சுவாமி = சுவாமியே. திரு அருள் புரிவாயே = திருவருள் புரிவாயாக.

தூதாளர் ஓடு காலன் வெருவிட
வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி

தூதாளரோடு = (தன்னுடைய) தூதர்களோடு காலன் வெருவிட = யமன் அஞ்சவும் வேதா = பிரமனும் முராரி = திருமாலும் ஓட  (அஞ்சி) ஓடவும் அடு பாடை = கொல்ல வல்ல சேனை சோர = சோர்ந்து போய் வலாரி சேனை பொடிபட = இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும் மறை வேள்வி = வேத வேள்விகள்.

சோமாசிமார் சிவாய நம என
மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
சோமாசிமார் = சோம யாகம் செய்யும் பெரியோர்கள். சிவாயநம என = பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும் மா மாய = பெரிய மாயங்களும் வீர = வீரமும் கோரமுடன் = கோரமும் பொருந்தி இகல் = போர் செய்த. சூர் மாள = சூரன் இறக்கும்படி வேலை ஏவும் = வேலாயுதத்தைச் செலுத்திய வயலியில் இளையோனே = வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே.

கூதாள நீப நாக மலர் மிசை
சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை

கூதாள = கூதாளப் பூ. நீபம் = கடப்ப மலர். நாக மலர் = சுரபுன்னை மலர் மிசை = இவைகளின் மீது சாதாரி, தேசி, நாமக்ரியை முதல் = சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான கோலாகல = ஆடம்பரமான நாத கீத = ஒலி இசைகளைப் பாடும் மதுகரம் = வண்டுகள் அடர் சோலை = நிறைந்த சோலைகளும்.

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய
கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.

கூர் = நிரம்ப ஆரல் = ஆரல் மீன்களை தேரும் நாரை = தேடும் நாரைகள் மருவிய = பொருந்திய கான் ஆறு = காட்டாறுகள் பாயும் = பாய்கின்ற ஏரி = ஏரிகளும் வயல் = வயல்களும் பயில் = நெருங்கியுள்ள கோனாடு சூழ் = கோனாடு என்னும் நாட்டில் உள்ள விராலி மலை உறை = விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாயிருக்கும் மேரு மலையைப் போல் உயர்ந்த கொங்கைகளை விலை கூறி, இனிய பேச்சுக்களைப் பேசி, காம மோகம் தரும் விலை மாதர்களின் அங்கங்களைப் பல வகைகளில் வர்ணித்துக் கவிகளைப் பாடும் பேயன் நான். ஞானம் குறைந்தவன். விவேகம் இல்லாதவன். பொய்யன். அறமும், தவமும் இல்லாதாவன். பதி ஞானம் சிறிதும் இல்லாதவன். இத்தகைய மூடனாகிய என்னை உனது அழகிய பாதங்களின் தூளியாகும் பேற்றை அளித்து, நான் நரகில் வீழாமல் விழாதவாறு திருவருள் புரிவாயாக.

யமன் அஞ்சவும், பிரமனும், திருமாலும் பயந்து ஓடவும், இந்திரனுடைய படைகள் சோர்ந்து போகவும், சோமயாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதி நிற்கவும், சூரன் மாளவும் வேலாயுதத்தைச் செலுத்திய இளையோனே. கூதாளம், நீபம், நாகம் ஆகிய மலர்களின் மீது, பல வித இராகங்களைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும், ஏரிகளும், வயல்களும் நிறைந்த கோனாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் நரகில் வீழாமல் திருவருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்

சோமாசிமார் சிவான நம என.....
சோமாசிமார் = சோம யாகம் செய்பவர்கள். வேதாகமங்களில் விதித்தவாறு சிவ யாகங்களை நியதியுடன் செய்யும் மறையோர். சோமயாகம் தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.





No comments:

Post a Comment

Your comments needs approval before being published